யுஎஸ்பி 3.0

தற்போது புழக்கத்திலுள்ள பல்வேறு தொழில்நுட்ப சாதனங்களை கணினியுடன் இணைக்க பன்னாட்டளவில் உள்ள கணினி வன்பொருள் உற்பத்தி நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியது யுஎஸ்பி தொழில்நுட்பம். இதை இணைப்பாக கொண்ட சாதனங்களை கணினியில் பொருத்தும்போது நாம் கணினியை அணைத்து இயக்க (ரீபூட்) வேண்டியதில்லை. இணைத்தவுடன் செயல்படத் தொடங்கிவிடுவது இதன் சிறப்பம்சமாகும். 1996ல் கண்டுபிடிக்கப்பட்டது இத்தொழில்நுட்பம். யுஎஸ்பி 1.1, 2.0 போன்ற போர்ட் / பிளக்கின் மேம்படுத்தப்பட்ட தயாரிப்பாக கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது யுஎஸ்பி 3.0. இதனை அறிமுகப்படுத்திய யுஎஸ்பி-ஐஎப் (யுஎஸ்பி சாதனங்களுக்கான பன்னாட்டு ஒருங்கிணைப்புக் குழுமம்) யுஎஸ்பி 2.0வை விட 3.0வானது பத்து மடங்கு வேகமாக தகவல்களை கடத்தும் திறன்பெற்றது என்று தெரிவித்துள்ளது. முன்பு வெளிவந்த யுஎஸ்பி 1.1, 25 ஜிபி அளவுள்ள டேட்டாவை கடத்த 9.3 மணிநேரத்தையும், யுஎஸ்பி 2.0வானது 13.9 நிமிடத்தையும் எடுத்துக்கொள்ளும். ஆனால் யுஎஸ்பி 3.0வானது எடுத்துக்கொள்ளும் நேரம் 70 வினாடிகள் மட்டுமே. இது இன்றைய கணினி உலகின் வேகத்தை மேலும் அதிகப்படுத்த பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Posts with Thumbnails

4 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:

Muralidharan said...

Useful info, thanks

யூர்கன் க்ருகியர் said...

நல்ல தகவல்

அசோக் said...

நல்ல தகவல்..........நன்றி

Anonymous said...

when i can buy this
:D :D :D

wibiya widget