தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 1794 கள உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 1794 கள உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு!👨‍🔧


💡விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.10.2025 

காலியிடங்கள்: 1794

சம்பளம்: Rs.18,800 – 59,900/-

கல்வி தகுதி: Must possess National Trade Certificate / National Apprenticeship Certificate awarded by the National Council for Training and Vocational Trade in any one of the following trades: Electrician (or) Wireman (or) Electrical Trade under Centre of Excellence Scheme

வயது வரம்பு:
குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:
One Time Registration Fee – Rs.150/-
Examination Fee – Rs.100/-
BCM, BC, MBC / DC – Three Free Chances
Persons with Benchmark Disability, SC, SC(A) and ST, Destitute Widow – Full exemption

தேர்வு செய்யும் முறை: 
1.    Written Test
2.    Certificate Verification
3.    Physical Test

முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 03.09.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.10.2025

தேர்வு நடைபெறும் தேதி:
Paper I: 16.11.2025, 09.30 AM to 12.30 PM
Paper II: 16.11.2025, 02.30 PM to 05.30 PM

விரிவான தகவலுக்கும் விண்ணப்பிக்கவும்:👇
https://tnpsc.gov.in/examdashboard/web/index.aspx?notno=13/2025

நதிக்கரையைத் தொடர
WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029VaAR6kc8aKvFugYTm633
Instagram: https://www.instagram.com/nadhikkarai/
Threads: https://www.threads.com/@nadhikkarai Related Posts with Thumbnails

விளையாட்டு வீரர்கள் ONGC வழங்கும் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

விளையாட்டு வீரர்கள் ONGC வழங்கும் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

ONGC நிறுவனம் 2025-26ம் ஆண்டிற்கான 21 விளையாட்டுகளில் திறமையான ஆண் மற்றும் பெண் விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.15,000 முதல் ரூ.30,000 வரை உதவித்தொகையாக 250 விளையாட்டு உதவித்தொகைகளை வழங்க ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த உதவித்தொகை 15 முதல் 20 வயதுடைய, ஆண்டு வருமானம் 5 லட்சம் வரை உள்ள பின்தங்கிய நிலையில் இருக்கும் திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.


*விண்ணப்பிக்கவும் விபரம் அறியவும்:*

https://sportsscholarship.ongc.co.in/

*விண்ணப்பிக்க கடைசி தேதி:*

செப்டம்பர் 22-ம்தேதி முதல் அக்டோபர் 21-ம்தேதி மாலை 4 மணி வரை


விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.



விண்ணப்பதாரர்கள் தவறான சான்றிதழை அளித்தால், அதை நிராகரிக்கவும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் ONGCக்கு அதிகாரம் உண்டு.

*சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள் :*

பிறப்புச் சான்றிதழ்

பாஸ்போர்ட் அல்லது ஆதார் அட்டை அல்லது 10-ம் வகுப்பு சான்றிதழ் (ஏதேனும் ஒன்று)

*தகுதிகள் :*

இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.

15 முதல் 20 வயதுக்குட்பட்ட விளையாட்டு வீரராக இருக்க வேண்டும்

வேறு எந்த நிறுவனத்திடமிருந்தும் உதவித்தொகை பெற்றிருக்கக்கூடாது


*விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் வசதிகள் :*

உதவித்தொகைக்கு தேர்ந்தெடுக்கப்படும் விளையாட்டு வீரர்களுக்கு TA/DA மற்றும் மற்ற போட்டிகளில் பங்கேற்பதற்கான தேவையான செலவுத்தொகை வழங்கப்படும்.

உதவித்தொகைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விளையாட்டு வீரர்களுக்கு, போட்டிகளில் பங்கேற்கும் போது ONGC இலட்சிணையுடன் (Logo) கூடிய விளையாட்டுப் பொருட்களும் வழங்கப்படும்.

உதவித்தொகை பெற்றவர்கள் தங்களுக்காக மட்டுமே 5,00,000 ரூபாய்க்கு தனிநபர் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தைப் பெற முடியும்.


WhatsApp Channel:

https://whatsapp.com/channel/0029VaAR6kc8aKvFugYTm633

Instagram:

https://www.instagram.com/nadhikkarai/

Related Posts with Thumbnails

அண்ணா பல்கலைக்கழகம் வழங்கும் இலவச பொறியியல் பட்டப்படிப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில் தொழிற்பயிற்சியுடன் கூடிய இலவச பொறியியல் (BE) பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. இதற்கு டிப்ளமோ தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை குறித்து விரிவாக காணலாம்.

இலவச பொறியியல் படிப்பு..

அண்ணா பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் HL Mando Anand India எனப்படும் தனியார் நிறுவனத்தின் முழு நிதி உதவியோடு எலெக்ட்ரானிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொறியியல் பாடப்பிரிவில் தொழிற்பயிற்சியுடன் கூடிய பி.இ பட்டப்படிப்பு வழங்கப்படவுள்ளது. இந்த படிப்பில் சேரும் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக வகுப்புகள் மற்றும் HL Mando நிறுவனத்தில் தொழிற்பயிற்சி ஆகிய இணைந்து வழங்கப்படும்.


உதவித்தொகையோடு பட்டப்படிப்பு :-

மேலும்  இந்த படிப்பிற்கான முழு கட்டணமும் தனியார் நிறுவனத்தின் மூலம் ஏற்கப்படும். தொழிற்பயிற்சிக்கான உதவித்தொகையாக (stipend) மாதம் ரூ.14,500 வழங்கப்படும்.  மேலும் மாணவர்களுக்கான கவ்லி கட்டணம், அட்மிஷன் கட்டணம், விடுதி செலவு, உணவு செலவு ஆகியவை அனைத்து அந்த தனியார் நிறுவனம் செலுத்தும்.

-------------------------------------

இதுபோன்ற தகவல்களைப் பெற சப்ஸ்கிரைப் செய்யுங்கள்..
நதிக்கரை வாட்ஸ்அப் சேனல் https://whatsapp.com/channel/0029VaAR6kc8aKvFugYTm633
-------------------------------------

விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்கள் யார்.?

  • இப்படிப்பில் சேர நுழைவுத் தேர்வு கிடையாது. டிப்ளமோ தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இட ஒதுக்கீடு முறை கடைப்பிடிக்கப்படும்.
  • மின்னணுவியல் மற்றும் கருவியியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம்,  இயந்திர பொறியியல், மின் பொறியியல், மின் மற்றும் மின்னணு பொறியியல், மின்னணு பொறியியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல்,  ஆகிய பிரிவுகளில் டிப்ளமோ முடித்தவர்கள் இந்த படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
  • டிப்ளமோ படிப்பில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அரியர் வைத்திருக்கக்கூடாது.
  • விண்ணப்பதார்கள் 2022-23 / 2023-24 / 2024-25 ஆகிய கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.


இலவச பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பிப்பது எப்படி?

ஆன்லைன் வழியாக மட்டுமே நடைபெறும். https://cfa.annauniv.edu/cfa/beintegrated.html என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும் என்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.250 செலுத்தினால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

https://cfa.annauniv.edu/cfa/beintegrated.html

APPLY LINK

ADMISSION NOTIFICATION

நன்றி: WWW.internetcafetamil.in

இதுபோன்ற தகவல்களைப் பெற சப்ஸ்கிரைப் செய்யுங்கள்..
நதிக்கரை வாட்ஸ்அப் சேனல் https://whatsapp.com/channel/0029VaAR6kc8aKvFugYTm633

Related Posts with Thumbnails

ராமேசுவரம் கோயிலில் 76 பேருக்கு வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பிங்க!

ராமேசுவரம் கோயிலில் 76 பேருக்கு வேலைவாய்ப்பு! 12.03.2025க்குள் விண்ணப்பிங்க!

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 76 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 12.03.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

தமிழ் புலவர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: தமிழ் பாடத்தில் பி.லிட் அல்லது பி.ஏ அல்லது எம்.லிட் அல்லது எம்.ஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 18,500 – 58,600

பிளம்பர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: பிளம்பர் பிரிவில் ஐ.டி.ஐ படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 18,000 – 56,900

காவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 18

கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,900 – 50,400

கருணை இல்லம் காப்பாளர் (பெண்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,900 – 50,400

துப்புரவு பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 27

கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 10,000 – 31,500

தூர்வை

காலியிடங்களின் எண்ணிக்கை: 26

கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 10,000 – 31,500

கால்நடை பராமரிப்பு (கோசாலை)

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 10,000 – 31,500

வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:  

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://rameswaramtemple.in/ என்ற இணையதளப் பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.

முகவரி:
இணை ஆணையர்/ செயல் அலுவலர்,
அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில்,
இராமேசுவரம் நகர் மற்றும் வட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் - 623526

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.03.2025

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.

https://drive.google.com/file/d/1bNJSKtyD7IZF6VQL8N-ibij_TKpl8ad9/view?usp=sharing

Related Posts with Thumbnails

wibiya widget