பிரிட்டனும் நிலவுக்கு விண்கலம் அனுப்புகிறது


இந்தியாவின் சந்திரயான் விண்கலத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரிட்டனும் நிலவுக்கு விண்கலம் அனுப்ப திட்டமிட்டுள்ளது. 2012 லிருந்து 2014 காலகட்டத்தில் செயல்படுத்தப்படவிருக்கும் இத்திட்டத்திற்கான வரைபடங்கள், ஆகும் செலவு பற்றிய திட்ட அறிக்கையை பிரிட்டன் விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் தற்போது தயாரித்து வருகின்றனர். இது முழுமையடைந்தவுடன் முறைப்படியான அறிவிப்பை பிரிட்டனின் அறிவியல் துறை அமைச்சர் லார்டு டிராய்சன் டிசம்பர் மாதத்தில் வெளியிட உள்ளார்.
இத்திட்டத்திற்கு அனுப்பப்படும் விண்கலத்திற்கு மூன்லைட் என்று பெயரிடப்பட்டுள்ளது. இவ்விண்கலம் பூமியைப் போன்று நிலவில் ஏற்படும் நிலவதிர்வுகள், பூகம்பங்கள், நிலவின் மலைகளில் ஏற்படும் அதிர்வுகள் குறித்தும் பிரதானமாக ஆராயும். இதற்கென நான்கு ஆய்வுக் கருவிகள் நிலவின் நான்கு வெவ்வேறு பகுதிகளில் நிலைநிறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் கிடைக்கும் தகவல்கள் பூமியின் பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்றையும், புவியதிர்வுகளுக்கும் நிலவுக்குமான தொடர்பு குறித்துமான ஆய்வுகளுக்கும் பெரிதும் துணை புரியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். Related Posts with Thumbnails

யுஎஸ்பி 3.0

தற்போது புழக்கத்திலுள்ள பல்வேறு தொழில்நுட்ப சாதனங்களை கணினியுடன் இணைக்க பன்னாட்டளவில் உள்ள கணினி வன்பொருள் உற்பத்தி நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியது யுஎஸ்பி தொழில்நுட்பம். இதை இணைப்பாக கொண்ட சாதனங்களை கணினியில் பொருத்தும்போது நாம் கணினியை அணைத்து இயக்க (ரீபூட்) வேண்டியதில்லை. இணைத்தவுடன் செயல்படத் தொடங்கிவிடுவது இதன் சிறப்பம்சமாகும். 1996ல் கண்டுபிடிக்கப்பட்டது இத்தொழில்நுட்பம். யுஎஸ்பி 1.1, 2.0 போன்ற போர்ட் / பிளக்கின் மேம்படுத்தப்பட்ட தயாரிப்பாக கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது யுஎஸ்பி 3.0. இதனை அறிமுகப்படுத்திய யுஎஸ்பி-ஐஎப் (யுஎஸ்பி சாதனங்களுக்கான பன்னாட்டு ஒருங்கிணைப்புக் குழுமம்) யுஎஸ்பி 2.0வை விட 3.0வானது பத்து மடங்கு வேகமாக தகவல்களை கடத்தும் திறன்பெற்றது என்று தெரிவித்துள்ளது. முன்பு வெளிவந்த யுஎஸ்பி 1.1, 25 ஜிபி அளவுள்ள டேட்டாவை கடத்த 9.3 மணிநேரத்தையும், யுஎஸ்பி 2.0வானது 13.9 நிமிடத்தையும் எடுத்துக்கொள்ளும். ஆனால் யுஎஸ்பி 3.0வானது எடுத்துக்கொள்ளும் நேரம் 70 வினாடிகள் மட்டுமே. இது இன்றைய கணினி உலகின் வேகத்தை மேலும் அதிகப்படுத்த பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Posts with Thumbnails

மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தும் சர்பேஸ் கணினி


மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது வழக்கத்தில் உள்ள கணினியை போலல்லாமல் முற்றிலும் மாறுபட்ட வணிக ரீதியிலான சர்பேஸ் என்ற பெயரில் புதிய கணினியை அறிமுகப்படுத்தவிருக்கிறது. இதில் தற்போதைய கணினிகளில் பயன்படுத்தப்படும் கீபோர்டு, மௌஸ் போன்றவை தேவைப்படாது. அதற்குப்பதிலாக 30 இன்ச் அகலமான அதன் திரையிலேயே நம்முடைய கட்டளைகளை தொடுவதன் மூலமாகவும், நம்முடைய அங்க அசைவுகளின் மூலமும் செயல்படுத்தமுடியும். தற்போதிருக்கும் தொடுதிரை கணினிகளில் ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே பயன்படுத்தமுடியும். ஆனால் சர்பேஸ் கணினியை பல நபர்கள் ஒரே நேரத்தில் தொட்டுப் பயன்படுத்தமுடியும். நம்முடைய அங்க அசைவுகளை அறிந்து செயலாற்ற கேமராவும், கணினியை தொடுவது விரலா அல்லது பென்சிலா என்பதை பிரித்தரியக்கூடிய லென்ஸ் ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இன்பிராரெட் கதிர் தொழில்நுட்பமும் இருப்பதால் நம்முடைய கைகள் மேஜைக்கு கீழிருந்தாலும் அசைவுகளை அறிந்து செயலாற்றும் திறன் கொண்டது. அதேபோல இக்கணினியை மேஜை மீது மட்டுமல்ல வீட்டுச் சுவர், கதவுகள் என்று நாம் விரும்பும் எந்த இடத்திலும் எளிதில் பொருத்திக்கொள்ளமுடியும். இக்கணினியின் சிறப்புகளை அறிந்து தற்போது சோதனை அடிப்படையில் தயாரிக்கப்பட்டுவரும் இக்கணினிக்கு அமெரிக்காவில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவுவதாக மைக்ரோசாப்ட் தெரிவிக்கிறது. தற்போது அமெரிக்காவின் பிரபல ஏ.டி.அண்ட் டி., ஹராஹ் என்டர்டெயின்மென்ட், ஸ்டார்பூட் ஹோட்டல்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ், டி மொபைல் போன்ற நிறுவனங்கள் இக்கணினிக்காக முன்பதிவு செய்து காத்திருக்கின்றனவாம். அந்நிறுவங்களுக்கு சப்ளை செய்த பிறகு 3 முதல் 5 ஆண்டுகளில் சர்பேஸ் கணினியை சில்லறை வணிகத்திற்கு கொண்டுவர மைக்ரோசாப்ட் திட்டமிட்டுள்ளது.
Press : http://www.microsoft.com/presspass/presskits/surfacecomputing/default.mspx
Home Page: http://www.microsoft.com/surface/index.html Related Posts with Thumbnails

வலைவிரிக்கும் பில்கேட்ஸ்


மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்திய தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்காக ஒரு புதிய சலுகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பட்ட மேற்படிப்போ, பட்டப்படிப்போ படித்துக்கொண்டிருக்கும் தொழில்நுட்பப்பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது அடையாள அட்டைகளை அருகில் உள்ள அப்டெக், என்.ஐ.ஐ.டி, பியூசன் போன்ற கணினிப் பயிற்சிப் மையங்களில் காண்பித்தால் அவர்களுக்கு மைக்ரோசாப்ட்டின் மென்பொருள்கள் அடங்கிய இலவச டிவிடி வழங்கப்படும்.
அந்த டிவிடியில் விண்டோஸ் சர்வர் 2003, விசுவல் ஸ்டுடியோ 2008, எஸ்க்யூஎல் சர்வர் 2005, மைக்ரோசாப்ட் எக்ஸ்ப்ரசன் ஸ்டுடியோ, விர்ச்சுவல் பிசி ஆகிய மென்பொருள்கள் அடங்கியிருக்கும்.
2009ம் ஆண்டின் ஆரம்ப மாதங்களில் இந்தச்சலுகை 11, 12ம் வகுப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கும் வழங்கப்படவிருப்பதாகத் தெரிகிறது. இதற்கென பிரத்யேக இணையதளம் ஒன்றையும் மைக்ரோசாப்ட், `ட்ரீம்ஸ்பார்க்இண்டியா என்ற பெயரில் துவக்கியுள்ளது. இத்தளத்தின் மூலமும் மேற்கண்ட மென்பொருட்களை பதிவிறக்கம் செய்யமுடியும்.
தற்போது இந்தியா வந்துள்ள பில்கேட்ஸ் பல்வேறு பொதுசேவைத் திட்டங்களை அறிமுகப்படுத்தும் முகமாக இத்திட்டத்தையும் துவக்கியுள்ளார். இது உலக அளவில் மென்பொருள் துறையில் முன்னணி வகிக்கும் இந்தியாவை தன்னுடைய மென்பொருட்களை கற்க வைப்பதன் மூலம் வேறு மாற்று இல்லாத மாயசூழலை மென்பொருள் சந்தையில் உருவாக்கி அதன் மூலம் மைக்ரோசாப்ட்டை மேலும் பலப்படுத்தும் ஏற்பாடாகவே இதை பார்க்கமுடிகிறது. உலக அளவில் பல்வேறு நாடுகளும் ஓப்பன் சோர்சுக்கு மாறிக்கொண்டிருக்கும் சூழலில் மைக்ரோசாப்ட்டின் இந்த சலுகைத் திட்டம் இந்தியாவில் ஓப்பன் சோர்ஸை முடக்கிவைக்கும் முயற்சியே என்று இந்திய தொழில்நுட்ப வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். Related Posts with Thumbnails

wibiya widget