கணினித் தொழில்நுட்பம் 2011


2011ம் ஆண்டில் கணினித் தொழில்நுட்பத் துறை முந்தைய 2010 ஆம் ஆண்டைப் போலவே எண்ணற்ற மாற்றங்களை சந்தித்தது. தொழில் நுட்பத் துறையில் ஏற்பட்ட பெரும்பாலான மாற்றங்கள் அதன் போக்கில் ஏற்படும் வளர்ச்சியாகவே பார்க்க வேண்டியுள்ளது. அப்படி உருவான மாற்றங்களில் நேரடியாக மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்திய முக்கிய நிகழ்வு
கள் மட்டும் சிறு தொகுப்பாகத் தருகிறோம்.

சமூக வலைத்தளங்கள்:
ஒவ்வொரு ஆண்டிலும் கூகுளின் ஏதாவது ஒரு புதிய வசதி முன்னணியில் இருக்கும். அந்த வகையில் இந்த ஆண்டும் கூகுளின் படைப்புகளே முன்னிலையில் உள்ளன.
ஃபேஸ்புக்கின் வளர்ச்சி விளம்பர வருவாயைப் பாதிக்கத் தொடங்கியதால் தன்னுடைய இடத்தை தக்க வைக்கவும், வெளியேறும் பயனரை தொடர்ந்து கூகுளில் நீடிக்கச் செய்யவும் கூகுள் நிறுவனம் அதிரடியாய் தொடங்கியது தான் கூகுள் பிளஸ் சமூக வலைத்தளம்.கூகுள் பிளஸ் தொடங்கிய 6 மாதத்திற்குள்ளாக சுமார் 25 கோடிப் பேரை இணைத்து சாதனை படைத்துள்ளது.
ஃபேஸ்புக், டிவிட்டர் தளங்களுக்கு போட்டியாக இருக்கும் என்று கூறப்பட்ட பின் தோல்வியைத் தழுவிய கூகுள் பஸ் சேவை சென்ற வாரத்துடன் நிறுத்தப்பட்டுவிட்டது.


பிரௌசர் யுத்தம்:

கூகுள் குரோம் பிரௌசர் மற்றொரு முன்னணி பிரௌசரான ஃபயர்பாக்ஸ் பிரௌசரைப் பின்னுக்குத் தள்ளியது. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைத்து வெளியிடுவதன் மூலம் முன்னணி பிரௌசராகக் காட்டிக் கொள்ளும் இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் தற்போது கடும் சரிவை சந்தித்து வருகிறது.
குரோம் பிரௌசரின் போட்டி காரணமாக பல புதிய வசதிகளுடன் 7 பதிப்புகளை இந்த ஆண்டில் ஃபயர்பாக்ஸ் வெளியிட்டது. தற்போது ஃபயர்பாக்ஸ் 9.1 பதிப்பு பயன்பாட்டில் உள்ளது.
ஃபயர்பாக்சில் கூகுள் தேடல் டூல்பார் இடம்பெற கடந்த 6 ஆண்டு
களாக நடைமுறையில் உள்ள ஒப்பந்தத்தை இந்த ஆண்டுடன் கூகுள் முடித்துக் கொள்ளும் என்று எதிர்பார்த்த வேளையில், அந்த ஒப்பந்தத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு கூகுள் நீடித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி ஒவ்வொரு ஆண்டும் 200 கோடி டாலர்களை ஃபயர்பாக்சுக்கு கூகுள் அளிக்கவேண்டும்.
பிரௌசர் சந்தையில் குரோம் மற்றும் ஃபயர்பாக்சின் பங்களிப்பு தற்போது 25 சதவீதமாக உள்ளது. 
 -----------------------------------------------------------------------------------------------------------------------
ஸ்டீவ் ஜாப்ஸ் மறைவு

மேசைக் கணினி, ஐபேட், ஐபாட், ஐபோன் என்று ஒவ்வொரு தயாரிப்பிலும் முத்திரை பதித்த ஆப்பிள் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவர் ஸ்டீவ் ஜாப்ஸ். அவர்தான் அந்நிறுவனத்தின் மூளை என்று கூட சொல்லலாம். புதிய கண்டுபிடிப்பு என்று குறிப்பிட்டு சொல்ல முடியாவிட்டாலும், ஆப்பிளின் பல தயாரிப்புகளை மக்களுக்கு எளிமையான விதத்தில் கொண்டு சேர்த்தது ஸ்டீவின் திறமை என்று கூறலாம்.
இவர் பிப்ரவரி 24, 1955 அன்று கலிபோர்னியாவில் பிறந்தார். ஏப்ரல் 1, 1976 இல் தன் பள்ளி நண்பர் ஸ்டீவ் வாஷ்னியாக் மற்றும் மைக் மார்குலா ஆகியோருடன் இணைந்து ஆப்பிள் நிறுவனத்தை தொடங்கினார். ஆப்பிள் மேகிண்டோஸ் மேசைக் கணினிகளை வெளியிட்டது. எளிமையும், பல வசதிகளும் நிறைந்த ஐபேட், ஐபாட், ஐபோன் கருவிகளும் உருவாக்கப்பட்டன. ஆப்பிள் தயாரிப்புகளின் விலை அதிகமானதாக இருந்தாலும் அதன் செயல்பாடும், வசதிகளும் முழுத் திருப்தியைத் தந்தது. ஆப்பிள் கடைசியாக வெளியிட்ட ஐபோன் 4 எஸ் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அது வெளியிடப்பட்ட அடுத்த நாளான அக்டோபர் 5, 2011 அன்று, பல ஆண்டுகளாகப் புற்றுநோய் பாதிப்பிற்குள்ளாகியிருந்த ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்தார்.
 -----------------------------------------------------------------------------------------------------------------------
ஆகாஸ் டேப்ளட் பிசி

 அக்டோபர் 5, 2011 அன்று இந்தியாவில் தயாரிக்கப்பட்டு தகவல் தொழில் நுட்பத் துறையால் அறிமுகம் செய்யப்பட்டது ஆகாஸ் டேப்ளட் பிசி. உலகிலேயே விலை குறைவான டேப்ளட் பிசி இதுதான். ஆண்ட்ராய்ட் இயங்குதளத்துடன் ஜிபிஆர்எஸ் இணைய வசதியுள்ளது. மாணவர்களுக்கு அரசு குறைவான விலையில் வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் இணையதளத்தில் முன்பதிவு செய்யப்படுகிறது. இதன் சந்தை விலை 2999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதலிடத்தில் ஆண்ட்ராய்ட்
கூகுள் ஆண்ட்ராய்ட் இயங்குதள போன்கள் விற்பனையில் 50 சதவீதத்திற்கும் மேலான இடத்தைப் பிடித்து முதலிடத்திற்கு முன்னேறியுள்ளன. இதன் மூலமாக சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட் போன் விற்பனையில் நோக்கியாவை பின்னுக்குத் தள்ளியுள்ளது.
இந்த சரிவை சமாளிக்க நோக்கியா தன் பழைய சிம்பியன் இயங்குதளத்தை கைகழுவிவிட்டு விண்டோஸ் இயக்க போன்களை களமிறக்கியுள்ளது.
அதே நேரத்தில் கூகுள் நிறுவனம் மோட்டரோலா நிறுவனத்துடன் இணைந்து ஆண்ட்ராய்ட்  போன் மேம்பாட்டிற்கான  ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

பிளாக்பெர்ரிக்கு சரிவு
உலக அளவில் சேவை மற்றும் தகவல் பாதுகாப்பில் தனக்கு நிகர் யாருமில்லை என்று சொன்ன பிளாக்பெர்ரிக்கு அக்டோபர் 10இல் பெரும் சிக்கல் ஏற்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்க நாடுகளில் இணைய சேவை 3 நாட்கள் பாதித்தது. இது பிளாக் பெர்ரியின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் சர்வர் அமைக்கவேண்டும் என்ற இந்திய அரசின் கோரிக்கையை மறுத்து முரண்டு பிடிக்கும் பிளாக்பெர்ரிக்கு மேலும் ஒரு பின்னடைவாக, விற்பனையில் மட்டுமல்லாமல் பங்குச் சந்தையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. Related Posts with Thumbnails

மொபைல் போன் கதிர்வீச்சு, பேட்டரி மற்றும் டேட்டா பேக்கப் பிரச்சனைகள்


லக அளவில் 83 சதவீதம் பேர் மொபைல் போன் பயன்படுத்துவதாக  கேஷ்ஜெனரேட்டர் என்று இணைய வழி தகவல் சேகரிப்பு புள்ளி விவரம் ஒன்று குறிப்பிடுகிறது. அந்த அளவிற்கு இன்று பெரும்பாலானவர்களின் தகவல் தொடர்பு சாதனமாகவும், கைகளுக்குள் உலகம் என்று சொல்லுமளவிற்கு அதன் பயன்பாடும் மாறியிருக்கிறது.
மொபைல் போன் பயன்படுத்தும் 10ல் 5 பேர் அதற்கு அடிமையாகவே மாறிவிடுகின்றனர் என்றும், மொபைல் வழியாக இணையத்தைப் பயன்படுத்துவோர் 44 சதவீதம் என்றும், குறுஞ்செய்தி அனுப்ப மற்றும் ஒளிப்படம் எடுக்க 74 சதவீதம் பேர் பயன்படுத்துவதாகவும் மேற்சொன்ன ஆய்வில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிக்சனரி, கால்குலேட்டர் தொடங்கி கணினி, தொலைக்காட்சி, டெலிகான்
பிரன்ஸ் என பல சாதனங்களின் வேலையையும் செய்யும் ஒரே பொருளாக மாறியிருக்கிறது.
கதிர்வீச்சு
இது ஆக்கப்பூர்வமான வளர்ச்சியாக இருந்தாலும் சில ஆபத்துகளும் உண்டு. முதலாவது கதிர் வீச்சு. மொபைல் போனிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு குறித்து சர்ச்சைகள் இருந்தாலும், கதிர்வீச்சு வெளியாவதை யாரும் மறுக்கவில்லை.
போன்களில் கதிர் வீச்சு அளவை எஸ்.ஏ.ஆர்.  (SAR - Specific Absorption Rate) என்று குறிப்பிடுகிறார்கள். இது வாட் பர் கேஜ் என்ற அளவில் அளக்கப்படுகிறது. இந்தியாவில் முன்பு ஐரோப்பிய தரநெறிமுறைப்படி 2W/Kg அளவுள்ள போன்கள் அனுமதிக்கப்பட்டன. தற்போது அமெரிக்க தரநெறிமுறைப்படி 1.6W/Kg  என்ற அளவு கடைபிடிக்கப்படுகிறது. இது குறித்த விபரம் போனின் உதவிப் புத்தகத்திலும், லேபிளிலும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இது குறித்த ஆராய்ச்சிகள் நடந்து வந்தாலும் நாம் மொபைல் போனை காதுகளில் ஒட்டிவைத்துப் பேசாமல் தள்ளி வைத்தே பேசவேண்டும் அல்லது அதற்கென உள்ள இயர்போன்களைப் பயன்படுத்தலாம். எப்படியாயினும் அதிக நேரம் தொடர்ந்து பேசுவது காதுகளையும், மூளையையும் பாதிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கர்ப்பிணிப் பெண்களும், குழந்தைகளும்  மொபைல் போனை அதிகமாக பயன்படுத்துவது தவிர்க்கப்படவேண்டும்.
பொதுவாக சிக்னல் கிடைக்காத பகுதிகளில் இருக்கும்போது கதிர்வீச்சு அதிகமாக வெளியாவதாகக் கூறப்படுகிறது.
பேட்டரி
மொபைல் போனுக்கு ஆதாரமாக இருப்பது அதற்கு மின் சக்தி வழங்கும் பேட்டரியாகும். இன்று 1000ஆஹா அளவு மின்சக்தி தரும் பேட்டரிகளே சிறந்ததாகக் கூறப்படுகிறது.
பேட்டரியை முறையாக சார்ஜ் செய்து முக்கியம். முதன் முதலாக மொபைல் வாங்கியவுடன் குறைந்தது 8 மணி நேரமாவது சார்ஜ் செய்யவேண்டும். அதன் பிறகு சார்ஜ் தீரும் நிலை ஏற்பட்டால் மட்டுமே சார்ஜ் செய்யவும். அதுவும் முழுமையாக செய்யவேண்டும்.
அதேபோல சார்ஜ் ஏற்றப்படுவது முழுமையடைந்ததும் மின் இணைப்பைத் துண்டிக்காமல் இருப்பதும் பேட்டரியை செயலிழக்கச் செய்யும். எனவே சார்ஜ் செய்யும் நேரத்தை சரியாக கணக்கிட்டு அழைப்புகள் வராத நேரமாகப் பார்த்து தேர்ந்தெடுக்கவும். இந்த முறையைத் தொடர்ந்து பின்பற்றினால் பேட்டரியின் ஆயுள் நீடித்திருக்கும்.
பேட்டரி தொடர்ந்து அதிக நேரம் தாக்குப்பிடிக்க வேண்டுமென்றால் ரிங்டோனாக முழுமையான பாடலைப் பயன்படுத்தாமல் மொபைல் நிறுவனம் தரும் ரிங்டோனை செட் செய்வது நல்லது அல்லது சிறிய அளவாக துண்டிக்கப்பட்ட எம்பி3 கோப்புகளைப் பயன்படுத்தலாம். வால்பேப்பர் அனிமேஷன் படமாக இல்லாமல் திரை அளவிற்கு இணையான அளவுப் படத்தை உபயோகிக்கவும். ப்ளுடூத், ஒய்ஃபீ வசதிகள் இருந்தால் பயன்படுத்தாத நேரத்தில் அவற்றை அணைத்து வைக்கவும்.
போன் பேக்கப்
உங்க அப்பா போன் நெம்பர் என்ன? என்று ஒருவர் கேட்டால் உடனே போனில் தேடிப் பார்த்து சொல்வது வாடிக்கையாகி இருக்கிறது. தாய், கணவன், மனைவி, மகன், மகள் என்று குடும்ப உறவுகளைத் தொடர்பு கொள்ள முக்கியமான எண்களை நினைவில் வைத்துக் கொள்ளாமல்தான் பலபேர் இருக்கிறோம்.
இத்தகைய சூழலில் உங்கள் மொபைல் போன் காணாமல் போனாலோ, சேதமடைந்தாலோ அதில் பதிந்து வைத்திருக்கும் அனைத்து தொடர்பு எண்களையும், முக்கியமான தேதிகள், தகவல்கள் என பலவற்றையும் இழக்க நேரிடும். எனவே முடிந்தவரை அவ்வப்போது உங்கள் சிம் கார்டு தகவல்களை மொபைல் போன், மெமரி கார்டு மற்றும் உங்களிடம் வேறு ஏதேனும் பயன்படுத்தாத சிம் கார்டுகள் இருந்தால் அதில் பேக்கப் செய்து வைத்துக் கொள்ளவும். இப்போது வரும் பெரும்பாலான போன்களில் இந்த வசதி இருக்கிறது. அதேபோல கணினி வைத்திருப்பவர்கள் இந்த பேக்கப்பை அதிலும் பதிந்து வைத்துக்கொள்ளவும். ஒருசில செல்போன் நிறுவனங்கள் பேக்கப் வசதியை தருகிறார்கள். ஆனால் அதற்கு மாதந்திரக் கட்டணம் செலுத்தவேண்டும். முடிந்தவரை முக்கியமான எண்களை குறிப்பாக எழுதி வைத்துக்கொள்வதே சிறந்தது. Related Posts with Thumbnails

ரயில் பயணத்திற்கான விபரங்கள் தரும் இணையதளங்கள்

இந்திய ரயில்வே இணைய தளமான https://www.irctc.co.in தளத்தைப் போலவே சிறப்பாக அமைந்த மற்றொரு இணைய தளம் http://www.indiarailinfo.com (இந்தியா ரயில் இன்போ டாட் காம்) ஆகும். இத்தளத்தில்  பிஎன்ஆர் ஸ்டேட்டஸ், பயணச் சீட்டு விபரம், இருக்கைகள், வண்டி நேரம், அத்தடத்தில் செல்லும் பிற ரயில்களின் எண், நேரம் எனப் பல்வேறு உபயோகமான விபரங்கள் கிடைக்கின்றன. இத்தளத்தை கூகுள் குரோம் பிரௌசர் வழியாக பயன்படுத்துவோருக்கு எளிமையான எக்ஸ்டென்சன் மென்பொருளையும் இத்தளம் வழங்குகிறது. இதனை குரோம் பிரௌசரில் கீழ்க்கண்ட இணைப்பு மூலம் பெறலாம்.

http://goo.gl/iTIv3 இந்த இணைப்பிலிருந்து பதிவிறக்கி நிறுவியதும் அட்ரஸ் பாருக்கு அருகில் சிறிய பல்பு போன்ற படம் காட்டப்படும். இதனைக் கிளிக் செய்தால் புறப்படும் இடம், சேரும் இடம் ஆகியவற்றைக் கொடுத்து அந்த வழியில் பயணிக்கும் ரயில் வண்டியின் விபரத்தையும், முன்பதிவு எண்ணைக் கொடுத்து (PNR Status) அதுகுறித்த விபரத்தையும் அறியமுடியும்.
இது தனியார் தளமாக இருந்தாலும் விளம்பரத் தொல்லைகள் இல்லாமல் ரயில்வே இணைய தளத்திற்கு இணையாக சிறப்பாகவே இயங்குகிறது.
. Related Posts with Thumbnails

கணினியை நிர்வகிக்க உதவும் சாப்ட்வேர்

கணினி குறித்த விபரங்களை அறிய, மறந்த பாஸ்வேர்டை கண்டுபிடிக்க, அழிந்த கோப்புகளை மீட்டெடுக்க, லேப்டாப் பேட்டரி விபரம் அறிய, ஒய்-பீ நெட்வொர்க்கை கண்டுபிடிக்க, ஆடியோ வீடியோ சார்ந்த யுட்டிலிட்டிகள், மென்பொருள் நிரல் எழுதுவதற்கு உதவும் சிறு மென்பொருள்கள், அவுட்லுக், தண்டர்பேர்ட் மெயில் கிளைண்ட்களுக்கான யுட்டிலிட்டிகள் எனப் பல பயனுள்ள சிறு மென்பொருள் தொகுப்புகளை பிரிவு வாரியாகக் கொண்ட போர்ட்டபிள் மென்தொகுப்புதான் நிர் சாப்ட் லான்ச்சர் (NirSoft Launcher). இதில் நிர் சாப்ட்டின் மென்பொருள் தொகுப்பு மட்டுமல்லாமல் Priformaவின் சிகிளீனர், ரெக்குவா ஆகிய வேறு போர்ட்டபிள் மென்பொருள்களை இணைத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.


மேலும் விபரம் அறியவும், டவுன்லோட் செய்யவும் http://launcher.nirsoft.net/ என்ற முகவரிக்கு செல்லவும்.
. Related Posts with Thumbnails

மேசைக் கணினிகளில் ஆண்ட்ராய்ட் சாத்தியமா?


ற்போது ஸ்மார்ட் போன்கள் என ஆப்பிள், விண்டோஸ், ஆண்ட்ராய்ட் இயங்குதளக் கைபேசிகள் குறிப்பிடப்படுகின்றன. அதேபோல இதே இயங்கு தளங்கள் நிறுவப்பட்ட டேப்ளட் பிசி எனப்படும் பலகைக் கணினிகளும்  பயன்பாட்டில் உள்ளன. இக் கையடக்க சாதனங்கள் மூலம் கணினிக்கு இணையான பயன்பாடுகள் இன்று சாத்தியமாகியுள்ளன.
இச்சாதனங்களின் திறனை மேம்படுத்தி புதிய புதிய வசதிகள் தொடர்ந்து அறிமுகமாகி வருகின்றன. அந்த வரிசையில் முன்னணியில் இருப்பது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் சாதனமாகும், அடுத்ததாக கூகுள் சார்பு அமைப்பான ஒன் அலையன்ஸின் ஓப்பன் சோர்ஸ் முறையிலான ஆண்ட்ராய்ட் இயங்குதளம் இரண்டாவதாக உள்ளது. அடுத்த
தாக இருப்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 7 இயங்குதளம் ஆகும்.
இதில் ஆப்பிளும், விண்டோசும் மேசைக் கணினியிலிருந்து கைபேசிக்கு மாற்றியமைக்கப்பட்ட இயங்கு தளங்களாகும். ஆனால் ஆண்ட்ராய்ட் செல்பேசி மற்றும் டேப்ளட் பிசிக்களுக்காக வடிவமைக்கப்பட்ட மென்பொருளாகும். தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வெளியிடப்படும் இம்மென்பொருளின் புதிய பதிப்பு அடுத்த ஆண்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பதிப்பிற்கு ஐஸ்கிரீம் சாண்ட்விச் ((Ice Cream Sandwich)) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த இயங்குதளம் முப்பரிமாண (3D) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்
டுள்ளது. இதன் மூலம் உரிமையாளரின் முகத்தை அடையாளம் கண்டு இயங்க அனுமதிக்கும் வசதி சாத்தியமாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கார், பைக், வீட்டிலுள்ள மின் விசிறி, விளக்கு ஆகிய மூன்றாம் தர சாதனங்களை புளூடூத்  தொழில் நுட்பம் மூலமாக கட்டுப்படுத்தும் வசதி இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடைசியாக வந்த ஆண்ட்ராய்ட் பதிப்பு தோஷிபா ஏடி 200 சாதனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்பதிப்பு மேசைக் கணினிகளுக்கு ஏற்புடையதாக இல்லை.
ஆனால், ஐஸ்கிரீம் ஸாண்ட்விச் ஆண்ட்ராய்ட் பதிப்பு இன்டெல் மற்றும் ஏஎம்டி பிராசசர்களில் வேலை செய்யும் திறனுள்ளது. இது மேசைக் கணினிகளுக்கு இணையானது என தொழில் நுட்ப வல்லுனர்களால் பார்க்கப்படுகிறது.
இதனால், கூகுளின் அடுத்த இலக்கு மேசைக்  கணினிகளுக்கான ஆண்ட்ராய்ட் இயங்கு தளமாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. ஏற்கனவே கூகுள் குரோம் (Google Chrome OS) இயங்குதளத்தை அறிமுகம் செய்திருந்தாலும் அது பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.
தற்போதுள்ள மேசைக் கணினிகளில் மைக்ரோசாப்ட் விண்டோசின் ஆதிக்கமே பெரும்பாலும் உள்ள நிலையில், ஸ்மார்ட் போன்களில் 50 சதவீதத்திற்குமேல் இடம் பிடித்துவிட்ட கூகுள் ஆண்ட்ராய்ட் எளிதாக மேசைக் கணினிக்கு மாறும் சாத்தியம் உள்ளது.
எதையும் செய்து பார்க்கும் கூகுள் இதையும் செய்யும் என்றும், ஐஸ்கிரீம் ஸான்ட்விச் பதிப்பிற்கு பிறகு இது நிகழலாம் என்றும் கணினி உலகில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. Related Posts with Thumbnails

கூகுள் மியூசிக் தளத்தைப் பார்க்க குறுக்கு வழி

கூகுளின் புதிய சேவையான கூகுள் மியூசிக் இப்போது அமெரிக்காவில் மட்டும் சேவையை வழங்கி வருகிறது. இச்சேவை பரவலாகக் கிடைக்க சிறிது காலமாகும் என்று தெரிகிறது.
https://music.google.com தளத்தை நாம் பார்க்க விரும்பினால் We're sorry. Google Music is currently only available in the United States என்ற செய்தி தோன்றும்.

இத்தளத்தை பார்க்க நாம் அமெரிக்காவிற்குத்தான் செல்லவேண்டும். காரணம் நம்முடைய ஐபி முகவரிதான்.
ஆனால் இங்கி‌ருந்தே பார்க்க ஒரு குறுக்கு வழி இருக்கிறது. எப்படியென்றால் http://www.proxy4free.com/ என்ற இந்தத் தளத்தில் நுழைந்து அமெரிக்க புராக்ஸி சேவை சர்வர் ஒன்றை தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால் தோன்றும் இணைய தளத் திரையில் music.google.com என்று டைப் செய்து ஓகே கொடுக்கவும். இப்போது நீங்கள் அமெரிக்காவில் இருந்து பார்ப்பதாகக் கருதி பக்கம் திறக்கும்.

இனி கூகுளின் பாடல் கோப்புகளைப் பார்க்கலாம். கேட்கலாம்.



Related Posts with Thumbnails

wibiya widget