தேர்தல் நடைமுறைகள் - 04

  • அஞ்சல் வழி வாக்குகள் அளிக்க யாருக்கு தகுதி உண்டு?
    சிறப்பு வாக்காளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளோர்,தேர்தல் பணிக்கு அமர்த்தப்பட்டவர்கள், தடுப்பு காவலில் வைக்கப்பட்டவர்கள் ஆகியோர் விதி முறைக்கு உட்பட்டு சில நிபந்தனைகளின் அடிப்படையில் அஞ்சல் வழியாக வாக்களிக்க முடியம்.
  • யார் பதிலாள் வாக்கை செலுத்த இயலும்?
    ஆயுதப் படையில் பணியாற்றுபவர்கள், ராணுவச் சட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்ட படைப்பிரிவினர் போன்ற பணியில் ஈடுபட்டுள்ள வாக்காளர்களுக்கு அஞ்சல் வழி வாக்கிற்கு பதிலாக இந்த வசதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பதிலாள் வாக்களிப்புமுறையிலோ அல்லது அஞ்சல் வழி வாக்களிப்பையோ தெரிவு செய்து கொள்ளலாம்.
  • நுண்நிலை பார்வையாளர்கள் என்றால் என்ன?
    ஒரு மாவட்டத்தில் பணியாற்றும் மத்தியஅரசு அல்லது மைய அரசு பொதுத் துறை நிறுவனங்களின் அதிகாரி அல்லது அலுவலர்கள் நுண்நிலை பார்வையாள ராக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் ஒரு வளாகத்திலோ அல்லது கட்டிடத்திலோ அமைந்துள்ள வாக்குச் சாவடி அல்லது வாக்குச்சாவடிகளை கண்காணிக்கும் அலுவலராக செயல்படுகிறார்கள். இந்தியத் தேர்தல் ஆணைய பார்வையாளர்களின் நேரடி கட்டுபாடு மற்றும் கண்காணிப்பில் இவர்கள் செயல்படுகிறார்கள்.
  • நுண்நிலை பார்வையாளர்களை நியமிப்பதற்கான வரைமுறை என்ன? வாக்காளர்களை பாதிப்புக்கு உட் படுத்தும் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் வாக்குச்சாவடிகள் இனம் கண்டறியப்பட்டு நுண்நிலை பார்வையாளர்களின் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
  • வாக்குப்பதிவு தினத்தன்று நுண் நிலை பார்வையாளர்களின் பணிகள் என்ன?
    நுண்நிலை பார்வையாளர்கள் கீழ் கண்ட பணிகளில் கவனம் செலுத்துவர்.
    1. ஒத்திகை தேர்தல் நடைமுறை
    2. சாவடிகளில் வேட்பாளரின் பிரிதிநிதி களின் இருப்பை கண்காணிப்பது. இவர்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை செயல்படுத்துவது.
    3. நுழைவு அனுமதி சீட்டு முறை மை மற்றும் வாக்கு சாவடிகளுக்கு செல்லுபவரை கண்காணிப்பது.
    4. தேர்தல் ஆணையத்தின் நெறிமுறை களுக்கு ஏற்ப வாக்காளர்களை சரியான முறையில் கண்டறிதல்.
    5. வராத வாக்காளர் இடம் பெயர்ந்த வர்கள் மற்றும் நகல் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்ட இடங்களில் அவற்றை கண்டறிந்து அதற்கான நடைமுறைகளை பதிவு செய்தல்.
    6. அழியாத மை பயன்பாடு
    7. வாக்காளர் பற்றிய விவரங்களை பதிவேட்டில் 17 எ படிவத்தில் குறித்து வைத்தல்.
    8. வாக்களித்த பின் ரகசியத்தை பராமரித்தல்.
    9. வாக்குப்பதிவு முகவர்களின் செயல் பாடு மற்றும் புகார்களை கவனிப்பது. ஏதோ ஒரு காரணத்தினால் நியாயமான வாக்கு பதிவுக்கு இடையூறு ஏற்படுகிறது என்று நுண்நிலை பார்வையாளர் கருதுவா ரேயானால் அதை நீக்கஅவர் உடனடி யாக இந்த நிகழ்வை அந்தந்த தொகுதி யின் பார்வையாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுவார்.
  • ஒரு வேட்பாளர் தமது தேர்தலுக்கு விருப்பம் போல் செலவழிக்க முடியுமா?
    முடியாது. ஒரு வேட்பாளர் தமது தேர்தலுக்கு விருப்பம் போல செலவழிக்க இயலாது. மொத்த தேர்தல் செலவு அந்த குறிப்பிட்ட தொகுதிக்கு நிர்ணயிக்கப்பட்ட உயர்ந்தபட்ச அளவை மிஞ்ச கூடாது என்று விதிமுறைகள் கூறுகின்றன.
  • உத்தர பிரதேசம், பீகார், ஆந்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் செலவின் உயர்ந்த அளவு எவ்வளவு?
    தேர்தல் செலவு வரையறை அவ்வப்போது மறு மதிப்பீடு செய்யப்படுகிறது. உத்தர பிரதேசம்., பீகார், ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ள உயர்ந்தபட்ச செலவின் அளவு ரூ.25 லட்சமாகும்.
  • இது மாதிரியான பெரிய மாநிலங்களில் சட்டப்பேரவை தொகுதிக்கு அனுமதிக்கப்பட்டுள்ள செலவு தொகை எவ்வளவு?
    இது மாதிரியான பெரிய மாநிலங் களில் ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள செலவு தொகை ரூ. 10 லட்சம்.
  • எல்லா மாநிலங்களிலும் இந்த வரையறை ஒரே மாதிரியானவையா? இல்லையென்றால் நாடாளுமன்ற தொகுதிக்கு இப்போது இருக்கும் குறைந்த அளவு செலவு தொகை எவ்வளவு?
    இல்லை, தேர்தல் செலவிற்கான உயர்ந்த அளவு மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, தாமன் மற்றும் டையூ லட்சத்தீவு போன்ற நாடாளுமன்ற தொகுதிக்கு இப்போது இருக்கும் குறைந்த அளவு செலவு தொகை ரூ. 10 லட்சம்.
Related Posts with Thumbnails

தேர்தல் நடைமுறைகள் - 03

  • மாவட்டத் தேர்தல் அதிகாரி தேர்தல் அதிகாரியிடமிருந்து அனுமதி பெறாமல் ஊர் தியை தேர்தல் பணிக்காக பயன்படுத்த முடியுமா?
    முடியாது. இந்த மாதிரி ஊர்திகள் அங்கீகரிக்கப்படாதவைகளாகவே கொள்ளப்பட்டு இந்திய தண்டனை சட்டப்பிரிவின் ஐஓ எ பிரிவின் கீழ் தண்டனைப்பெறத் தக்கதாகி விடும். பிரச்சார பணியிலிருந்து விலக்கப் படும்.
  • சம்பந்தப்பட்ட கட்சி அல்லது வேட்பாள ரின் சுவரொட்டி, விளம்பர அட்டை, பதாகை, வேட்பாளரின் கொடி போன்ற வற்றை ஊர்வலத்தின்போதும், வேட்பாள ரின் ஊர்திகளில் கட்டிச்செல்லும்போதும் ஏதேனும் கட்டுப்பாடு உண்டா?
    விளம்பர சுவரொட்டி, அட்டை, பதாகை போன்றவற்றை ஊர்வலத்தின்போது வேட்பாளரின் ஊர்திகளில் வைத்துக் கொண்டு செல்லலாம்.
  • பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்படும் ஊர்திகளின் வெளிப்புறங்களில் புதியவற்றை இணைப்பதற்கும், மாற்றி அமைப்பதற்கும் அனுமதிக்கப்படுமா?
    ஒலிபெருக்கி போன்ற வெளிப்புற இணைப்புகளைப் பொருத்துவதற்கும், மாற்று அமைப்பை ஏற்படுத்துவதற்கும் மோட்டார் வாகனச் சட்டம் விதிமுறைக்கு ஏற்பவும், உள் ளூர் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்பவும் அனும திக்கப்படும். வீடியோ ரதம் போன்ற சிறப்பு பிரச்சார வாகனங்கள் மாற்றி அமைக்கப்பட்ட ஊர்திகள் போன்றவற்றிற்கு உரிய அதிகாரி யிடமிருந்து தேவையான முன் அனுமதியைப் பெற்ற பிறகு பயன்படுத்தலாம்.
  • கட்சியோ வேட்பாளரோ தற்காலிக அலு வலகங்களை அமைத்து செயல்படுவதற்கு நிபந்தனைகள் அல்லது வழிகாட்டு நெறி முறைகள் ஏதேனும் உண்டா?
    உண்டு. இந்த மாதிரி அலுவலகங்கள் தனியார் அல்லது பொது இடங்களை ஆக் கிரமித்து அமைக்கப்படக் கூடாது. மத சம்பந் தப்பட்ட இடங்களிலேயோ அல்லது அதன் தொடர்பாக வளாகங்கள், கல்வி நிலையங்கள் அல்லது மருத்துவ மனைகளை ஒட்டிய இடங்கள் தற்போது இருக்கும் வாக்குச் சாவடிக்கு 200 மீட்டருக்கு உட்பட்ட இடங்கள் ஆகியவற்றில் இவை அமைக்கப்படக் கூடாது. மேலும் இந்த அலுவலகங்களில் ஒரே ஒரு கட்சிக் கொடி, கட்சியின் சின்னம், புகைப் படங்களுடன் கூடிய பதாகை போன்ற வற்றைத்தான் காட்சிக்காக வைக்கலாம். இந்த அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் பதாகையின் அளவு 40ஓ30 மிகாமல் இருக்க வேண்டும். எனினும் இந்த அளவு உள்ளூர் விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் இருக்க வேண்டும். உள்ளூர் விதிமுறைகளின்படி பதாகை அல்லதுவிளம்பரத் தட்டி போன்றவற்றின் அளவு குறைவாக இருக்க வேண்டுமென்றால், இந்த விதிமுறைகளே நடைமுறைப்படுத்தப்படும்.
  • பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் போன் றவற்றை எதுவரை நடத்தலாம்?
    வாக்குப்பதிவு முடிவடைய நிர்ண யிக்கப்பட்டு இருக்கும் நேரத்துடன் முடிவடை யும் 48 மணி நேரம் முன்பு வரை கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களை நடத்தலாம்.
  • பிரச்சார நேரம் முடிவடைந்த பின், அர சியல் கட்சி பிரமுகர்கள் அந்தத் தொகுதியில் இருப்பது குறித்து ஏதேனும் கட்டுப்பாடு உண்டா?
    உண்டு. அந்தத் தொகுதியில் வாக்காளராக இல் லாது வெளியிடங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் போன்றவர்கள் பிரச்சார நேரம் முடிவடைந்த பின் அந்தத் தொகுதியில் தொடர்ந்து இருக்கக் கூடாது. இத்தகையவர்கள் பிரச்சாரம் முடி வடைந்த உடனேயே அந்தத் தொகுதி யிலிருந்து வெளியே சென்றுவிட வேண்டும்.
  • ஒரு மாநிலத்தில் தேர்தல் பொறுப்பாளராக இருக்கும் ஒரு அரசியல் கட்சியின் நிர்வாகிக்கும் இந்த மாதிரி நிபந்தனைகள் பொருந்துமா?
    ஆமாம். ஆனால் நாடாளுமன்ற மக்களவை / சட்டப்பேரவைக்கு பொதுத்தேர்தல் நடைபெறும்போது, ஒரு மாநிலத்தின் பொறுப்பாளராக இருக்கும் கட்சி நிர்வாகியைப் பொறுத்தவரை இந்த நிபந்தனை வலி யுறுத்தப்படுவதில்லை. இத்தகைய நிர்வாகிகள், மாநிலத்தின் தலைமையகத்தில் தாங்கள் தங்கியிருக்கும் இடத்தை அறிவிக்க வேண்டும். இந்தக் குறிப்பிட்ட கால அவ காசத்தின்போது இவர்களது நடமாட்டம் அல் லது போக்குவரத்து அவர்களது கட்சி அலு வலகத்திற்கும், தங்கும் இடத்திற்கும் இடை யிலானதாகவே இருக்கும். மேற்கூறிய இந்தக் கட்டுப்பாடு மற்ற எல்லா அலுவலர்களுக்கும் எல்லாத் தேர்தல்களிலும் பொருந்தும்.
  • தேர்தல் நடைமுறையின்போது முக்கியமான நிகழ்வுகளை வீடியோ படமெடுக்க ஏதேனும் ஏற்பாடுகள் உண்டா?
    உண்டு. ஒரு தொகுதியில் நடைபெறும் அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தேசிய மற்றும் மாநிலத் தலைவர்கள் கலந்து கொள் ளும் பொதுக்கூட்டங்கள், உரையாற்றும் நிகழ் வுகள், வன்முறைச் சம்பவங்கள் போன்றவற்றை பதிவு செய்யவும் வீடியோ படமெடுக்கவும் வீடி யோ குழுக்கள் அமைக்கப்படும்.
  • பிரச்சாரத்தின்போது தொப்பி, முகமூடி, துண்டு, வண்ணக் கைக்குட்டைகள் போன் றவற்றை அணிவது அனுமதிக்கப்பட்டுள்ளதா?
    ஆமாம். அனுமதிக்கப்பட்டுள்ளது. எனி னும், சேலை, சட்டை போன்ற முக்கிய ஆடை களை கட்சியோ வேட்பாளரோ வழங்குவதும் விநியோகிப்பதும் அனுமதிக்கப்படமாட்டாது. இத்தகைய செயல்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் கையூட்டாகக் கருதப்படும்.
  • ஒரு பகுதியில் அரசியல் கட்சி உதவி மையமொன்றை அமைக்க முடி யாவிட்டாலோ இல்லை விருப்பப்படா மலோ இருந்தால் வாக்காளர் பட்டிய லில் தனது பெயரை கண்டறிய வாக்கா ளருக்கு உதவி ஏதேனும் உண்டா?
    உண்டு. 3 அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குச் சாவடிகளைக் கொண்ட பகுதியில் ஒரு வளாகத்திலோ அல்லது கட்டிடத்திலோ வாக்காளர் உதவி மையம் எல்லோரும் தெரியும் வகையில் அமைக்கப்படும். மையத்தில் அலுவலர்கள் குழுவொன்று பணியாற்றும். அகர வரிசையில் தயாரிக் கப்பட்ட வாக்காளர் பட்டியல்கள் இருக்கும். வாக்காளர் பட்டியலில் ஒருவருடைய வரிசை எண். செல்ல வேண்டிய வாக்குச் சாவடி போன்ற விவரங்களை வாக்காளர் கள் தெரிந்து கொள்ளலாம். அரசியல் கட்சிகள் உதவி மையம் அமைக்க முடியாத நிலையை முன்கூட்டியே தெரிவித்தால் மாவட்ட தேர்தல் அதிகாரி இது போன்ற ஏற்பாடுகளை மற்ற இடங்களிலும் அமைப்பது குறித்து பரிசீலிப்பர்.
  • வாக்குப்பதிவு தினத்தன்று வாக்குச் சாவடிக்கு அருகில் ஒரு வேட்பாளரே அல்லது அரசியல் கட்சிகளோ உதவி மையங்களை அமைப்பதற்கு வழிகாட்டி நெறிகள் ஏதேனும் உண்டா?
    உதவி மையத்தை வாக்குச் சாவடியில் 200 மீட்டருக்கு அப்பால் அமைக்கலாம். இம்மையத்தில் ஒரு மேசை 2 நாற்காலி தான் அனுமதிக்கப்படும். இதில் பணி யாற்றும் இருவருக்கும் நிழல் தரும் வகை யில் ஒரு குடையோ அல்லது தார்பாலின் அல்லது துணி கூரையோ இருக்கலாம். வேட்பாளர் பெயர், கட்சி தேர்தல் சின்னம் போன்றவற்றை எடுத்துக் காட்டும் 3/4/ 1/2 அளவிலான ஒரு பதாகையும் அனுமதிக் கப்படும் . இம்மையத்தில் கூட்டம் சேருவ தற்கு அனுமதிக்கப்படமாட்டாது.
  • தேர்தல் உதவி மையங்களை அமைக்க சம்பந்தப்பட்ட அரசு அலுவ லர் அல்லது உள்ளூர் அதிகாரிகளின் எழுத்துப்பூர்வ அனுமதியை பெற வேண்டியது அவசியமா?
    ஆம், இதைப் போன்ற உதவி மையங் களை அமைக்கும் முன் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் அல்லது உள்ளூர் அதிகாரி களின் எழுத்துப்பூர்வ அனுமதியை பெற வேண்டியது அவசியமாகும். காவல் துறையினரோ சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியோ கேட்கும் பொழுது காண்பிப் பதற்காக எழுத்துப்பூர்வ அனுமதி இம்மை யங்களில் பணியாற்றுபவர்களிடம் இருக்க வேண்டும்.
  • வெளியீடுகள், சுவரொட்டிகள் போன்றவற்றை அச்சிடுவதில் ஏதே னும் கட்டுப்பாடு உண்டா?
    உண்டு. தேர்தல் வெளியீடுகள் சுவரொட்டிகள் போன்ற வற்றில் அச்சிடு பவர்கள் மற்றும் வெளியிடுபவரின் பெயர் விலாசம் இல்லாமல் அச்சிடவோ வெளியிடவோ கூடாது.
  • வாக்குச்சாவடிக்கு அருகில் வாக்கு கோருவதை மேற்கொள்வதில் ஏதேனும் கட்டுப்பாடு உண்டா?
    உண்டு. வாக்கு பதிவு தினத்தன்று வாக்குச் சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவிற்குள் வாக்கு கோருவது தடை செய்யப்பட்டுள்ளது.
  • வாக்குச்சாவடிக்கோ அல்லது அதற்கு அருகாமையிலோ ஆயுதம் தாங்கிச் செல்வதில் ஏதேனும் கட்டுப் பாடு உண்டா?
    ஆம், வாக்குப் பதிவு தினத்தன்று 1959 ஆம் ஆண்டு ஆயுதச்சட்டம் வரையறை செய்துள்ளபடி எத்தகைய ஆயுதத்தையும் எடுத்துக் கொண்டு வாக்குச்சாவடிக்கு அருகில் செல்ல ஒருவரும் அனுமதிக்கப் படமாட்டார்கள்.
Related Posts with Thumbnails

தேர்தல் நடைமுறைகள் - 02


  • வேட்பாளர் ஒருவர், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் முன்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டியதோ அல்லது வாக்குறுதி அளிப்பதோ அவசியமா?
    ஆமாம்.
  • வேட்பாளர் ஒருவர் உறுதிமொழி எடுத்துக் கொள்ளவோ அல்லது வாக்குறுதி அளிப்பதற்கோ தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்கள் யார்?
    எந்த ஒரு குறிப்பிட்ட தேர்தலுக்கும் முதன்மையாக அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்கள் அந்தத் தொகுதிக் கான தேர்தல் அதிகாரி மற்றும் துணைத் தலைவர் அதி காரியாவார். சிறையில் அடைக்கப்பட்ட அல்லது முன் னெச்சரிக்கை காவலில் வைக்கப்பட்டவர்களைப் பொ றுத்தவரை சிறை கண்காணிப்பு அலுவலரோ அல்லது காவல் முகாமின் தலைமை அலுவலரோ உறுதிமொழி செய்துவைக்க அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்கள் ஆவார்கள். உடல் நலக்குறைவாலோ அல்லது மற்ற காரணங்களுக்காகவோ மருத்துவமனையிலோ அல் லது வேறெங்கிலும் இருந்து சிகிச்சை பெற்று வருபவர் களைப் பொறுத்தவரை அந்த மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர்கள் அல்லது அவர் களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் இதற் கான அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் வெளிநாட்டில் இருந்தால், இந்திய தூதர் அல்லது ஹை கமிஷனர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ராஜீய பிர திநிதி ஆகியோருக்கும் உறுதிமொழியை செய்துவைக்க அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
  • வேட்பாளர் எப்போது உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வேண்டும்?
    வேட்பாளர் தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்த உடனேயே நேரில் வந்து உறுதி மொழியை எடுத்துக் கொள்ள வேண்டும். எவ்வாறாகினும் வேட்பு மனுத் தாக்கல் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் நாளுக்கு முந்தைய நாளே உறுதிமொழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.
  • போட்டியிடும் வேட்பாளர்களுக்கு யார் தேர்தல் சின்னங்களை ஒதுக்கீடு செய்கிறார்?
    தேர்தல் அதிகாரி.
  • ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னம் எவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட தேசிய அல்லது மாநில கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது?
    ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னத்தைப் பெறுவதற்கு வேட்பாளர் தமது வேட்பு மனுவில், சம்பந்தப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சியால் நிறுத்தப்படும் வேட் பாளர் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டும். மேலும் அந்தக் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகியிடமிருந்து தாம்தான் கட்சியால் நிறுத்தப் படும் வேட்பாளர் என்பதைத் தெரிவிக்கும் பி படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். பி படிவத்தில் தெரிவிக் கப்பட்டுள்ள அறிவிப்பை ஒப்புக் கொண்டு கட்சி அலு வலர் ஒப்பமிட்டுத்தர வேண்டும். இந்த அலுவலரின் மாதிரி கையொப்பம் எ படிவத்தின் மூலம் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் அதி காரிக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். இந்த இரண்டு படிவங்களும், வேட்பு மனுத்தாக்கலுக்கான கடைசி தினத்தில் பிற்பகல் 3 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
  • அரசியல் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட அலுவல ரின் பெயர், கையொப்பம், ரப்பர் முத்திரை போன்ற வற்றுடன் A மற்றும் B படிவங்களை ஒரு வேட் பாளர் தாக்கல் செய்ய முடியுமா?
    முடியும். A மற்றும் B படிவங்களில் அரசியல் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட அலுவல நிர்வாகி மையால் கையொப்பமிட்டு இருக்க வேண்டும்.
  • பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியின் வேட்பாளர் அல்லது சுயேட்சை வேட்பாளர், ஒதுக்கப்படாத சின்னங்கள் பட்டியலில் கொடுக்கப்பட்டிருக்கும் சின்னங்களில் ஒன்றைத் தெரிவு செய்து கொள்ள முடியுமா?
    முடியும். இதற்கு இந்த வேட்பாளர் பட்டியலில் குறிப்பிட்டுள்ள சின்னங்களில் 3-தெரிவு செய்து அவற் றின் முன்னுரிமையைத் தெரிவித்து தமது வேட்பு மனுவில் குறிப்பிட வேண்டும்.
  • பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியால் நிறுத்தப்படும் வேட்பாளர் A மற்றும் B படிவங்களை மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் அதிகாரிக்கு சமர்ப்பிக்க வேண்டியது அவசியமா?
    ஆமாம்.
  • தேர்தல் பணிக்காக வாகனங்களைப் பயன்படுத் துவதில் ஏதேனும் கட்டுப்பாடு உண்டா?
    கிடையாது. எத்தனை வாகனங்களை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். (இயந்திரத்தால் அல்லது மோட்டாரால் இயங்கும் ஊர்தி மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள்) ஆனால் இத்தகைய வாகனங்களை இயக்குவதற்கு தேர்தல் அதிகாரியின் முன் அனுமதியைப் பெற்று அந்த அனுமதிக் கடிதம் (அசல் கடிதம், நகல் அல்ல) வாகனங்களின் முன்புறக் கண்ணாடியில் தெளிவாகத் தெரியும்படி ஒட்டப்பட வேண் டும். இந்த ஒப்புதல் கடிதத்தில் ஊர்தியின் எண், எந்த வேட்பாளருக்காக பயன்படுத்தப்படுகிறதோ அவர் பெயர் போன்ற விவரங்கள் தெரிவிக்கப்பட்டு இருக்க வேண்டும். இதற்காகும் செலவு அந்த வேட்பாளரின் கணக்கில் கொள்ளப்படும்.
Related Posts with Thumbnails

இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான்


நம்முடைய சொந்த தயாரிப்பு மென்பொருள்கள், படங்கள், எம்பி3 கோப்புகள் போன்றவற்றை இணையத்தில் பகிர்ந்துகொள்ள இடமளிக்கும் பல டவுன்லோட் சர்வர்களை நாம் பயன்படுத்துகிறோம். நம்முடைய கோப்புகளை பொதுவாக ஒரு சர்வரில் வைப்பதைவிட இரண்டு மூன்று சர்வரில் போட்டுவைத்தால் தேவலை என்று எண்ணுவோம். ஆனால் நமக்கு இணைய வேகமும் நேரமும் ஒத்துழைப்பதில்லை. அதேபோல இவற்றில் பணம் செலுத்தி உறுப்பினரானால் மட்டுமே அடுத்தடுத்த கோப்புகளையோ, ஒரே நேரத்தில் பல கோப்புகளையோ டவுன்லோட் செய்யமுடியும். இலவசம் என்றால் சிறிது நேரம் காத்திருக்கவேண்டும். அப்படியில்லாமல் ஒரே கோப்பு பல சர்வர்களில் இருந்தால் ஒரே சமயத்தில் நமக்கு சாதகமான சர்வரில் டவுன்லோடு செய்துகொள்ளமுடியுமே என்று பலரும் எதிர்பார்க்கிறோம். இதற்கென்று ஒரு இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் அப்லோடு செய்ய விரும்பும் பைல் அல்லது ஏற்கனவே உள்ள பகிர்ந்துகொள்ளப்பட்ட இணையதளத்தின் முகவரியை கொடுத்தால் போதும். தானாகவே ஒரே சமயத்தில் ரேப்பிட்சேர்
, டெபாசிட் பைல், சென்ட்ஸ்பேஸ் (Send Space), மெகா அப்லோட் (Mega Upload), ஈஸிசேர்(, பைல் பேக்டரி (File Factory), நெட்லோட் (Net Load) மீடியா பைர் (Media Fire), மெகா சேர் (Mega Share), ஜிப்பி சேர் (Zippi Share), டூ சேர்டு (Twoshared), இசட் சேர் (ZShare), பிளை அப்லோட் போன்ற பல்வேறு தளங்களில் உங்களுக்கு வேண்டிய 7 தளங்களை மட்டும் தேர்வு செய்தபின் உங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுத்துவிட்டு பைலை அப்லோட் செய்துகொள்ளலாம். டவுன்லோட் லிங்க்கை உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைத்துவிடும்.
இந்த புதிய சேவையை இந்த முகவரியிலிருந்து பெறலாம்.
http://mirrorcreator.com/index.php Related Posts with Thumbnails

தேர்தல் நடைமுறைகள் - 01

  • நாடாளுமன்ற மக்களவை அல்லது சட்டப்பேரவைத் தேர்தலில் ஒருவர் போட் டியிட குறைந்தபட்ச வயது என்னவாக இருக்க வேண்டும்?
    வேட்புமனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள் ளப்படும் நாளன்று ஒருவருக்கு வயது குறைந்தது 25 ஆண்டுகளாக இருக்க வேண்டும்.
  • ஒரு தொகுதியிலும் வாக்காளராகப் பதிவாக செய்து கொள்ளாத ஒருவர் தேர் தலில் போட்டியிட முடியுமா?
    முடியாது. தேர்தலில் போட்டியிட நடைமுறையில் உள்ள வாக்காளர் பட்டியலில் வாக்காள ராகப் பதிவு செய்து கொண்டு இருக்க வேண்டும்.
  • ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் வாக்காளராக பதிவு செய்து கொண்டுள்ள ஒருவர் நாடாளுமன்றத் தேர் தலில் வேறொரு மாநிலத்தில் இருந்து போட்டியிட முடியுமா?
    முடியும். ஆனால், அஸாமின் தன்னாட்சி உரிமை பெற்ற மாவட்டங்கள், லட்சத் தீவுகள், சிக்கிம் ஆகிய தொகுதிகளிலிருந்து போட்டியிட முடியாது.
  • ஒருவர் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் ஷெட்யூல்டு வகுப்பு பிரிவைச் சேர்ந்தவராக இருந்தால், மற்றொரு மாநிலத்தில் ஷெட்யூல்டு வகுப்பினருக்காக ஒதுக் கப்பட்ட தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட முடியுமா?
    முடியும். ஒரு மாநிலத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந் தவராக இருப்பவர் மற்றொரு மாநிலத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு பழங்குடியினருக்காக ஒதுக் கப்பட்ட தொகுதியிலிருந்து போட்டியிடலாமா? முடியும். ஆனால் லட்சத்தீவுகள், அஸாமின் தன் னாட்சி உரிமைபெற்ற மாவட்டங்கள் அஸாமின் பழங்குடியினர் பகுதிகளில் போட்டியிட முடியாது.
  • ஒரு மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர், மற்றொரு மாநில சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து போட்டியிடலாமா? முடியாது. ஒரு மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர், மற்றொரு மாநில பழங்குடியின உறுப்பினர், அவர் வாக்காளராக உள்ள மாநில சட்டப்பேரவைக்கு பழங்குடியினத்தவருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியிலிருந்து போட்டியிடலாமா?
    முடியாது.
  • ஷெட்யூல்டு வகுப்பையோ அல்லது பழங்குடியினர் சமூகத்தையோ சேர்ந்தவராக உள்ள ஒருவர் பொதுத் தொகுதியிலிருந்து போட்டியிட முடியுமா?
    முடியும்.
  • ஏதோ ஒரு குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டு இரண்டு ஆண்டு கால சிறைத் தண்டனை பெற்றவர் தேர்தலில் போட்டியிட முடியுமா?
    முடியாது.
  • ஒருவேளை அந்த நபரின் மேல்முறையீடு பைசல் செய்யப்படாத நிலையில் அவர் ஜாமீனில் இருந்தால் தேர்தலில் போட்டியிட முடியுமா?
    முடியாது. ஒருவர் தண்டனை பெற்ற பிறகு ஜாமீனில் இருந் தாலும், அவரது மேல் முறையீடு பைசல் செய்யப் படாது இருந்தாலும் உச்சநீதி மன்றத்தின் முடிவுப்படி அவர் தேர்தலில் போட்டியிடத் தகுதி இல்லாதவர் ஆவார். ஆனால், அவர் தண்டனை நிறுத்திவைக் கப்பட்டு இருந்தால் அவர் போட்டியிட முடியும்.
  • ஒருவர் சிறையில் இருந்தால் தேர்தலில் வாக்களிக்க முடியுமா?
    முடியாது. இத்தகையவர்கள் சிறையில் இருந்தால் அவர்கள் எந்த தேர்தலிலும் வாக்களிக்க முடியாது. சிறைத்தண்டனை பெற்று சிறையில் இருந்தாலும் ஓரி டத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல் லப்படும்போது காவல்துறையின் சட்டப்பூர்வ காவ லில் இருந்தாலும் அவர் வாக்களிக்க முடியாது.
  • ஒருவர் ஏதாவது ஒரு சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில்
    வைக்கப்பட்டிருந்தால், தேர்தலில் வாக்களிக்க முடியுமா?
    முடியும். அவர் அஞ்சல் வாக்குச்சீட்டு மூலம் வாக்க ளிக்க முடியும்.
  • ஒவ்வொரு வேட்பாளரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு எவ்வளவு தொகை செலுத்த வேண்டும்?
    ரூ.10 ஆயிரம்.
  • நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஷெட்யூல்டு வகுப்பினர் அல்லது பழங்குடியினருக்கு இந்தப் பிணையத் தொகையில் ஏதேனும் சலுகை அளிக்கப்படுமா?
    ஆமாம், இந்தத் தொகை ரூ.5 ஆயிரம் ஆகும்.
  • சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்குச் செலுத்த வேண்டிய பிணையத் தொகை எவ்வளவு?
    ரூ. 5 ஆயிரம்.
  • சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் ஷெட் யூல்டு வகுப்பு அல்லது பழங்குடி இனத்தைச் சேர்ந் தவருக்கு பிணையத் தொகையில் சலுகை ஏதேனும் உண்டா?
    ஆம், இது ரூ.2500 ஆக இருக்கும்.
  • ஒருவர் ஷெட்யூல்டு வகுப்பையோ அல்லது பழங் குடி இனத்தவராகவோ இருந்து பொதுத் தொகுதி யிலிருந்து போட்டியிட்டால், நாடாளுமன்றத் தேர் தலுக்கு அல்லது சட்டப்பேரவைத் தேர்தலுக்கு செலுத்த வேண்டிய பிணையத் தொகை எவ்வளவு?
    நாடாளுமன்றத் தொகுதிக்கு இந்தத் தொகை ரூ.5000, சட்டப்பேரவைத் தொகுதிக்கு ரூ.2500.
  • எந்த வேட்பாளர் பிணையத் தொகையை இழக் கிறார்?
    ஒரு தொகுதியில் பதிவான செல்லத்தக்க வாக்கு களில் 6ல் ஒரு பங்கை பெறத் தவறும் வேட்பாளர் பிணையத் தொகை இழப்பார்.
  • அங்கீகரிக்கப்பட்ட தேசிய அல்லது மாநில கட்சியின் வேட்பாளராக இருப்பவரின் வேட்பு மனுவை எத்தனைபேர் முன் மொழிய வேண்டும்?
    ஒருவர்போதும்,
  • ஒருவர் சுயேட்சை வேட்பாளராகவோ அல்லது பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியைத் சேர்ந்தவராகவோ இருந்தால் வேட்புமனு வை எத்தனை பேர் முன்மொழிய வேண்டும்?
    பத்து பேர்.
  • நாடாளுமன்றத்திற்கோ சட்டப்பேரவைக்கோ ஒருவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு எத்தனைத் தொகுதியிலிருந்தும் போட்டியிட முடியுமா?
    முடியாது. பொதுத்தேர்தலில் நாடாளுமன்றத் திற்கோ அல்லது சட்டப்பேரவைக்கோ 2க்கும் மேற் பட்ட தொகுதியிலிருந்தும் போட்டியிட முடியாது.
  • அதே சமயத்தில் இந்த இரு அவைகளில் ஏதேனும் ஒன்றிற்கு நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கும் இதே கட்டுப்பாடு உண்டா?
    ஆமாம், தேர்தல் ஆணையம் ஒரே சமயத்தில் இடைத்தேர்தல்களை நடத்தினால், ஒரே அவைக்கு நடைபெறும் இடைத் தேர்தல்களில் இரண்டுக்கு மேற் பட்ட இடங்களில் ஒருவர் போட்டியிட முடியாது.
  • அதேசமயத்தில் இந்த இரு அவைகளில் ஏதேனும் ஒன்றிற்கு நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டி யிடுவதற்கும் இதே கட்டுப்பாடு உண்டா?
    ஆமாம், தேர்தல் ஆணையம் ஒரே சமயத்தில் இடைத் தேர்தல்களை நடத்தினால், ஒரே அவைக்கு நடைபெறும் இடைத்தேர்தல்களில் இரண்டுக்கு மேற்பட்ட இடங்களில் ஒருவர் போட்டியிட முடி யாது.
  • ஒரே தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட எத்தனை வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியும்?
    நான்கு.
  • தேர்தலுக்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு ஒருவர் ஊர்வல மாகச் செல்லலாமா?
    முடியாது. தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தைச் சுற்றி 100 மீட்டர் தொலைவிற்குள் வர அதிகபட்சமாக மூன்று வாகனங்கள்தான் அனுமதிக்கப்படும். அதைப் போன்றே வேட்பாளரையும் சேர்த்து அதிகாரியின் அலுவலகத்திற்குள் அதிகபட்சமாக 5 பேர் தான் அனுமதிக்கப்படுவார்கள்.
  • தேர்தல் அதிகாரி வேட்பு மனுக்களை பரி சீலனைக்கு எடுத்துக் கொள்ளும்போது எத்தனை பேர் அனுமதிக்கப்படுவார்கள்?
    வேட்பாளர், அவருடைய தேர்தல் பிரதிநிதி, மனுவை முன்மொழிபவர் மற்றும் ஒருவர் (அவர் வழக் குரைஞராக இருக்கலாம்) வேட்பாளரால் எழுத்து மூலம் அங்கீகரிக்கப்பட்டவர் - வேட்புமனு பரிசீலனையின்போது இருக்கலாம்.
  • ஒரு வேட்பாளரின் வேட்புமனு மீது ஆட்சேபம் எடுத்துரைக்கப்பட்டால், இந்த ஆட்சேபத்திற்குப் பதில் அளிக்க வேட்பாளர் கால அவகாசம் கோரி னால், தேர்தல் அதிகாரி அவகாசம் தர முடியுமா?
    முடியும். தேர்தல் அதிகாரி ஆட்சேபணை மீதான விசாரணையை அடுத்த நாள் வரைக்கோ அல்லது அதற்கு அடுத்த நாள் வரைக்குமோ ஒத்திவைக்கலாம். ஆனால் அந்த கால அவகாசம், அன்று முற்பகல் 11 மணி வரைதான் அளிக்கப்படும். வேட்புமனுக்களை விலக்கிக் கொள்ளுவதற்கான நாள் அன்று பிற்பகல் 3 மணிக்கு முன், தேர்தல் அதிகாரி விசாரணையை முடிக்க வேண்டும்.
Related Posts with Thumbnails

wibiya widget