கணினியில் ஓவியம் வரைய உதவும் எளிய மென்பொருள்


கணினியில் ஓவியம் வரைபவர்களுக்கு போட்டோஷாப், கோரல்டிரா, இல்லஸ்ட்ரேட்டர் எனப் பல வகை வணிக மென்பொருள்கள் உள்ளன.
ஆனால் ஓவியம் வரைவதற்கென்று இலவசமாகக் கிடைக்கக்கூடிய ஓரிரு மென்பொருள்களில் தற்போது வந்துள்ள ஸ்மூத் டிரா (Smooth Draw) மென்பொருள் சிறந்ததாக உள்ளது.

இதில் பேனா (Pen), பென்சில் (Pencil), வாட்டர் கலர் (Water Colour), ஏர் ஸ்பிரே (Air Spray) எனப் பல்வேறு விதமான பிரஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. போட்டோஷாப் போன்ற முன்னணி மென்பொருள்களில் உள்ள பிளர் (Blur), சார்ப்னஸ்(Sharpness), பர்ன்(Burn), ஸ்மட்ஜ்(Smudge) டூல்களும் லேயர் (Layar) வசதியும் இதில் உள்ளது. எளிய தோற்றமும், எவரும் புரிந்து கொள்ளும் விதமாகவும் வடிவமைக்கப்பட்ட இம்மென்பொருளில் வரைந்த படங்களை JPEG, PNG, TIFF, BMP, GIFF உள்ளிட்ட முன்னணி படக் கோப்பு வடிவங்களாக சேமிக்கமுடியும்.
2 எம்பி அளவேயுள்ள இம்மென்பொருள் இலவசமாகக் கிடைக்கிறது. தரவிறக்கம் செய்ய: http://www.smoothdraw.com/
. Related Posts with Thumbnails

மாற்றங்களை ஏற்படுத்தும் சமூக வலைத்தளங்கள்!


மூக வலைத்தளங்கள் பொழுது போக்கிற்கானது என்பதையும் தாண்டி இன்று கருத்துப் பரிமாற்றம், தகவல் பரிமாற்றம், தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு, சமூகப் பணிகளுக்கு என்று பல பரிமாணங்களுடன் மாறியிருக்கிறது.
தொடக்கத்தில் மின்னஞ்சல் கணக்கு வைத்திருப்பது கௌரவமாகக் கருதப்பட்டது.  ஆனால் இன்று அந்நிலை மாறி சமூகவலைத்தளக் கணக்கு வைத்திருப்பதே ஒரு கௌரவமாக பார்க்கப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் மின்னஞ்சல் முகவரியை கேட்கும் இளைகஞர்களைவிட ஃபேஸ்புக், டிவிட்டர், ஜிபிளஸ், ஆர்குட், யுடியூப் கணக்கு குறித்த பேச்சே அதிகமாக இருக்கிறது.
வருங்காலத்தில் மின்னஞ்சல்களே இல்லாமல் போகும் சூழல்கூட ஏற்படலாம் என்று தொழில்நுட்பத் துறையினர் கூறும் அளவிற்கு சமூக வலைத்தளங்கள் வளர்ந்துள்ளன. இதற்குக் காரணம் மின்னஞ்சலை விட வேகமான செய்திப் பரிமாற்றம் சமூக வலைத்தளங்களில் நடைபெறுவது
தான். தற்போது கையடக்க கணினியாக வலம் வரும் ஸ்மார்ட் போன், டேப்ளட் பிசி ஆகியவற்றின் மூலமாகப் பெருமளவு சமூக வலைத்தள உறுப்பினர்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வது அதிகரித்துள்ளது.
இன்று சுமார் 314 கோடி மின்னஞ்சல் கணக்குகள் உள்ளன. இதில் ஒரு நபரே நான்கு, ஐந்து மெயில் ஐடிகள் வைத்திருப்பதும் உள்ளடங்கும்.  சமூக வலைத்
தளங்களில் உறுப்பினராக உள்ளவர்களின் எண்ணிக்கை ஃபேஸ்புக்கில் 80 கோடியும், டிவிட்டரில் 20 கோடியும், லிங்க்டு இன் தளத்தில் 13.5 கோடிப் பேரும், குரூப்ஆன் தளத்தில் 11.5 கோடிப் பேரும், கூகுள் பிளஸ்ஸில் 9 கோடிப் பேரும், சீனாவைச் சேர்ந்த சமூக வலைத் தளங்களான ரென்ரென் 17 கோடிப் பேரையும், கியூ ஜோன் 50 கோடிப் பேரையும், சினா வைபோ 25 கோடிப் பேரையும், மற்றுமுள்ள பிற சமூக வலைத்தளங்களில் சுமார் 50 கோடிக்கும் அதிகமானோரும் உறுப்பினர்களாக உள்ளனர்.
இதன் மூலமாக சமூக வலைத்தள உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 276 கோடிக்கும் அதிகம் என்று தி ரியல் டைம் ரிப்போர்ட் டாட் காம் இணையதளம் மதிப்பிட்டுள்ளது. இதில் இந்தியர்கள் சுமார் 45 கோடிப் பேர் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேற்கண்ட கணக்கீடு மின்னஞ்சல் பயனர் எண்ணிக்கைக்கு இணையானதாகும். வரும் நாட்களில் இது மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளே உள்ளது.
அதேபோல ஒரு நாளுக்கு அனுப்பப்படும் மின்னஞ்சல்களின் எண்ணிக்கை சுமார் 24700 கோடி என்றும், சமூக வலைத்தளங்களில் அதே ஒரு நாளில் சுமார் 42 கோடி புதிய பதிவுகளும், 19 கோடி புகைப்படப் பதிவேற்றங்களும், 73 கோடி கருத்துக்களும் பரிமாறிக் கொள்ளப்படுவதாக உலக அளவிலான சமூக வலைத்தளக் கணக்கெடுப்பு டிசம்பர் 2011 குறிப்பிடுகிறது.
இன்று சமூக வலைத்தளங்களில் தனி நபர்கள் மட்டுமல்லாமல் நிறுவனங்களும் உறுப்பினர்களாக மாறியுள்ளனர். இதன் மூலம் பொருட்களை விளம்பரம் செய்யவும், வாடிக்கையாளர்களின் கருத்துக்களை நேரடியாக அறிந்து கொள்ளவும் முடிகிறது.வர்த்தகம் சார்ந்து இல்லாமல் இரத்த தானம், எய்ட்ஸ் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் எனப் பல உதவிகரமான சேவைகளுக்கும் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
எகிப்து புரட்சி, வால்ஸ்ட்ரீட் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களுக்கும்  ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக இணையதளங்களே தகவல் தொடர்பு காரணிகளாக செயல்பட்டன.இதன் எதிரொலியாக பல்வேறு நாடுகளும் இத்தளங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அமெரிக்காவும் அத்தகையதொரு சட்டத்தை இயற்றும் முயற்சியாக சோபா (SOPA ACT) சட்டத்தைக் கொண்டு வர முனைந்தது. ஆனால், கடும் எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக இது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Sources:
http://www.slideshare.net/stevenvanbelleghem/social-media-around-the-world-2011
http://therealtimereport.com/2012/01/20/social-networking-stats-google-hits-90-million-users-rltm-scoreboard/
.
. Related Posts with Thumbnails

கறுப்பு வெள்ளைப் படத்தை வண்ணப் படமாக மாற்ற


கறுப்பு வெள்ளைப் புகைப்படங்களை வண்ணப் புகைப்படமாக மாற்ற எளிமையான ஒரு மென்பொருள் உள்ளது.
இம்மென்பொருளில் உள்ள ஒரு பிரஸ் டூலைக் கொண்டு எந்த ஒரு கறுப்பு வெள்ளை (Black & White) மற்றும் கிரேஸ்கேல் (Grayscale) படத்தை நாம் விரும்பும் வண்ணத்தில் பிரஸ் செய்து மாற்றமுடியும்.

இம்மென்பொருளின் பெயர் இன்ஸ்டண்ட் போட்டோ கலர் (Instant Photo Color) ஆகும். 5 எம்பி அளவுள்ள இது இலவசமாகவே கிடைக்கிறது.   இம்மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய: http://clipping-path-studio.com/instantphotocolor/ Related Posts with Thumbnails

விரைவில் வெளிவரவிருக்கும் விண்டோஸ் 8 இயங்குதளம்

உலகின் பெரும்பாலான கணினிகள் பயன்படுத்தப்படும் விண்டோஸ் இயங்குதளத்தின் புதிய பதிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் வெளிவரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் சோதனைப் பதிப்பு (Beta Version) வரும் பிப்ரவரி மாதத்தில் கிடைக்கும் என்று தெரிகிறது.
விண்டோஸ் 7 (Windows 7) பதிப்பின் வெற்றியைத் தொடர்ந்து மேலும் புதிய வசதிகளுடன் இவ்வியக்கத் தொகுப்பை வடிவமைத்து வருகிறது மைக்ரோசாப்ட் நிறுவனம்.
இத்தொகுப்பு அடுத்த தலைமுறைக் கணினிப் பயன்பாடு என்று கூறப்படும் ஸ்மார்ட் போன் (Smart Phone), டேப்ளட் பிசி (Tablet PC) ஆகியவற்றிலும் பயன்படுத்தக் கூடிய வகையில் தயாரிக்கப்படுவது இதன் சிறப்பம்சமாகும்.
மேலும் இதனை விற்பனை செய்யவும், கூடுதல் மென்பொருள்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளவும் வசதியாக விண்டோஸ் ஸ்டோர் (Windows Store) என்ற ஆன்லைன் கடையையும் திறக்கிறது மைக்ரோசாப்ட். இது ஆப்பிள் அப்ளிகேஷன் ஸ்டோர் (Apple Application Store) மற்றும் கூகுள் ஆண்ட்ராய்ட் மார்க்கெட் (Google Android Market) ஆகிய வலைத்தள மென்பொருள் விற்பனை நிலையங்களை ஒத்த ஒரு வியாபார யுக்தியாகும்.
இதன் வாயிலாக இணைய இணைப்பின் மூலம் மட்டுமே விண்டோஸ் 8 இயங்கு தளத்தை நிறுவ முடியும் என்ற சூழலை மைக்ரோசாப்ட் உருவாக்கவிருக்கிறது. ஆகவே சிடி/டிவிடிக்களில் இவ்வியங்குதளம் வெளியிடப்படமாட்டாது என்பது உறுதியாகிறது.
இத்தகு யுக்தியைப் பயன்படுத்துவதனால் தற்போது உரிமை பெறாமல் (Pirated Software) பயன்படுத்தி வரும் விண்டோஸ் இயக்கப் பயனரை கட்டண முறைக்கு உட்படுத்துவது எளிதாகும் என்று மைக்ரோசாப்ட் கருதுவதாகத் தெரிகிறது.
மேலும் இந்த இணையதளத்தில் விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கான கூடுதல் இயக்க மென்பொருள்களும் (Addon Applications) வழங்கப்படவிருக்கின்றன. இதற்கான மென் நிரல்களை எவர் வேண்டுமானாலும் வடிவமைத்து வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜாவா (JAVA), சீ சார்ப் (C#), விசுவல் பேசிக் (Visual Basic) ஆகிய நிரல் மொழி
களைப் பயன்படுத்தி இத்தகு அப்ளிகேஷன் மென்பொருள்களை உருவாக்க முடியும். இதற்கான டெம்ப்ளேட்கள், டூல்ஸ் ஆகியவற்றை மைக்ரோசாப்ட் நிறுவனமே வழங்குகிறது.
. Related Posts with Thumbnails

2012ல் வரவிருக்கும் கணினி மாற்றங்கள்

ந்த ஆண்டில் கணினித் தொழில்நுட்பம் சென்ற ஆண்டு இருந்ததைவிட மேலும் பல கூடுதல் வசதிகளை மக்களுக்குப் பெற்றுத்தரும் என்றே சொல்லலாம்.

டேப்ளட் பிசி:
2012 டேப்ளட் பிசிக்களுக்கான ஆண்டு என்று குறிப்பிடும் அளவிற்கு அதன் பயன்பாடு அதிகரிக்கும் என்று பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். அலைபேசி வழியாக இணையத்தைப் பயன்படுத்தும் பலரும் இனி டேப்ளட் பிசி எனப்படும் பலகைக் கணினிக்கு மாறும் வாய்ப்பு அதிகமுள்ளது.
டேப்ளட் பிசி தற்போது சந்தையில் 7000 ரூபாய் விலையில் தொடங்குகிறது. இந்தியாவில் இதற்கான சந்தையை ஆகாஷ் டேப்ளட்டின் வரவே தீர்மானிக்கும் என்பதாகக் கூறப்படுகிறது. உலகின் விலை குறைந்த டேப்ளட்டான இது மாணவர்களுக்கு ரூ.1500 விலையிலும், பிறருக்கு ரூ.3000 என்ற விலையையும் நிர்ணயித்துள்ளது. இதன் விற்பனை தொடங்கிய பிறகே மற்ற நிறுவன டேப்ளட்களின் விலையில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள்:
இணையத்தில் பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தும் கூகுள், சென்ற ஆண்டில் கூகுள் பிளஸ் சமூக வலைத்தள சேவையை அறிமுகம் செய்தது. இது தொடங்கப்பட்ட ஜூலை மாதத்தில்  ஒரு கோடிப் பேர் உறுப்பினராக சேர்ந்தனர். டிசம்பர் 27 வரையிலான கணக்கின்படி சுமார் 6.2 கோடிப் பேர் உறுப்
பினர்களாக இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை 2012இன் இறுதிக்குள் 40 கோடியாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த எண்ணிக்கை முன்னணி வலைத்தளமான ஃபேஸ்புக்கிற்கு கடும் சவாலை உருவாக்கும். அதன் காரணமாக மேலும் பல வசதிகளை ஃபேஸ்புக்கும், கூகுளும் பயனருக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் வருகைக்குப் பின் கூகுளின் பிற சேவைகளான ஜிமெயில், பிளாக்கர், யுடியூப் உள்ளிட்டவற்றில் பல மேம்படுத்தல்கள் செய்யப்பட்டன. அதிகம் பயனரைப் பெறாத கூகுள் பஸ் மற்றும் கூகுள் ஹெல்த் உள்ளிட்ட சேவைகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.
இந்த ஆண்டில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட கூகுள் மியூசிக் சேவை மேலும் பல நாடுகளுக்கு விரிவாக்கப்படும் என்று தெரிகிறது.
ஹெச்டிஎம்எல் 5:
புதிய இணையத் தொழில் நுட்பமான ஹெச்டிஎம்எல் 5 தொழில்நுட்பத்தில் பல சேவைகளும் மென்பொருள்களும் உருவாக்கப்படும் என்று தெரிகிறது.
மொபைல்களுக்கான அடோப் ஃபிளாஷ் பிளேயரை மேம்படுத்துவதை குறைத்து இனி ஹெச்டிஎம்எல் 5 தொழில்நுட்பத்தைப்  பின்பற்றப் போவதாக அடோப் நிறுவனம் கூறியுள்ளது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

மொபைல் போன்:
முன்னணி மொபைல் போன் நிறுவனங்களான சாம்சங் மற்றும் நோக்கியா தயாரித்துள்ள வளையும் தன்மையுள்ள அலைபேசிகள் சந்தைக்கு வரவுள்ளன. ஆண்ட்ராய்ட், விண்டோஸ் இயங்குதள ஸ்மார்ட் போன்களும் பெருமளவு சந்தையை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்மார்ட் போன்களில் இரண்டு கோர் பிராசசர்கள் தவிர்க்க முடியாத அம்சமாக மாறி வருகிறது.தொடுதிரை வசதி மற்றும் ஆப்பிள் ஐபோன் 4 எஸ் (Apple I-Phone 4S )-ல் உள்ள குரலை அடையாளம் கண்டு தகவல்களை உள்ளிடும் சிரி (SIRI) தொழில்நுட்பம் போல ஆண்ட்ராய்ட் மற்றும் விண்டோஸ் இயக்க போன்களிலும் புதிய வசதி இடம்பெறவுள்ளது.
இதை உறுதிப்படுத்தும் வகையில் கூகுள் மேஜல் (Majel) என்ற தொழில்நுட்பத்தை ஆண்ட்ராய்ட் போனுக்காக ரகசியமாக உருவாக்கி வருவதாக பிசி வேர்ல்ட் ஆங்கில இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதே வசதி டேப்ளட், நெட்புக், அல்ட்ரா புக் மற்றும் மேசைக் கணினிகளுக்கும் வரக்கூடும்.
ஆண்ட்ராய்ட் போன் விற்பனையில் முன்னணியில் உள்ள சாம்சங் நிறுவனத்திற்கு இந்த ஆண்டு மோட்டரோலா நிறுவனம் பெரும் சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. காரணம் சென்ற ஆண்டு இறுதியில் ஆண்ட்ராய்ட் பயன்பாட்டிற்காக கூகுள் - மோட்டரோலா நிறுவனங்களிடையே ஏற்பட்ட ஒப்பந்தம்தான்.
மொபைல் வாலட் (Mobile Wallet) எனப்படும் அலைபேசி வழியாக கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போல பணம் செலுத்தும் வசதி பரவலாகும் என்று தெரிகிறது. தற்போது இதற்கான கட்டுப்பாடுகளை இந்திய ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
முப்பரிமான தொலைக்காட்சி:
3டி தொழில்நுட்பத்துடன் கூடிய தொலைக்காட்சிப் பெட்டிகள் தற்போது சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் பயன்பாடு இனி வரும் நாட்களில் அதிகரிக்கும் என்றும், இதனால் தற்போது புழக்கத்தில் உள்ள எல்இடி டிவிக்களின் விலை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல தொலைக்காட்சிப் பெட்டிகள் வழியாக இணையத்தை அணுகும் தொழில்நுட்பம் மேலும் வளர்ச்சியடையும். இதன் மூலமாக இணைய வீடியோ ஒளிபரப்பு சேவை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
கணினிகள்:
நெட்புக், டேப்ளட் பிசி, அல்ட்ரா புக் கணினிகள் மேசைக் கணினிகளின் பயன்பாட்டை பின்னுக்குத் தள்ளும் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு வெளிவர உள்ள விண்டோஸ் 8 இயங்குதளம் டேப்ளட் மற்றும் நெட்புக் கணினிகளை வேறுபடுத்த முடியாத வகையில் இருக்கும்.
. Related Posts with Thumbnails

wibiya widget