கைபேசிகள் தோற்றுவிக்கும் புதிய உடல் நலக் குறைபாடுகள்


இன்று மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாதனமாக மாறியிருப்பது கைபேசிகள். சாதாரண கைபேசி தொடங்கி, ஸ்மார்ட்போன், டேப்ளட் எனப்படும் விலையதிகக் கணினிப் பயன்பாட்டுச் சாதனங்கள் வரை அனைத்தும் சிறுவர், பெரியவர் என்ற வயது வித்தியாசம் இல்லாமல்  அனைவராலும் விரும்பிப் பயன்படுத்தப்படுகின்றன.
அறிவியல் தொழில்நுட்பம் வழங்கிய அற்புதக் கண்டுபிடிப்பு இக்கைபேசிகள். ஆனால், அதனை அதிகம் உபயோகிப்பதால் ஏற்படும் எண்ணற்ற பாதிப்புகள் குறித்த ஆராய்ச்சிகளும் ஒருபக்கம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
முன்பு வந்த கைபேசிகளை விட இன்றுள்ள கைபேசிகள் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்தவையாகவே உள்ளன. ஆனாலும், அதன் தீங்கு குறைந்திருக்கிறதே ஒழிய முற்றிலும் தடுக்கப்பட்டுவிட்டதாக கூறமுடியாது.
கைபேசியில் தொடர்ந்து 6 நிமிடத்திற்கு மேல் பேசினால் கேன்சர் வரும் வாய்ப்புகள் உண்டென்று ஒரு ஆராய்ச்சி சொல்கிறது. எனவே, தொடர்ந்து பேசுபவர்கள் இயர்போன்களைப் பயன்படுத்திப் பேசவேண்டும் என்றும், அப்போதுகூட கைபேசி உடலுக்கு அருகாமையில் இல்லாமல் தள்ளியிருக்கும்படியாக வைத்துக் கொள்ளவேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க, கைபேசி கோபுரங்கள் மூலமாக பரவும் கதிர்வீச்சின் அளவை குறைக்கவேண்டும் என்றும், அருகருகே கோபுரங்கள் இல்லாமல் குறிப்பிட்ட இடைவெளியில்தான் அமைக்க வேண்டும் எனவும், மருத்துவமனை மற்றும் பொதுமக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளில் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் தொலைத்தொடர்புத் துறை அறிவுறுத்தியிருக்கிறது. அதே நேரத்தில் கதிர்வீச்சினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது. அது குறித்த ஆராய்ச்சி முடிவுகள் தங்களிடம் இல்லையென்றும் அது கூறிவிட்டது.
இப்படிக் கதிர்வீச்சு குறித்து எந்த முடிவும் சரிவர எடுக்க முடியாத நிலையில் புதியதாக கைபேசிகளை நீண்ட நேரம் பயன்படுத்தினால் கண்பார்வை குறை
பாடு ஏற்படும் என்ற அதிர்ச்சித் தகவல் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது.
தில்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் கண் பரிசோத
னைக்கு வந்த ஜம்முவைச் சேர்ந்த 11 வயது சிறுவனைப் பரிசோதித்தபோது அவனுக்கு குறைந்த இடைவெளியில்  பாடப் புத்தகங்களைப் படிக்க முடிந்தது. ஆனால், தொலைவில் உள்ள பொருள்களை இனங்காண்பதில் குழப்பமும்,  கரும்பலகையில் எழுதியதைப் படிக்க முடியாத நிலையும் இருந்தது.
இத்தகைய நிலை ஏன் ஏற்படுகிறது என்று விசாரித்தபோது, அச்சிறுவன் கைபேசியில் தொடர்ந்து பல மணிநேரம் விளையாடிக் கொண்டிருப்பான் என்ற தகவலை அவனது பெற்றோர் தெரிவித்தனர்.
அச்சிறுவனை ஆராய்ந்த அம்மருத்துவமனையின் அனுபவமிக்க டாக்டர் ஹர்பன்ஸ் லால் கூறும்போது, சிறுவனின் பார்வை நிலை சரியாக இருக்கிறது. ஆனால், 7 வயது முதலே கணினி மற்றும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருவதாலும், தொடர்ந்து இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருப்பதும் கண் தசைகளை தளர்ச்சியடையச் செய்து விட்டது என்று கூறினார்.
இதுபோன்ற பாதிப்புகள் இன்று சிறு குழந்தைகளிடமும், இளைஞர்களிடமும் அதிகமாக தோன்றி வருவதாகவும், இதற்கு காரணம் அதிகமாக கைபேசி விளையாட்டுக்கள் விளையாடுவது, குறுஞ்செய்திகளை அனுப்புவது, படிப்பது, இணையப் பக்கங்களைப் பார்ப்பது என்று எண்ணற்ற வேலைகளை கை பேசியின் ஒளி உமிழும் சிறு திரைகளில் பார்ப்பதால்தான் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும், இத்தகு பாதிப்பு ஏற்படாமல் இருக்க கைபேசிகள், ஸ்மார்ட் போன்கள், டேப்ளட், கணினி ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது சற்று தள்ளி வைத்துப் பயன்படுத்தவேண்டும் என்றும், தொடர்ந்து திரையின் மீதே கவனம் செலுத்தாமல்  20 நிமிடங்களுக்கு ஒரு முறை பார்வையை நகர்த்தி 20 அடி தூரத்தில் உள்ள பொருட்களை 20 விநாடி நேரமாவது பார்ப்பதை பயிற்சியாகக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
அறிவியல் தந்த வரமாக கைபேசி இருந்தாலும் அதனால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வது நம் கையில்தான் உள்ளது.
. Related Posts with Thumbnails

நீங்களும் உருவாக்கலாம் பார்கோட்


வர்த்தகப் பயன்பாட்டில் தற்போது அதிக அளவில் பயன்படுத்தப்படுவது பார்கோடு முறையாகும். இன்று பல்பொருள் அங்காடிகள், துணிக் கடைகள் எனப் பல இடங்களிலும் பார்கோட் (Barcode) கள்  பயன்படுத்தப்படுகின்றன.

 பார்கோட் வடிவில் நதிக்கரை

பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள், எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் சாதனங்கள், புத்தகங்கள், வாழ்த்து அட்டைகள் என்று பலவற்றிலும் இக்கோடுகள் அச்சிடப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
கீழே எண்களுடன், தடிமனான கோடு, மெல்லிய கோடு என்று பலவிதமான வடிவங்களில் செங்குத்து வரிசையில் கோடுகள்  சிறு இடைவெளியுடன் அமைக்கப்பட்டிருக்கும். இக் கோடுகளின் தொகுப்பையே பார்கோட்(Barcode) என்கின்றனர். இது ஒரு சர்வதேச குறியீட்டு முறையாகும்.

இம்முறை முதன்முதலில் ரயில் போக்குவரத்திற்காக 1949களில் அமெரிக்காவைச் சேர்ந்த பெர்னார்ட் சில்வர் மற்றும் ஜோசப் உட்லேண்ட் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. அதில் மேலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு இன்றுள்ள பார்கோட் முறை உருவாக்கப்பட்டது.

PDF417 வடிவில் நதிக்கரை

ஒரு பொருளில் பதியப்படும் பார்கோடை வைத்து அப்பொருளைத் தயாரித்தவர், தயாரிப்பு தேதி, அதன் விலை, பொருள் எந்த வகையைச் சார்ந்தது, வரிசை எண் ஆகிய விபரங் களை எளிதில் தெரிந்து கொள்ளமுடியும்.

இக்குறியீட்டைப் படிக்க பார்கோட்ஸ்கேனர் என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது. பார்கோடுகளின் மீது லேசர் ஒளிக் கற்றையை செலுத்திய விநாடி யில் அப்பொருள் குறித்த விபரம் கணினியில் காட்டும் வகையில் இது உருவாக்கப்பட்டிருக்கும்.

பார்கோட்களின் கீழாக கொடுக்கப்பட்டிருக்கும் எண்கள் நான்கு பிரிவு
களாக பிரிக்கப்பட்டிருக்கும். இதில் முதல் பிரிவு விற்கப்படும் பொருளின் வகையைக் குறிப்பதாகவும், இரண்டா வது பிரிவு தயாரிப்பாளரைக் குறிப்பதா கவும், மூன்றாவது பிரிவு பொருளின் தனித்த விபரத்தைக் குறிப்பதாகவும், நான்காவது பிரிவு மேற்கண்ட மூன்று பிரிவு விபரங்களும் சரிதானா என்பதை உறுதிப்படுத்துவதாகவும் அமைந்திருக்கும்.

பல வகையான பார்கோட் முறைகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. பார்கோட்கள் பொதுவாக வர்த்தகப் பயன்பாட்டிற்கே அதிகம் பயன்படுத்துவதாகத் தோன்றினாலும், வேறு பல வகையிலும் அவை பயன்படுத்தப்படுகின்றன.

பார்கோட் முறையில் சாதாரண நேரோட்ட பார்கோட் மற்றும் 2டி பார்கோட் என இருவகை உண்டு.

வர்த்தகப் பயன்பாட்டில் உள்ள பார்கோட்கள் பொதுவாக யூ.பி.சி. என்ற வகை சார்ந்ததாக இருக்கும். மருத்துவமனைகளில் நோயாளிகள் குறித்த விபரம், நோய் மற்றும் சிகிச்சை தகவல்களைப் பதிந்து வைக்கவும், வங்கிகள், நூலகங்கள் ஆகிய இடங்களில் கோட்பார் என்ற பழைய பார்கோட் குறியீட்டு முறை சில இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.

பார்கோடில் இன்டர் லீவ்ட் 2 என்ற ஒரு வகை உண்டு. இது நூலகங்கள், மொத்த விற்பனை நிலையங்களில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

நான் இன்டர்லீவ்ட் 2 எனப்படும் மற்றொரு முறையை தொழில் துறையில் பின்பற்றுகின்றனர்.  இவை யனைத்தும் நேரோட்ட பார்கோடு வகை சார்ந்தவை.
QR Code வடிவில் நதிக்கரை

இதுபோல க்யூ.ஆர். குறியீடு (Q.R. Code) வகை ஒன்று உண்டு. இது டெயோட்டா நிறுவனத்தால் கார் பாகங்களை பிரித்துணர உருவாக்கப்பட்டது. தற்போது எவரும் பயன்படுத்திக் கொள்ள பொதுப் பயன்பாட்டில் உள்ளது.

க்யூ.ஆர்.கோடில் பெயர், முகவரி, தொலைபேசி எண், வசிக்கும் பகுதிக்கான பாகை அளவு எனப் பல விபரங்களைப் பதிந்திட முடியும். க்யூ.ஆர்.கோடில் அமைக்கப்பட்ட தகவலை அறிய மற்ற பார்கோடுகளுக்கு உள்ளதுபோல தனியாக ஸ்கேனர் கருவிகள் தேவையில்லை. நாம் பயன்படுத்தும் கேமராவுடன் கூடிய ஸ்மார்ட் போன்களே போதும். பயன்பாட்டில் இருக்கும் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் போன்களுக்கான க்யூ.ஆர். கோடு ரீடர் மென்பொருள்கள் இணையத்தில் கிடைக்கின்றன.

யூ.பி.சி., க்யூ.ஆர். உள்ளிட்ட பார் கோடுகளை எளிதாக உருவாக்க இலவச இணையதளங்களும் உள்ளன.

பார்கோடு, கியூ.ஆர்.கோட் உருவாக்க
http://www.barcode-generator.org/
http://www.barcoding.com/upc/
http://zxing.appspot.com/generator/
http://barcode.tec-it.com/
http://www.racoindustries.com/barcodegenerator/2d/qr-code.aspx

பார்கோடு, கியூ.ஆர்.கோட் தகவல்களைப் படிக்கும் இணையதளங்கள்
http://www.onlinebarcodereader.com/
http://zxing.org/w/decode.jspx

மேற்கண்டவை அல்லாமல் மேலும் பல வகை பார்கோடு குறியீட்டு முறைகளும் பயன்பாட்டில் உள்ளன.
பார்கோடுகள் பற்றி மேலும் அறிந்துகொள்ள

en.wikipedia.org/wiki/Barcodeen.wikipedia.org/wiki/QR_code
www.barcodesinc.com
en.wikipedia.org/wiki/Barcode_reader
. Related Posts with Thumbnails

மனிதனையும், கணினியையும் வேறுபடுத்தும் "கேப்ட்சா"


இணையவழியாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்யும்போதும், இணைய வங்கிக் கணக்கு, புதிய மின்னஞ்சல்   சேவையைப் பெறப் பதியும்போதும் கலைந்த நிலையில் வளைந்தும் நெளிந்தும் எழுத்துக்கள் சிறு படமாகக் கொடுக்கப்பட்டு அதனை சரியாக பூர்த்தி செய்யும்படிக் கேட்கப்படும். இந்த எழுத்துக்கள் அமைந்த படம்தான் கேப்ட்சா(CAPTCHA) வாகும்.

இது எதற்கு? இதனால் என்ன நன்மை? என்று கேள்வி தோன்றும். இந்த கேப்ட்சா அமைப்பு இணையக் கணக்குகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு வழிமுறையாகும்.

பலவகையான கேப்ட்சாக்கள்

கேப்ட்சா எப்படி பாதுகாக்கும்?
விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையிலோ, வங்கிக் கணக்கு அல்லது மின்னஞ்சல் கணக்கில் நுழையும்படியாகவோ மென்பொருள்களை உருவாக்கிட முடியும். அவற்றைக் கொண்டு தானியங்கி முறையில் குறிப்பிட்ட நேர இடைவெளியில் நமது கணக்குகளை நிர்வகிக்கும்படியாக மென்பொருள்களுக்கு கட்டளையிடுவது சாத்தியமாகும்.
இந்த வசதியை இணையத் திருடர்கள் அவர்களுக்கு ஏற்ற வகையில் மாற்றிப் பயன்படுத்தினால் எவரது கணக்கையும் ஹேக் செய்துவிட முடியும். இந்த பாதுகாப்புக் குறைபாட்டைப் போக்க, உருவாக்கப்பட்டதே கேப்ட்சா கோடாகும்.
இது கூகுள் கணக்கில் காட்டப்படும் கேப்ட்சா

ஆரம்ப காலத்தில் உருவாக்கப்பட்ட கேப்ட்சா எழுத்துக்களை தற்போதுள்ள எழுத்துக்களை படிக்கும் ஓசிஆர் (OCR) ஆப்டிகல் கேரக்டர் ரெககனேசன் (Optical character recognition) மென்பொருள்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிடும். எனவேதான் அதில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு தழைகீழாக, கோணல் மானலாக,   குறுக்குக் கோட்டுடன், ஒன்றோடு ஒன்று ஒட்டியபடி என பல வடிவங்களோடு இன்றைய கேப்ட்சாக்கள் உருவாக்கப்படுகின்றன.
இதன் மூலம் கணினியைப் பயன்படுத்துவது மனிதனா அல்லது மென்பொருளா என்பதை அறிந்து கொள்ளமுடியும்.

கேப்ட்சா (CAPTCHA) என்ற சொல்லின் முழு விரிவாக்கம்
Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart என்பதாகும்.


முக‌‌‌‌‌நூலில் காட்டப்படும் கேப்ட்சா

இந்த முறை அமெரிக்க பல்கலைக்கழகமான கார்னகி மெலனைச் சேர்ந்த பேராசிரியர்கள் லூயிஸ் வேன் ஆன், மேனுவல் பிளம், நிக்கோலஸ் ஜே.ஹாப்பர் மற்றும் ஐபிஎம் நிறுவனத்தைச் சேர்ந்த ஜான் லாங்போர்ட் ஆகியோரால் 2000ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒரு விண்ணப்பம் பூர்த்தி செய்யும்போது தோன்றும் கேப்ட்சா புரியவில்லை என்றால் கணினியில் உள்ள கண்ட்ரோல் பட்டனை கிளிக் செய்து மவுசிலுள்ள ஸ்குரோல் பட்டனை நகர்த்தி பெரிதுபடுத்திப் பார்க்கலாம். அப்பொழுதும் புரிந்து கொள்ளமுடியாவிட்டால் அந்த எழுத்துக்களுக்கு அருகில் இருக்கும் சுழலும் தோற்றத்தில் இருக்கும் இரு அம்புக்குறிகள் சின்னத்தை கிளிக் செய்து வேறு கேப்ட்சா குறியீட்டைப் பெறலாம்.
சில வகை கேப்ட்சாக்களில் ஒலிப்பெருக்கியின் படம் கொடுக்கப்
பட்டிருக்கும். அதனைக் கிளிக் செய்வதன் மூலமாக அந்த எழுத்துக்களை ஒலிக்கக் கேட்டும் பூர்த்தி செய்யலாம்.

ரீகேப்ட்சா (Re-Captcha)

கேப்ட்சாவில் ரீகேப்ட்சா (Re Captcha) என்ற ஒன்றும் உள்ளது. இதுவும் கார்னகி மெலன் பல்கலைக்கழகத் தயாரிப்புதான். இதில் என்ன புதுமை என்றால் இதில் கொடுக்கப்படும் எழுத்துக்களுடனான கேப்ட்சா பழைய புத்தகங்களிலிலிருந்து எடுக்கப்பட்டதாகும். கொடுக்கப்படும் ஸ்கேன் செய்யப்பட்ட எழுத்துக்களை சரியாக தட்டச்சு செய்யும்போது அந்த எழுத்துக்கள் சேகரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்படுகின்றன. இதனால் ஒரே நேரத்தில் பாதுகாப்பும், பழைய புத்தகங்கள் கணினிமயமாக்கும் பணியும் நடைபெறுகிறது.
இதன்மூலம் ஒருநாளைக்கு சராசரியாக 160 புத்தகங்கள் வரை கணினி மயமாக்கப்படுவதாக கூறுகின்றனர்.
இன்றுள்ள பெரும்பாலான இணையதளங்களில் குறிப்பாக கூகுள், ஃபேஸ்புக், ஹாட்மெயில், யாகூ மற்றும் பிரபல வங்கி இணையதளங்கள், அரசு இணையதளங்கள் என்று அனைத்து விதமான தளங்களிலும் இந்த கேப்ட்சா படப் பாதுகாப்பு முறை பயன்படுத்தப்படுகிறது.
Related Posts with Thumbnails

பயன்பாட்டிற்கு வரும் புதிய IPv6 முகவரி முறை

இன்று முதல் இணையத்தின் புதிய முகவரி முறை அமலுக்கு வருகிறது. ஐபிவி 6 (IPv6) என்றழைக்கப்படும் இம்முறை இணைய வளர்ச்சியில் ஒரு புதிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.
ஐபி முகவரி (Internet Protocol Address) என்பது கணினி, இணையதளம் மற்றும் இணையம் சார்ந்த சாதனங்களைத் தொடர்பு கொள்ள உதவும் எண்ணாகும். தற்போது உள்ள பழைய முறையான ஐபிவி4 (IPv4) என்பது 32 பிட் முறையில் உருவாக்கப்பட்டது. இதில் குறைந்த அளவு இணைய முகவரிகளையே வழங்க முடியும். அதாவது 430 கோடி (2 to the 32nd power, or 4,294,967,296) முகவரிகளை மட்டுமே வழங்கக்கூடியது.

இம்முறையை உருவாக்கியவர்கள் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி வேகம் பற்றிக் கனவிலும்  எண்ணிப்பார்த்திருக்க மாட்டார்கள். இன்றுள்ள எண்ணற்ற தொழில்நுட்ப சாதனங்களுக்கு ஐபி முகவரி என்பது மிக அத்தியாவசிமானது.
இணையத் தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சி கணினியைத் தாண்டி, ஸ்மார்ட் போன், இணைய வசதியுள்ள குளிர்சாதனப் பெட்டி, இணைய வழி பிரிண்டர், சர்வர்கள் என்று பல்கிப் பெருகிக் கொண்டிருக்கிறது. இத்தகு சாதனங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக இணைய முகவரி எண் கொடுக்க வேண்டு
மென்றால் 430 கோடி முகவரிகள் என்பது போதாது.

இப்பற்றாக்குறையைத் தீர்க்க உருவாக்கப்பட்டதுதான் ஐபிவி 6 எனப்படும் 128 பிட் முறையாகும். இம்முறையில் அதிகபட்சமாக 340 அன்டெசில்லியன் (Undecillion) அதாவது 340,282,366,920,938,463,463,374,607,431,768,211,456 (2 to the 128th power) அளவிலான இணைய முகவரிகளை வழங்க முடியும்.
இம்முறை ஜூன் 6 புதன்கிழமை அதாவது இன்று முதல் அமலுக்கு வருகிறது. ஏற்கனவே யாகூ, காம்காஸ்ட், கூகுள், ஃபேஸ்புக், சிஸ்கோ உள்ளிட்ட பல முன்னணி இணைய தள நிறுவனங்கள் கடந்த ஓராண்டாக நடத்தி வந்த ஐபிவி 6 முகவரி சோதனைகளை தற்போது முடித்துவிட்டு செயல்பாட்டிற்கு தயாராகிவிட்டன.

முதற் கட்டமாக சுமார் 1500 இணையதளங்களும், 22 நாடுகளைச் சேர்ந்து இண்டெர்நெட் சேவை வழங்குனர்களான ஐஎஸ்பிக்களும் (Internet Service Provider) இப்புதிய முகவரிக்கு இன்று முதல் மாற உள்ளனர் என்று ஆர்பர் நெட்வொர்க் என்ற இணையப் பயன்பாட்டுக் கண்காணிப்பு நிறுவனம் கூறியுள்ளது.
மற்ற இணையதளங்கள் இம்முறைக்கு மாறுவது உடனடியாக சாத்தி
யமில்லை என்றும் அதற்கு சற்றுக் கால தாமதம் எற்படும். அதுவரை தற்போதுள்ள ஐபிவி 4 முறையும் பயன்பாட்டிலேயே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
IPv6 பற்றி மேலும் அறிந்து கொள்ள உதவும் தளங்கள்:
en.wikipedia.org/wiki/IPv6
ipv6.com/
www.ipv6.org/
www.worldipv6day.org/   
.. Related Posts with Thumbnails

கூகுள் தேடலில் புதிய சேவை

கூகுள் தேடல் வசதியில் புதியதாக அறிவு வரைபடம் (Knowledge Graph) என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இணையத் தேடல்தான் கூகுள் தொடங்கிய முதல் சேவை. கோடிக்கணக்கில் கொட்டிக் கிடக்கும் இணையப் பக்கங்களில் உள்ள செய்திகளில், நாம் தேடும் தகவல் எதிலெல்லாம் உள்ளது என்பதைத் கண்டுபிடித்துத் தருவதுதான் இதன் முக்கியப் பணி.
அதில் தேடுபவர் இதைத்தான் தேடுகிறார் என்பதை நுணுக்கமாக அறிந்து ஒரு நொடிக்குள்ளாக அளிப்பதுதான் கூகுளின் வெற்றிக்குக் காரணமாக இருந்து வருகிறது.
தேடலுடன் நிறுத்தாமல் பல புதிய புதிய வசதிகளை அவ்வப்போது தந்து பயனரை வேறு தேடல் தளங்களுக்குச் சென்று விடாமலும் பார்த்துக் கொள்ளும் வேலையையும் செய்து கொண்டேயிருக்கிறது. அந்த வகையில்தான் தற்போது கூகுள் தேடலில் நாம் தேடும் சொல்லுக்கு தொடர்புடைய முக்கியமான செய்தியை விக்கிபீடியா செய்தி போல் விரிவாகத் தரும் புதிய வசதியை தரவுள்ளது.

இவ்வசதி மூலம் நாம் தேடும் ஒரு வார்த்தை அதாவது தாஜ்மஹால் என்ற வார்த்தையை தாஜ் அல்லது மஹால் என்று பிரித்தோ சேர்த்தோ தனித் தனியாகவே எப்படிக் கொடுத்து தேடச் சொன்னாலும் அதற்கான தேடல் முடிவுகளுடன், கூடுதலாக தாஜ்மகால் குறித்த தகவல்கள், இருப்பிட வரை
படம், என்று விக்கிபீடியா தகவல் தளம் போல செய்திகளை வலது பக்கமாக நீல நிற கட்டத்திற்குள் காட்டும். அத்துடன் தாஜ்மகால் என்ற பெயரில் வேறு முக்கிய தகவல்கள் இருந்தால் அவை அதற்குக் கீழாக மற்ற முடிவுகள் என்று தனியாகக் காட்டப்படும்.

இவ்வசதிக்கு கூகுள் அறிவு வரைபடம்  (Knowledge Graph) என்று பெயர் சூட்டியுள்ளது. இதனை இணைய வல்லுனர்கள் கூகுள் பீடியா (Googlepedia) என்று அடைமொழியிட்டுக் குறிப்பிடுகின்றனர்.
தற்போது இச்சேவையை பரிசோதனை முறையில் அமெரிக்காவில் மட்டும் வழங்கி வருகிறது. விரைவில் உலகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.
நான் இந்தக் கட்டுரையை இன்று வெளியிடும் போது கூகுள் இந்தியாவிலும் இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது.
. Related Posts with Thumbnails

பிடிஎப் கோப்புகளை ஒளிப்படமாக மாற்ற

பிடிஎப் கோப்புகளை ஜெபெக் கோப்பாகவும், ஜெபெக் கோப்புகளை பிடிஎப் வடிவத்திற்கு மாற்றவும் ஃபோட்டோஷாப் அல்லது அடோப் பிடிஎப் புரொபஷனல் ஆகிய வணிக மென்பொருள்களைப் பயன்படுத்த வேண்டும்.


இவற்றைப் பயன்படுத்தாமல் இலவசமாக கோப்புகளை மாற்ற உதவும் மென்பொருள்களை http://www.fm-pdf.com/pdf-to-jpg-free.html என்ற இணைய தளம் வழங்குகிறது.
இம்மென்பொருளில் பிடிஎப் கோப்புகளை தேடும் வசதி, HTTP மற்றும் FTP மூலம் கோப்புகளைப் பெறும் வசதி, கோப்புகளில் நீரெழுத்துக் குறியீடுகளை அமைக்கும் வசதி ஆகிய வசதிகளும் உள்ளது.
. Related Posts with Thumbnails

இணையதள வீடியோவிற்கு ஏற்றம் தந்த யு ட்யூப்


ணைய உலகில் உள்ள நிறுவனங்களிடையே கடும் போட்டிகளும், அதனால் தோன்றும் புதிய புதிய வசதிகளும் பெருகிக் கொண்டே போகின்றன.
பத்தாண்டுகளுக்கு முன்பு ஆமை வேகத்தில் இருந்த இணையம் இன்று பல மடங்கு மேம்பட்டிருக்கிறது. இத்தகைய இணைய வேகம் கொடுத்த வசதிகளில் ஒன்று வீடியோக்களை பதிவேற்றும் வசதி.
வீடியோ பதிவுகளை வெளியிட பல இணையதளங்கள் இன்று தோன்றியிருந்தாலும் கூகுள் நிறுவனத்தின் யு ட்யூப் இணையதளம்தான் தற்போது முதலிடத்தில் இருக்கிறது.
அதிகம் பேர் பார்க்கும் இணையதளங்களின் வரிசையில் கூகுள், ஃபேஸ்புக்கிற்கு அடுத்து 3வது இடத்தை யு ட்யூப் தளம் பெற்றுள்ளது.


யு ட்யூப் இணையதளத்தைப் முதலில் உருவாக்கியது பேபால் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களான சட் ஹர்லே, ஸ்டீவ் சான் மற்றும் ஜாவத் கரீம் ஆகிய மூவர்தான். 2005 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று யுட்யூப் டாட் காம் என்ற பெயரில் இணையதளத்தை தொடங்கினர்.

இத்தளத்தை 2006 அக்டோபரில் 165 கோடிக்கு கூகுள் நிறுவனம் கையகப்படுத்தியது. அதன் பிறகு பல புதிய மாற்றங்களை கொண்டு வந்தது. இன்று வரை அதன் மேம்படுத்தும் பணி நிற்கவில்லை.
ஆரம்பத்தில் அடோப் ஃபிளாஸ் வீடியோவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இத்தளம் இன்று விண்டோஸ், ஆப்பிள், லினக்ஸ் வகைக் கணினிகளுக்கு ஏற்ற வகையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு தரப்படுத்தப்பட்டுள்ளது. மேம்பட்ட வீடியோ தரமான ஹெச்டி (HD) வடிவத்திலும், 3டி (3D) மற்றும் ஹெச்டிஎம்எல்5 (HTML 5) தொழில் நுட்பங்களும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
செல்பேசிகளில் பார்ப்பதற்கு வசதியாக 3ஜிபி (3gb) என்ற வீடியோ தரத்தைப் பின்பற்றுகிறது. இது இணைய வசதியுள்ள பெரும்பாலான செல்பேசிகளில் வீடியோக்களை காண உதவும் வசதியாகும்.
செல்பேசி வழியாக பயன்படுத்த விரும்புவோர் www.m.youtube.com என்று இணைய முகவரியைப் பயன்படுத்தவேண்டும்.

ஒவ்வொரு நொடியும் 1 மணி நேரத்திற்கு ஓடக் கூடிய வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.ஒரு நாளில் சுமார் 4 பில்லியன் வீடியோக்கள் யுட்யூப் இணையதளம் வழியாக பார்க்கப்படுகிறது.

இன்று முக்கிய நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பும் செய்யப்படுகின்றன. வர்த்தக நிறுவனங்களின் விளம்பரங்கள் தொடங்கி கல்வி கற்றுத்தர, குறும்படங்களைப் பகிர்ந்து கொள்ள, நம் இல்லங்களில் நடைபெறும் விழாக்களை வீடியோ பதிவாக்கி நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள என்று பல வழிகளிலும் பயனுள்ளதாக யு ட்யூப் தளம்  இருக்கிறது.
சமீபத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்வி சார்ந்த புதிய பகுதி ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்களுக்கு அறிவியல், கணிதம் என்று கற்பதற்கு கடினமான பாடங்கள் கூட எளிதாக கற்க வீடியோக்களாக்கி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இத்தளத்தை www.youtube.com/education,
www.youtube.com/schools என்ற முகவரியில் சென்று பார்க்கலாம். Related Posts with Thumbnails

கூகுள் பயன்பாட்டில் உதவும் மென்பொருள்கள்


ணையப் பயனரின் முதல் தேர்வாக இருக்கும் கூகுளின் பல்வேறு சேவைகளைப் பயன்படுத்துவோருக்கு உதவும் சிறு சிறு மென்பொருள்கள் இணையத்தில் கிடைக்கின்றன. அதில் சிலவற்றை இங்கு தருகிறோம்.

கூகுள் மெயில் பேக்கப்:
ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவர்கள் அதிலுள்ள அனைத்து மின்னஞ்சல்களையும் கணினிக்கு பதிவிறக்கம் செய்ய இம்மென்பொருள் உதவுகிறது.
இதனை தரவிறக்கம் செய்ய: http://www.gmail-backup.com/

கூகுள் புக் டவுன்லோடர்:
கூகுள் புக் தளத்திலிருக்கும் புத்தகங்களில் உங்களுக்குப் பிடித்ததை பிடிஎப் வகைக் கோப்பாக மாற்றித் தரவிறக்கித் தர உதவும் மென்பொருள் இது.

இதனைத் தரவிறக்கம் செய்ய: http://www.gbooksdownloader.com/

கூகுள் பிக்காசா:
கூகுள் போட்டோஸ் தளத்தில் உங்கள் புகைப்படங்களை பதிவேற்ற, பதிவிறக்க, தேட, எடிட் செய்ய எனப் பல வசதிகளைத் தரும் கூகுளின் பயனுள்ள மென்பொருள்.

தரவிறக்கம் செய்ய: http://picasa.google.com/
. Related Posts with Thumbnails

ஹேக்கர்களிடமிருந்து உங்கள் தகவல்களைப் பாதுகாக்க..

இணையம் சார்ந்த பயன்பாட்டில் உள்ளவர்களுக்கு எப்போதும் ஒரு பயம் இருக்கும். அது நம்முடைய தகவல்களை எவரேனும் திருடிவிட்டால் (hacking) என்ன செய்வது என்பதுதான்.

நான் என்ன அவ்வளவு முக்கியமானவனா? என் தகவல்களை வைத்து என்ன செய்து விடமுடியும்? என்று சிலர் கேட்கலாம். தகவல் திருடர்களுக்கு (ஹேக்கர்) நீங்கள் யார் என்பதைவிட உங்களிடமுள்ள தகவலே முக்கியம். அவர்கள் தேடும் தகவல் உங்களிடம் உள்ளதா என்பதுதான் முதலில்.
அவர்களுக்குத் தேவையானது இல்லையென்றால் அவர்கள் உங்களிடமிருந்து விலகி விடுவார்கள். ஆனால், உங்களிடமிருந்து திருடப்பட்ட கடவுச் சொல், வங்கிக் கணக்கு ஆகிய விபரங்களை மாற்றிவிடவோ அல்லது உபயோகிக்க இயலாத வகையிலோ செய்து விடவோ கூடும். இங்குதான் உங்களுக்குப் பிரச்சனை தொடங்குகிறது.

தகவல் திருட்டைத் தடுக்க சில அடிப்படையான வேலைகளை உங்கள் கணினியில் செய்யவேண்டும்.

ஆண்டிவைரஸ் மற்றும் ஃபயர்வால் (Antivirus & Firewall)
கணினியில் நல்ல நிலையில் இயங்கக் கூடிய ஆண்டிவைரஸ் மென்பொருளைப் பயன்படுத்தவும். தினமும் அப்டேட் செய்வது அவசியம். அதே போல ஃபயர்வால் தொகுப்பும் சிறப்பாக இயங்கும் வண்ணம் இருக்கவேண்டும். விண்டோஸ் ஃபயர்வால் இருந்தாலும், அதைவிட சிறந்த வேறு பல உள்ளன. அவற்றைப் பயன்படுத்துவது நன்மை தரும்.

பதிவிறக்கம் மற்றும் இணைப்புகள் (Download & Attachments)
மின்னஞ்சல் விளம்பர இணைப்புகள், இலவச மென்பொருள்கள் மற்றும் பதிவிறக்க இணைப்புகளைக் கிளிக் செய்யும் முன் கவனமாக இருக்கவும். பதிவிறக்கினால் முழுமையான வைரஸ் சோதனைக்கு உட்படுத்தவும். அடுத்தது போலி மின்னஞ்சல்கள் உதாரணமாக கணக்கு வைத்திருக்கும் வங்கியிலிருந்து கணக்கு விபரங்களைக் கேட்டு வரும்  மின்னஞ்சல்
களைக் குறிப்பிடலாம். இவற்றில் வரும் இணைப்புகளைக் கிளிக் செய்தால் போலியான தளத்திற்கோ, கணினிக்கு தீங்கிழைக்கும் கோப்புகளோ பதிவிறக்கமாகக் கூடும். எனவே கவனம் தேவை.

கடவுச் சொல் (Password)
ஏற்கனவே நாம் குறிப்பிட்டு வருவதுதான். உங்கள் மின்னஞ்சல், சமூக வலைத்தளக் கணக்குகளில் உள்ள உங்கள் கடவுச்சொல்லை எளிதாக கண்டுபிடிக்கும்படியாக இல்லாமல் மூன்றடுக்குப் பாதுகாப்பாக உருவாக்கவேண்டும். அதாவது எண், எழுத்து மற்றும் புள்ளி, கோடு உள்ளிட்ட சிறப்புக் குறியீடுகள் கொண்டதாக உருவாக்க வேண்டும்.
விளக்கமாக அறிய  10 நிமிடம் போதும் உங்கள் பாஸ்வேர்டைத் திருட..  என்ற எனது முந்தைய பதிவைப் படிக்கவும்.

இணையக் கணக்கிலிருந்து பாதுகாப்பாக வெளியேறுதல் 
வங்கிக் கணக்கு, மின்னஞ்சல் கணக்கு, சமூக வலைத்தளக் கணக்கிலிருந்து வெளியேறும்போது அதற்கான கட்டளைகளைக் (Sign Out or Log Out) கொடுத்து வெளியேறவும். அதேபோல வெளியிடங்களில் பயன்படுத்தும் கணினிகளில் குக்கீகள், தற்காலிக இணையக் கோப்புகள் ஆகியவற்றை முழுமையாக நீக்கவும். இதற்கு இணைய உலாவி (பிரௌசர்) திறந்திருக்கும் நிலையில் Ctrl+Shift+Del கீகளை ஒரே நேரத்தில் அழுத்தவும்.  வரும் கிளியர் ஆல் ஹிஸ்டரி விண்டோ (Clear all history) வில் எவ்ரிதிங் (Everything) என்பதற்குக் கீழே உள்ள அனைத்தையும் டிக் செய்து கிளியர் நவ் (Clear Now) என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.

தகவல்களைப் பாதுகாத்தல் (Data Backup)
இவை எல்லாவற்றையும் விட உங்கள் தகவல்களை முறைப்படி எப்போதும் வேறு ஒரு இடத்தில் அதாவது சிடி, ஹார்ட்டிஸ்க் அல்லது வேறொரு கணினியில் பேக்கப் செய்து வைத்துக் கொள்ளவும். இச்செயலை முறைப்படி செய்யக் கூட நல்ல மென்பொருள்கள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றையும் பயன்படுத்தலாம்.
, Related Posts with Thumbnails

லேப்டாப், அல்ட்ராபுக், நெட்புக், டேப்ளட் என்ன வித்தியாசம்


மாநில அரசு லேப்டாப் (மடிக்கணினி) வழங்குவதாக அறிவிக்க, மத்திய அரசோ டேப்ளட் கணினி வழங்குவதாக அறிவிக்கிறது.  கணினி நுட்பம் மனிதனோடு கலந்து இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்ட  சூழலில் பல பெயர்களில் வரும் தொழில் நுட்பங்கள் அனைவரையும் சற்றுக் குழப்பமடைய வைப்பது உண்டு. அப்படிப்பட்ட குழப்பம் லேப்டாப், டேப்ளட், அல்ட்ரா புக், நெட்புக் என்று வரும் கணினிகளைப் பார்க்கையிலும், பெயர்களைக் கேட்கும் போதும் ஒன்றுக்கொன்று என்ன வேறுபாடு என்ற சந்தேகம் ஏற்படும். இவற்றின் பொதுப் பயன்பாடு ஒன்று போல இருப்பினும், பயனரின் தேவை கருதியே இவை உருவாக்கப்படுகின்றன.


மடிக்கணினி (Laptop)
நமக்கு பரிச்சயமான கணினி இதுதான். மடித்து எடுத்துச் செல்லும் வசதியுடன் 2 கிலோ முதல் 3.5 கிலோ அளவிலான எடையும், திரை அளவு 14 அல்லது 15 அங்குல அளவும் இருக்கும். 12 அங்குல அளவிலும் கிடைக்கின்றன. இதன் செயல்பாடு மற்றும் உபயோகம் மேசைக்கணினிக்கு இணையானதாகும்.

நெட்புக் (Net Book)
எடை குறைவாக, 10 அங்குலத் திரை அளவிலும் இருக்கும். சிறிய வகைக் கணினிகளைப் பொறுத்த வரை இணையப் பயன்பாடே பிரதானமாகக் கொள்ளப்படுகிறது.  அத்துடன் வேர்ட், எக்செல், பவர்பாயிண்ட் மென்பொருள்களில் அலுவலகப் பணிகளையும், பிடிஎப் உள்ளிட்ட மின்புத்தகக் கோப்புகளைப் படிக்கவுமே அதிகமாகப் பயன்படுகின்றன. கிளவுட் கம்ப்யூட்டிங் முறையில் இயங்கும் கணினிகளும் இந்த வகையில் வரும். உதாரணமாக குரோம் புக். பெரிய எதிர்பார்ப்போடு வந்து தோல்வியடைந்தது.

அல்ட்ரா புக்  (Ultra Book)
கணினிகளின் அளவைக் குறைப்பது என்பது தொடர்ந்து தொழில்நுட்ப ரீதியாக ஆராயப்பட்டு வரும் ஒரு விஷயமாகும். எடுத்துச் செல்ல எளிதாக இருக்கவேண்டும் அதே நேரத்தில் செயல்பாடும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். அத்தகைய எண்ணத்தில் உருவானவையே அல்ட்ரா புக் கணினிகள். ஒரு அங்குலத்திற்கும் குறைவான தடிமனும், அதிக நேரம் தாக்குப்பிடிக்கும் பேட்டரியும் இக்கணினிகளின் சிறப்பம்சமாகும். ஆனால் இவற்றின் விலை மிக அதிகமாகும்.

இந்த வகைக் கணினிகள் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள மேக்புக் ஏர் கணினிக்கு போட்டியாக இருக்கும் என்று சந்தை வல்லுனர்கள் குறிப்பி
டுகின்றனர். இக்கணினிகளை தயாரிப்பதில் இன்டெல் நிறுவனம் பெரும் பங்காற்ற உள்ளது. அசூஸ் மற்றும் ஏசர் நிறுவனங்கள் இக்கணினிகளைத் தயாரித்து சந்தைப்படுத்துவதில் ஆர்வம் காட்டிவருகின்றன. இதில் டிவிடி டிரைவ் கிடையாது. ஆனால் 4ஜி மற்றும் ஒய்ஃபி இணையத் தொழில்நுட்ப வசதிகள் இருக்கும்.

டேப்ளட்  (Tablet PC)
7 அங்குல அளவில் கைக்கு அடக்கமாக, கைபேசியைப் போல வைத்துக் கொள்ள எளிமையாக இருப்பவைதான் டேப்ளட் கணினிகள். இதில் தொடுதிரை வசதியும், இணையத்துடன் தொடர்பு கொள்ள ஜிபிஆர்எஸ், 3ஜி,  ஒய்ஃபி உள்ளிட்ட வசதிகளும் இருக்கும்.

இது இணையத்தில் உலாவ, ஒளிப்படங்களைப் பார்க்க, வீடியோ காட்சிகளைப் பார்க்க, மின்புத்தகங்களைப் படிக்க, கணினி விளையாட்டுக்களை விளையாட உதவும்.
2500 ரூபாய் விலையில் தொடங்கும் ஆகாஷ், அதற்குப் போட்டியாக வந்திருக்கும் பேன்டெல் (ரூ.3250), ஐரா (ரூ.4000), இன்டெக்ஸ் டேப்ளட்.. என்று இன்னும் வரவிருக்கும் பல டேப்ளட்களின் வருகையும் இவற்றை வாங்க லட்சக்கணக்கானோர் ஆன்லைனில் பதிவு செய்து காத்திருப்பதையும் பார்க்கும்போது செல்போன்களுக்கு அடுத்து மக்களிடையே வேகமாக பிரபலமாகவிருப்பது இவையாகத்தான் இ‌ருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.
. Related Posts with Thumbnails

குழந்தைகளின் ஓவியத் திறமையை வளர்க்க உதவும் இணையதளம்

சிறிய குழந்தைகளுக்கு படம் வரையவும், வண்ணங்களை பிரித்தறிந்து கொள்ளவும் ஓவியப் புத்தகங்கள் வாங்கிக் கொடுப்போம். அத்தகைய பல படங்களை இணையத் திலிருந்தே தரவிறக்கி பிரிண்ட் செய்து பயன்படுத்த உதவும் வகையில் கலரிங் என்ற இணையதளம் உள்ளது.

 இத்தளத்தில் வண்ணம் தீட்ட, எண்களை வரிசையாக இணைத்து படம் வரைதல், ஆன்லைனில் விளையாட சிறிய விளையாட்டுக்கள் என்று குழந்தைகளுக்குப் பயன்படும் பல புதுமைகளைக் கொண்டிருக்கிறது.

வண்ணம் தீட்டும் பிரிவில் கார்ட்டூன் படங்கள், விலங்குகள், இயற்கை காட்சிகள் என பல படங்கள் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன. உங்கள் வீட்டுக் குழந்தை ஓவியர்களுக்கு நல்ல தீனியாகவும், விடுமுறைக் காலத்தை பயனுள்ளதாக மாற்றவும் உதவும்.

தள முகவரி : http://www.coloring.ws
. Related Posts with Thumbnails

டிஜிட்டல் கேமரா வாங்கும்போது கவனிக்க வேண்டியவை

புகைப்படக் கேமரா என்றழைக்கப்பட்ட படச்சுருள் இணைந்த கேமராக்களின் காலம் மலையேறிப் போய் இன்று மின்னணு ஒளிப்படக் கருவி என்றழைக்கப்படும் டிஜிட்டல் கேமராக்களின் காலம் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. கைபேசியுடன் இணைந்த கேமராக்கள் வந்தபிறகு மக்களிடையே ஒளிப்படத்தின் மீதான ஆர்வம் அதிகமாகியிருக்கிறது. ஆனால், கேமரா என்பது கைபேசிக்கு கூடுதல் வசதி மட்டுமே. படத்தின் தரம் குறைவாகவே இருக்கும்.
6X4 என்ற  Maxi அளவு படத்தை பிரிண்ட் செய்ய குறைந்தபட்சம் 540X360 என்ற பிக்சல் அளவு ரெசல்யூசன் தேவைப்படும். ஆனால் இந்த அளவு ரெசல்யூசனைத் தரக்கூடிய கைபேசிகளின் விலை கேமரா விலையைவிட பல மடங்கு அதிகமாகும்.டிஜிட்டல் கேமரா புதிதாக வாங்குபவர்கள் சில முக்கியமான விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்.முதலில் பொழுதுபோக்குக்காகவா அல்லது தொழில் முறை (Professional) யாக படம் பிடிக்க வாங்கப் போகிறீர்களா என்பதைப் பொறுத்தே மாடல்களைத் தேர்வு செய்யவேண்டும். 
பிக்சல் மற்றும் லென்ஸ் அளவு
பொழுதுபோக்கிற்கு என்றால் லென்ஸ் 18-55 எம்.எம் அளவும் 8 முதல் 14 மெகாபிக்சல்களும் (Mega Pixel) , தொழில் முறைக்காக எனில் 18-135 எம்.எம் அளவும் 12 முதல் 21 மெகாபிக்சல்களும் கொண்ட கேமராக்களை தேர்வு செய்யலாம். 
ஆப்டிகல் ஜூம்
தூரத்தில் உள்ளவற்றை படம்பிடிக்க உதவும் வசதி. இது 3x, 4x, 6x, 8x  என்று பலவகை இருக்கும். இதில் எது உங்களுக்குப் போதுமானது என்பதைத் தீர்மானிக்கவும். 
பேட்டரி
அல்கலைன் பேட்டரிகள் என்றால் நீங்கள் 30 அல்லது 40 ஒளிப்படங்கள் எடுத்த பிறகு புதிய பேட்டரியை வாங்க வேண்டியதிருக்கும். அதுவே நிக்கல் மெட்டல் ஹய்ட்ரைட் பேட்டரிகளை ரீசார்ஜ் செய்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். செல்போன் பேட்டரிகளைப் உள்ள லித்தியம் அயர்ன் பேட்டரிகள் நிக்கல் பேட்டரிகளைவிட அதிகத் திறன் உள்ளவை. பேட்டரிக்கான சார்ஜர்களிலும் தரத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கவும்.
கொள்ளளவு
கேமராக்களின் உள் நினைவகம் குறைவாகவே இருக்கும். மெமரி கார்டுகள் குறைந்தது 2 ஜிபி அளவாவது இருக்க வேண்டும். கூடுதலாக எத்தனை ஜிபி வரை பயன்படுத்த முடியும் என்ற விவரத்தையும் பார்க்கவும்.
எஸ்எல்ஆர் வகை
பொழுதுபோக்கிற்காக உபயோகிக்க கையடக்க கேமராக்கள் (Point and Shoot) போதுமானவை. தொழில்முறை கலைஞர்களுக்கு நல்ல தரமான படங்கள் எடுக்க எஸ்எல்ஆர் (Single Lens Reflex)வகைக் கேமராக்களே சிறந்தவை.
பிற கூடுதல் வசதிகள்
பொதுவாக ஒளிப்படக் கேமராக்களில் வீடியோ எடுக்கும் வசதி என்பது பெயரளவில்தானே தவிர முழுமையானதாக இருக்காது. தற்போது வரும் சில வகை கேமிராக்களில் உயர் தர வீடியோ (HD Video) பதிவு வசதி உள்ளது. இதுபோலவே எல்ஈடி, எல்சிடி டிவியில் இணைத்துப் படங்களைப் பார்க்க உதவும் HDMI அவுட்புட், தொடுதிரை வசதி ஆகியவற்றுடனும் கேமராக்கள் கிடைக்கின்றன.
கூடுதல் வசதிகள், தேவையைப் பொறுத்து விலையும் மாறுபடும்.
. Related Posts with Thumbnails

விண்டோஸிற்கு கூடுதல் வசதிகள் தரும் எக்ஸ்ட்ரா பட்டன்ஸ்

விண்டோஸ் கணினியில் உள்ள மென்பொருள்களை இயக்கும்போதும், ஃபோல்டர்களைத் திறக்கும்போதும் மேல் பகுதியில் மினிமைஸ் (Minimize), மேக்சிமைஸ் (Maximize) மற்றும் குளோஸ் (Close) பட்டன்களைப் பயன்படுத்துவோம். இந்த பட்டன்களுடன் கூடுதலாக மினிமைஸ் டூ ட்ரே (Minimize to Tray), டிரான்ஸ்பிரண்ட் விண்டோ (Transparant), விண்டோ டூ பாக்ஸ் (Window to Box), ஆல்வேஸ் ஆன் டாப் (Always on top) என்ற அனைத்து விண்டோக்களுக்கும் முதன்மையான விண்டோவாக மாற்றும் செயல்பாடு, மெனு இல்லாத முழுமையான விண்டோவாக மாற்ற (Full Screen) என்பது உள்ளிட்ட 10 விதமான பட்டன்களைத் தரக்கூடிய எக்ஸ்ட்ரா பட்டன்ஸ் என்ற மென்பொருள் வெளியிடப்பட்டுள்ளது.
இது விண்டோஸ் 98, எக்ஸ்பி, விண்டோஸ் 7 உள்ளிட்ட அனைத்து இயங்குதளங்களிலும் இயங்கும் என்று கூறப்படுகிறது. 1.3 எம்பி அளவே உள்ள இம்மென்பொருள் முற்றிலும் இலவசமாகும்.
இம்மென்பொருளை பதிவிறக்கம் செய்யும் இணைய முகவரி:   http://www.xtrabuttons.com/files/eXtraButtons.exe
. Related Posts with Thumbnails

கூகுளின் தனியுரிமைக் கொள்கை நன்மையா?


ணையதள உலகில் பெரியண்ணனாக இருக்கும் கூகுள் மார்ச் முதல் புதிய தனியுரிமைக் கொள்கைக்கு (google privacy policy) மாறியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை சென்ற ஜனவரியில் தன் பயனர்கள் அனைவருக்கும் அனுப்பியிருந்தது.

அது என்ன பிரைவஸி பாலிசி? நாம் பயன்படுத்தும் இணையதளங்களில் பயனர் கணக்குத் தொடங்கும்போது எங்கள் கொள்கைகளைப் படித்துப் பார்த்து ஒத்துக்கொள்கிறீர்களா என்று மிக நீண்ட கட்டுரை போலக் கொடுத்து கேட்கும். அதுவே அந்த இணையதளத்தின் தனியுரிமைக் கொள்கைகளாகும்.
இக்கொள்கையைப் படித்துப் பார்த்து ஒத்துக் கொள்வதாக இருந்தால் அடைப்புக் கட்டத்தில் ‘டிக்’ செய்யவேண்டும். இதனை பெரும்பாலும் யாரும் படிப்பதில்லை. ‘டிக்’ மட்டும் கொடுத்து பயனர் கணக்கைத் தொடங்குவதே வழக்கமாக இருக்கிறது. இதை முழுமையாகப் படித்துப் பார்த்தால் தெரியும் நம்மை அந்நிறுவனத்திடம் ஒப்படைத்த கதை.
நமக்கு இலவச சேவை தருகிறார்கள். அவர்களுக்கு ஏதோ கொள்கை இருக்கிறது. அது நம்மை என்ன செய்து விடப்போகிறது? எங்கேயோ இருப்பவன் வந்து என்ன செய்துவிட முடியும்? நான் மட்டுமா, கோடிக்கணக்கான பேர் ஒத்துக்கொண்டுவிட்டார்களே? என்று கேட்கலாம்.எல்லாரும் ஒத்துக் கொண்டனர் என்பதுகூட தவறானதுதான். ஒரு நாலு வரியில் “உங்களைக் கண்காணிப்போம், உங்கள் விருப்பத்தை, உங்கள் தேவைகளை, உங்கள் சுய விபரத்தை கேட்பவர்களுக்கு விற்றுக் காசாக்குவோம்” என்று நாலு வரியில் கொடுத்திருந்தால் நீங்கள் ‘டிக்’ அடித்து ஓகே செய்திருப்பீர்களா?
ஆனால், அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. உங்களுக்குத் தேவையான சேவையை வழங்குவதில் போட்டி போடுகிறார்களே என்று சந்தோஷப்படாதீர்கள். உங்களிடம் பெரியதாக எதையோ எதிர்பார்க்கிறார்கள் என்பதே உண்மை.
நம்மை வைத்து இவர்கள் என்ன செய்வார்கள் என்று கேட்கிறீர்களா? நீங்கள் கூகுளின் ஆர்குட் அல்லது பிளஸ் சமூக இணையதளத்தில் நீங்கள் வாங்கிய புதிய கைபேசி குறித்து பகிர்ந்து கொண்டாலோ அல்லது கூகுள் தேடலில் குறிப்பிட்ட பொருள் குறித்து நீங்கள் தேடினாலோ அது உங்கள் கூகுள் கணக்கில் சேமிக்கப்படும். அடுத்த முறை கூகுளின் மற்றொரு சேவையைப் பயன்படுத்தும்போது உங்கள் விருப்பம் சார்ந்த விளம்பரங்கள் காட்டப்படும்.உங்கள் விருப்பத்திற்குரிய விஷயம் விளம்பரமாக மாறும் யுக்தி இதுதான். இப்படித்தான் உங்களை மற்றவர்களிடம் விற்கிறார்கள்.
தற்போது இக்கொள்கையில்தான் மாற்றம் கொண்டுவந்துள்ளது கூகுள். எப்படி என்றால், கூகுளில் கணக்குத் தொடங்கும் ஒருவர், அதன் மின்னஞ்சல் சேவை, கூகுள் தேடல் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட சேவைகளைப் பயன்படுத்தலாம். இச்சேவைகளுக்கென்று தனித்தனியாக இருந்த தனியுரிமைக் கொள்கையைத்தான் தற்போது அனைத்திற்கும் ஒரே மாதிரியாக மாற்றியமைத்திருக்கிறது.கூகுளின் சர்வரில் சேமிக்கப்படும் இத்தகவல்களை பயனர் விரும்பினால் ஹிஸ்டரி (History) பகுதியில் சென்று அழித்து விடலாம் என்பது கூடுதலாக கூகுள் செய்திருக்கும் ஒரு நன்மை.
ஆனால், அதற்கு முன்பாக அத்தகவல் மற்றவர்களுக்கு கடத்தப்பட்டிருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை. இது கூகுளுக்கு மட்டுமல்ல ஃபேஸ்புக், டிவிட்டர், யாகூ உள்ளிட்ட அனைத்து இணையதளங்களுக்கும் பொருந்தும். இதை நியாயப்படுத்தும் விதமாக கூகுள் தலைவர் இப்படிக் கூறுகிறார் “ஒரு விஷயத்தை மற்றவர்கள் தெரிந்து கொள்ளக்கூடாது என்று நீங்கள் நினைத்தால், அந்த விஷயத்தை நீங்கள் செய்திருக்கவே கூடாது” என்று. ஆம். உங்களைப் பற்றிய தனிப்பட்ட விபரங்களை இணையத்தில் பகிர்ந்து கொள்ளும்போது கவனமாக இருக்கவேண்டும். உங்களுக்குத் தொல்லை தரும் என்று தோன்றினால் அதனை பதிவிடாமல் இருப்பதே நலம்.
,
Related Posts with Thumbnails

போட்டோஷாப் மற்றும் கிம்ப் கற்றுக் கொள்ள


புகைப்படங்களுக்கு மெருகூட்ட, இணையதளப் பக்கங்களை வடிவமைக்க என்று பல வேலைகளுக்கும் பேருதவியாக இருப்பது அடோப் போட்டோஷாப் (Adobe Photoshop)மென்பொருளாகும்.
1988ஆம் ஆண்டில் அடோப் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இது பல மேம்படுத்தல்களைப் பெற்று இன்று சிறப்பான இடத்தை அடைந்துள்ளது.

இதேபோன்ற பயன்பாட்டுடன் பல நிறுவனங்களும் மென்பொருள்களை வெளியிட்டுள்ளன. செரீப் போட்டோபிளஸ் (Serif Photoplus), கோரல் போட்டோ பெய்ண்ட் (Corel Photo Paint), ஓப்பன் சோர்ஸ் கிம்ப் (Gimp) ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவையாகும்.
புகைப்படம் சார்ந்த பணிகளுக்கென்று பயன்படுத்த எளிதாக பிக்காசா (Picasa), இர்பான் வியூ (Irfan View), ஏசிடிசி (Acdcee) ஆகிய மென்பொருள்கள் கிடைக்கின்றன.
கறுப்பு - வெள்ளை, கிரேஸ்கேல், கூடுதல் வண்ணம் சேர்த்தல், பிரேம்கள் இணைத்தல், சிலைட்ஷோ எனப்படும் புகைப்படங்களை வீடியோவாக மாற்றும் வசதி ஆகிய பல சிறு சிறு வேலைகளை இம்மென்பொருள்களைக் கொண்டே எளிமையாக எவரும் செய்யலாம்.
இதற்கென இம்மென்பொருள்களில் முன்பே செட் செய்யப்பட்ட டெம்ப்ளேட் (Template) வசதிகள் உதவுகின்றன.
ஆனால் போட்டோஷாப், கிம்ப் மென்பொருள்களில் பணிபுரிய கூடுதலான திறமையும், மென்பொருள் குறித்த முழுமையான அறிவும் தேவை.
போட்டோஷாப் புதிதாகக் கற்றுக் கொள்பவர்களுக்கென தமிழில் பல புத்த
கங்கள் கிடைக்கின்றன. இணையத்திலும் வீடியோக்களுடன் சொல்லிக் கொடுக்கக்கூடிய டியூட்டர் தளங்கள் இருக்கின்றன. ஓய்வு நேரத்தில் இவற்றைப் பயன்படுத்தி எவரும் கற்றுக் கொள்ள முடியும்.
போட்டோஷாப் மென்பொருளில் டூல்களை முழுமையாக அறிந்து கொள்ள  http://simplephotoshop.com/ என்ற இணையதளம் உதவும்.
போட்டோஷாப் மென்பொருளைக் கற்றுக் கொள்ள உதவும் தளங்கள் சில:
www.photoshopintamil.blogspot.in
www.tamilpctraining.blogspot.in
www.photoshopcafe.com
www.metaeffect.com
www.deaddreamer.com
www.planetphotoshop.com
www.photoshoptechniques.com
போட்டோஷாப் அளவிற்கு இல்லாவிட்டாலும் முக்கியமான அனைத்து வேலைகளையும் செய்ய உதவும் மாற்று மென்பொருள் கிம்ப். இது ஓப்பன் சோர்ஸ் அடிப்படையில் அமைந்த இலவச மென்பொருளாகும்.
விண்டோஸ், லினக்ஸ் இயங்குதளங்களில் பணிபுரியக்கூடியது. போட்டோஷாப் மென்பொருளை விலை கொடுத்து வாங்க விரும்பாதவர்கள் கிம்ப் பயன்படுத்தலாம். தொடர்ந்து மேம்படுத்தல்கள் நடைபெறுவதால் விரைவில் போட்டோஷாப்பிற்கு இணையாக மாறும் என்று எதிர்பார்க்கப்
படுகிறது. கிம்ப் டவுன்லோட் செய்ய: www.gimp.org
கிம்ப் மென்பொருளை கணினியில் எப்படி பதிவது என்பதை அறிந்து கொள்ள
www.gimp.suthanthira.menporul.com
கிம்ப் கற்றுக் கொள்ள:
ww.techtamil.com/category/tutorials/gimp-tutorial/
gimp-tutorials.net
www.gimp-tutorials.com/
www.tutorialized.com/tutorials/Gimp/1
, Related Posts with Thumbnails

இணைய வளர்ச்சி புள்ளிவிவரம் - 2012



இணைய வளர்ச்சி புள்ளிவிவரம் - 2012
  • டிசம்பர் 2011 வரையிலான கணக்கீட்டின்படி 55.5 கோடி இணையதளங்கள் செயல்பாட்டில் உள்ளன. 2011ஆம் ஆண்டில் மட்டும் புதிதாக இணைக்கப்பட்டவை 30 கோடி.
  • மொத்த மின்னஞ்சல்களில் 71 சதவீதம் ஸ்பேம் (Spam) என்ற வேண்டாத குப்பைகளே நிறைந்திருக்கின்றன.
  • டாட் காம் (Dot Com) என்ற துணைப்பெயருடன் அமைந்த இணையதளங்களின் எண்ணிக்கை மட்டும் 9.55 கோடி.
  • 8.69 கோடி இணையதளங்கள் நாட்டின் பெயரை ( .uk, .in, .us போன்றவை) பின்னிணைப்பாகக் கொண்டவை.
  •  உலகில் 210 கோடிப் பேர் இணையப் பயன்படுத்துகின்றனர். இதில் 92.22 கோடிப் பேர் ஆசியாவைச் சேர்ந்தவர்கள்.
  •  இணையத்தைப் பயன்படுத்துவோரில் 45 சதவீதம் பேர் 25 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள்.
  •  உலகம் முழுவதும் 590 கோடிப் பேரிடம் கைபேசி உள்ளது. இதில் 120 கோடிப் பேர் கைபேசி இணைய இணைப்பு பெற்றவர்கள்.
தகவல் ஆதாரம்: இண்டெர்நெட் வேர்ல்ட் ஸ்டேட்ஸ், ஜனவரி 2012
Related Posts with Thumbnails

திக்குத் தெரியாத காட்டில்..

ஜிபிஎஸ் தொழில்நுட்பம்

புதிய ஊர், அறிமுகமில்லாத மனிதர்கள், புரியாத மொழி என்று திக்குத் தெரியாத காட்டில் மாட்டிக்கொண்ட அனுபவம் நம்மில் பலருக்கு உண்டு. அத்தகைய சூழ்நிலையில் நாம் செல்ல வேண்டிய இடத்தை, மற்றவர் உதவியின்றி நாமே கண்டறிந்து செல்ல உதவும் தொழில்நுட்பம்தான் ஜிபிஎஸ்.

குளோபல் பொசிஸனிங் சிஸ்டம் (Global Positioning System) எனப்படும் இத்தொழில்நுட்பம் செயற்கைக்கோள்களைக் கொண்டு நீங்கள் இருக்கும் இடத்தை அறிந்து வழி காட்ட அல்லது நீங்களே வழியை அறிந்து செல்ல உதவுகிறது.
1940ஆம் ஆண்டில் திசை காட்டும் கருவிகளுக்கு தரைப்பகுதி இலக்குகளைக் காட்ட பயன்படுத்தப்பட்ட மின் காந்த அலை தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு 1960ல் அமெரிக்கக் கடற்படைக்காக செயற்கைகோள்களைப் பயன்படுத்தி திசை அறிய உருவாக்கப்பட்டது.
அமெரிக்க ராணுவத்தில் ஏவுகணைகளை துல்லியமாக ஏவவும், கடற்படை, விமானப்படைக்கு வழிகாட்டவும் பயன்படுத்தப்பட்ட இத்தொழில்நுட்பம் 1983இல் பொதுமக்களும் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக கதவுகள் திறந்து விடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 1989ஆம் ஆண்டு முதல் ஜிபிஎஸ் பயன்பாட்டிற்கான 60 செயற்கை கோள்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது. இதில் 31 செயற்கைக் கோள்கள் செயல்பாட்டில் உள்ளன. அவற்றில் 24 மட்டுமே இச்சேவைக்கு பயன்படுத்தப்படுகின்றன. மற்ற செய‌ற்கைகோள்கள் ஸ்பேராக உள்ளன.
தற்போது இவைதான் வழிகாட்டும் சிக்னல்களை பூமிக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன. ஒரு இடத்தினை துல்லியமாக அறிய இந்த 24இல் 3  அல்லது 4 செயற்கைகோள்களின் மின் காந்த அலைகள் நமக்குத் தேவைப்படும். இவ்வலைகளின் வீச்சும், நேரமும் கணக்கிடப்பட்டு இருப்பிடம் கணிக்கப்படுகிறது.

ஜிபிஎஸ் நுட்பத்திற்கு அடிப்படையாக இருப்பது டாப்ளர் விதியாகும். அதன்படி ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்தை நோக்கிச் செலுத்தப்படும் மின் காந்த அலை, குறைந்த தூரத்தில் உள்ள இடமாக இருந்தால் நெருக்கம் அதிகமான கதிர்வீச்சையும், அதிக தூரமாக இருந்தால் நெருக்கமற்ற கதிர்வீச்சையும் கொண்டிருக்கும் என்பதாகும்.
வாகனங்களில் செல்வோருக்கு வழிகாட்டியாகவும், வாகனங்களை நிர்வகிப்போருக்கு இருந்த இடத்திலிருந்தே கண்காணிக்கும் வகையில், வாகனம் செல்லும் பாதை, வேகம், எரிபொருள் அளவு, இடையில் நின்ற இடம், நேரம் உள்ளிட்ட பல கூடுதல் விபரங்களையும் சேர்த்து  வழங்கிடும்படியாக இத்தொழில்நுட்பம் இன்று பலவகையிலும் மேம்பட்டிருக்கிறது.  இப்பணியில் ஜிபிஎஸ் ரிசீவர்கள், ஸ்மார்ட் போன்கள் உள்ளிட்ட கருவிகள் நமக்கு உதவுகின்றன. (வாகனங்களுக்கான  ஜிபிஎஸ் ரிசீவரின் விலை சுமார் 7000 ஆகிறது. இச்சேவையை வழங்கும் தனியார் நிறுவனத்திற்கு மாதம் ஒன்றிற்கு குறைந்தபட்சம் 200 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும்.)
உலகில் பல நாடுகளும் பொது மக்களுக்கான ஜிபிஎஸ் சேவையை அமெரிக்
காவிடமிருந்தே பெறுகின்றன. தவிர்க்க முடியாத, பாதுகாப்பை மேம்படுத்தக்கூடிய இத்தொழில்நுட்பத்தை ஒவ்வொரு நாடும் தனக்கென்று தனியாக உருவாக்கிக் கொள்வது அவசியத் தேவையாகும். அவ்வகையில் தங்களுக்கென தனித் தொழில்நுட்பத்தை ரஷ்யா குளோனாஸ் (GLONASS) என்ற பெயரில் உருவாக்கிப் பயன்படுத்தி வருகிறது, சீனா பெய்டூ (Beidou) என்ற பெயரில் உருவாக்கியுள்ளது. கூடுதலாக காம்பஸ் (COMPASS) என்ற பெயரில் உலக அளவிலான ஜிபிஎஸ் சிஸ்டத்தை 2020ஆம் ஆண்டிற்குள் உருவாக்கும் முயற்சியையும் மேற்கொண்டுள்ளது. கலிலியோ (Galileo) என்ற பெயரில் ஜரோப்பிய யூனியனும், கியூஇசட்எஸ்எஸ் (QZSS) என்ற பெயரில் ஜப்பானும் உருவாக்கி வருகின்றன.

இந்தியாவில் ரஷ்ய நாட்டின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் இஸ்ரோ இந்தியன் நேவிகேஷனல் சிஸ்டம் (IRNSS) என்ற நுட்பத்தை உருவாக்கி வருகிறது. இதன்படி 6 மாதத்திற்கு ஒரு செயற்கைகோள் வீதம் அனுப்படும். இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இத்திட்டம் செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட விக்கி உரலிகளைப் பார்க்கவும்
http://en.wikipedia.org/wiki/Global_Positioning_System
http://en.wikipedia.org/wiki/U.S._Department_of_Defense
http://en.wikipedia.org/wiki/Indian_Regional_Navigational_Satellite_System
http://en.wikipedia.org/wiki/GLONASS
http://en.wikipedia.org/wiki/Galileo_(satellite_navigation)
http://en.wikipedia.org/wiki/QZSS
http://en.wikipedia.org/wiki/Beidou_navigation_system
.


Related Posts with Thumbnails

கணினியில் ஓவியம் வரைய உதவும் எளிய மென்பொருள்


கணினியில் ஓவியம் வரைபவர்களுக்கு போட்டோஷாப், கோரல்டிரா, இல்லஸ்ட்ரேட்டர் எனப் பல வகை வணிக மென்பொருள்கள் உள்ளன.
ஆனால் ஓவியம் வரைவதற்கென்று இலவசமாகக் கிடைக்கக்கூடிய ஓரிரு மென்பொருள்களில் தற்போது வந்துள்ள ஸ்மூத் டிரா (Smooth Draw) மென்பொருள் சிறந்ததாக உள்ளது.

இதில் பேனா (Pen), பென்சில் (Pencil), வாட்டர் கலர் (Water Colour), ஏர் ஸ்பிரே (Air Spray) எனப் பல்வேறு விதமான பிரஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. போட்டோஷாப் போன்ற முன்னணி மென்பொருள்களில் உள்ள பிளர் (Blur), சார்ப்னஸ்(Sharpness), பர்ன்(Burn), ஸ்மட்ஜ்(Smudge) டூல்களும் லேயர் (Layar) வசதியும் இதில் உள்ளது. எளிய தோற்றமும், எவரும் புரிந்து கொள்ளும் விதமாகவும் வடிவமைக்கப்பட்ட இம்மென்பொருளில் வரைந்த படங்களை JPEG, PNG, TIFF, BMP, GIFF உள்ளிட்ட முன்னணி படக் கோப்பு வடிவங்களாக சேமிக்கமுடியும்.
2 எம்பி அளவேயுள்ள இம்மென்பொருள் இலவசமாகக் கிடைக்கிறது. தரவிறக்கம் செய்ய: http://www.smoothdraw.com/
. Related Posts with Thumbnails

மாற்றங்களை ஏற்படுத்தும் சமூக வலைத்தளங்கள்!


மூக வலைத்தளங்கள் பொழுது போக்கிற்கானது என்பதையும் தாண்டி இன்று கருத்துப் பரிமாற்றம், தகவல் பரிமாற்றம், தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு, சமூகப் பணிகளுக்கு என்று பல பரிமாணங்களுடன் மாறியிருக்கிறது.
தொடக்கத்தில் மின்னஞ்சல் கணக்கு வைத்திருப்பது கௌரவமாகக் கருதப்பட்டது.  ஆனால் இன்று அந்நிலை மாறி சமூகவலைத்தளக் கணக்கு வைத்திருப்பதே ஒரு கௌரவமாக பார்க்கப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் மின்னஞ்சல் முகவரியை கேட்கும் இளைகஞர்களைவிட ஃபேஸ்புக், டிவிட்டர், ஜிபிளஸ், ஆர்குட், யுடியூப் கணக்கு குறித்த பேச்சே அதிகமாக இருக்கிறது.
வருங்காலத்தில் மின்னஞ்சல்களே இல்லாமல் போகும் சூழல்கூட ஏற்படலாம் என்று தொழில்நுட்பத் துறையினர் கூறும் அளவிற்கு சமூக வலைத்தளங்கள் வளர்ந்துள்ளன. இதற்குக் காரணம் மின்னஞ்சலை விட வேகமான செய்திப் பரிமாற்றம் சமூக வலைத்தளங்களில் நடைபெறுவது
தான். தற்போது கையடக்க கணினியாக வலம் வரும் ஸ்மார்ட் போன், டேப்ளட் பிசி ஆகியவற்றின் மூலமாகப் பெருமளவு சமூக வலைத்தள உறுப்பினர்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வது அதிகரித்துள்ளது.
இன்று சுமார் 314 கோடி மின்னஞ்சல் கணக்குகள் உள்ளன. இதில் ஒரு நபரே நான்கு, ஐந்து மெயில் ஐடிகள் வைத்திருப்பதும் உள்ளடங்கும்.  சமூக வலைத்
தளங்களில் உறுப்பினராக உள்ளவர்களின் எண்ணிக்கை ஃபேஸ்புக்கில் 80 கோடியும், டிவிட்டரில் 20 கோடியும், லிங்க்டு இன் தளத்தில் 13.5 கோடிப் பேரும், குரூப்ஆன் தளத்தில் 11.5 கோடிப் பேரும், கூகுள் பிளஸ்ஸில் 9 கோடிப் பேரும், சீனாவைச் சேர்ந்த சமூக வலைத் தளங்களான ரென்ரென் 17 கோடிப் பேரையும், கியூ ஜோன் 50 கோடிப் பேரையும், சினா வைபோ 25 கோடிப் பேரையும், மற்றுமுள்ள பிற சமூக வலைத்தளங்களில் சுமார் 50 கோடிக்கும் அதிகமானோரும் உறுப்பினர்களாக உள்ளனர்.
இதன் மூலமாக சமூக வலைத்தள உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 276 கோடிக்கும் அதிகம் என்று தி ரியல் டைம் ரிப்போர்ட் டாட் காம் இணையதளம் மதிப்பிட்டுள்ளது. இதில் இந்தியர்கள் சுமார் 45 கோடிப் பேர் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேற்கண்ட கணக்கீடு மின்னஞ்சல் பயனர் எண்ணிக்கைக்கு இணையானதாகும். வரும் நாட்களில் இது மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளே உள்ளது.
அதேபோல ஒரு நாளுக்கு அனுப்பப்படும் மின்னஞ்சல்களின் எண்ணிக்கை சுமார் 24700 கோடி என்றும், சமூக வலைத்தளங்களில் அதே ஒரு நாளில் சுமார் 42 கோடி புதிய பதிவுகளும், 19 கோடி புகைப்படப் பதிவேற்றங்களும், 73 கோடி கருத்துக்களும் பரிமாறிக் கொள்ளப்படுவதாக உலக அளவிலான சமூக வலைத்தளக் கணக்கெடுப்பு டிசம்பர் 2011 குறிப்பிடுகிறது.
இன்று சமூக வலைத்தளங்களில் தனி நபர்கள் மட்டுமல்லாமல் நிறுவனங்களும் உறுப்பினர்களாக மாறியுள்ளனர். இதன் மூலம் பொருட்களை விளம்பரம் செய்யவும், வாடிக்கையாளர்களின் கருத்துக்களை நேரடியாக அறிந்து கொள்ளவும் முடிகிறது.வர்த்தகம் சார்ந்து இல்லாமல் இரத்த தானம், எய்ட்ஸ் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் எனப் பல உதவிகரமான சேவைகளுக்கும் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
எகிப்து புரட்சி, வால்ஸ்ட்ரீட் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களுக்கும்  ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக இணையதளங்களே தகவல் தொடர்பு காரணிகளாக செயல்பட்டன.இதன் எதிரொலியாக பல்வேறு நாடுகளும் இத்தளங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அமெரிக்காவும் அத்தகையதொரு சட்டத்தை இயற்றும் முயற்சியாக சோபா (SOPA ACT) சட்டத்தைக் கொண்டு வர முனைந்தது. ஆனால், கடும் எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக இது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Sources:
http://www.slideshare.net/stevenvanbelleghem/social-media-around-the-world-2011
http://therealtimereport.com/2012/01/20/social-networking-stats-google-hits-90-million-users-rltm-scoreboard/
.
. Related Posts with Thumbnails

கறுப்பு வெள்ளைப் படத்தை வண்ணப் படமாக மாற்ற


கறுப்பு வெள்ளைப் புகைப்படங்களை வண்ணப் புகைப்படமாக மாற்ற எளிமையான ஒரு மென்பொருள் உள்ளது.
இம்மென்பொருளில் உள்ள ஒரு பிரஸ் டூலைக் கொண்டு எந்த ஒரு கறுப்பு வெள்ளை (Black & White) மற்றும் கிரேஸ்கேல் (Grayscale) படத்தை நாம் விரும்பும் வண்ணத்தில் பிரஸ் செய்து மாற்றமுடியும்.

இம்மென்பொருளின் பெயர் இன்ஸ்டண்ட் போட்டோ கலர் (Instant Photo Color) ஆகும். 5 எம்பி அளவுள்ள இது இலவசமாகவே கிடைக்கிறது.   இம்மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய: http://clipping-path-studio.com/instantphotocolor/ Related Posts with Thumbnails

விரைவில் வெளிவரவிருக்கும் விண்டோஸ் 8 இயங்குதளம்

உலகின் பெரும்பாலான கணினிகள் பயன்படுத்தப்படும் விண்டோஸ் இயங்குதளத்தின் புதிய பதிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் வெளிவரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் சோதனைப் பதிப்பு (Beta Version) வரும் பிப்ரவரி மாதத்தில் கிடைக்கும் என்று தெரிகிறது.
விண்டோஸ் 7 (Windows 7) பதிப்பின் வெற்றியைத் தொடர்ந்து மேலும் புதிய வசதிகளுடன் இவ்வியக்கத் தொகுப்பை வடிவமைத்து வருகிறது மைக்ரோசாப்ட் நிறுவனம்.
இத்தொகுப்பு அடுத்த தலைமுறைக் கணினிப் பயன்பாடு என்று கூறப்படும் ஸ்மார்ட் போன் (Smart Phone), டேப்ளட் பிசி (Tablet PC) ஆகியவற்றிலும் பயன்படுத்தக் கூடிய வகையில் தயாரிக்கப்படுவது இதன் சிறப்பம்சமாகும்.
மேலும் இதனை விற்பனை செய்யவும், கூடுதல் மென்பொருள்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளவும் வசதியாக விண்டோஸ் ஸ்டோர் (Windows Store) என்ற ஆன்லைன் கடையையும் திறக்கிறது மைக்ரோசாப்ட். இது ஆப்பிள் அப்ளிகேஷன் ஸ்டோர் (Apple Application Store) மற்றும் கூகுள் ஆண்ட்ராய்ட் மார்க்கெட் (Google Android Market) ஆகிய வலைத்தள மென்பொருள் விற்பனை நிலையங்களை ஒத்த ஒரு வியாபார யுக்தியாகும்.
இதன் வாயிலாக இணைய இணைப்பின் மூலம் மட்டுமே விண்டோஸ் 8 இயங்கு தளத்தை நிறுவ முடியும் என்ற சூழலை மைக்ரோசாப்ட் உருவாக்கவிருக்கிறது. ஆகவே சிடி/டிவிடிக்களில் இவ்வியங்குதளம் வெளியிடப்படமாட்டாது என்பது உறுதியாகிறது.
இத்தகு யுக்தியைப் பயன்படுத்துவதனால் தற்போது உரிமை பெறாமல் (Pirated Software) பயன்படுத்தி வரும் விண்டோஸ் இயக்கப் பயனரை கட்டண முறைக்கு உட்படுத்துவது எளிதாகும் என்று மைக்ரோசாப்ட் கருதுவதாகத் தெரிகிறது.
மேலும் இந்த இணையதளத்தில் விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கான கூடுதல் இயக்க மென்பொருள்களும் (Addon Applications) வழங்கப்படவிருக்கின்றன. இதற்கான மென் நிரல்களை எவர் வேண்டுமானாலும் வடிவமைத்து வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜாவா (JAVA), சீ சார்ப் (C#), விசுவல் பேசிக் (Visual Basic) ஆகிய நிரல் மொழி
களைப் பயன்படுத்தி இத்தகு அப்ளிகேஷன் மென்பொருள்களை உருவாக்க முடியும். இதற்கான டெம்ப்ளேட்கள், டூல்ஸ் ஆகியவற்றை மைக்ரோசாப்ட் நிறுவனமே வழங்குகிறது.
. Related Posts with Thumbnails

2012ல் வரவிருக்கும் கணினி மாற்றங்கள்

ந்த ஆண்டில் கணினித் தொழில்நுட்பம் சென்ற ஆண்டு இருந்ததைவிட மேலும் பல கூடுதல் வசதிகளை மக்களுக்குப் பெற்றுத்தரும் என்றே சொல்லலாம்.

டேப்ளட் பிசி:
2012 டேப்ளட் பிசிக்களுக்கான ஆண்டு என்று குறிப்பிடும் அளவிற்கு அதன் பயன்பாடு அதிகரிக்கும் என்று பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். அலைபேசி வழியாக இணையத்தைப் பயன்படுத்தும் பலரும் இனி டேப்ளட் பிசி எனப்படும் பலகைக் கணினிக்கு மாறும் வாய்ப்பு அதிகமுள்ளது.
டேப்ளட் பிசி தற்போது சந்தையில் 7000 ரூபாய் விலையில் தொடங்குகிறது. இந்தியாவில் இதற்கான சந்தையை ஆகாஷ் டேப்ளட்டின் வரவே தீர்மானிக்கும் என்பதாகக் கூறப்படுகிறது. உலகின் விலை குறைந்த டேப்ளட்டான இது மாணவர்களுக்கு ரூ.1500 விலையிலும், பிறருக்கு ரூ.3000 என்ற விலையையும் நிர்ணயித்துள்ளது. இதன் விற்பனை தொடங்கிய பிறகே மற்ற நிறுவன டேப்ளட்களின் விலையில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள்:
இணையத்தில் பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தும் கூகுள், சென்ற ஆண்டில் கூகுள் பிளஸ் சமூக வலைத்தள சேவையை அறிமுகம் செய்தது. இது தொடங்கப்பட்ட ஜூலை மாதத்தில்  ஒரு கோடிப் பேர் உறுப்பினராக சேர்ந்தனர். டிசம்பர் 27 வரையிலான கணக்கின்படி சுமார் 6.2 கோடிப் பேர் உறுப்
பினர்களாக இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை 2012இன் இறுதிக்குள் 40 கோடியாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த எண்ணிக்கை முன்னணி வலைத்தளமான ஃபேஸ்புக்கிற்கு கடும் சவாலை உருவாக்கும். அதன் காரணமாக மேலும் பல வசதிகளை ஃபேஸ்புக்கும், கூகுளும் பயனருக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் வருகைக்குப் பின் கூகுளின் பிற சேவைகளான ஜிமெயில், பிளாக்கர், யுடியூப் உள்ளிட்டவற்றில் பல மேம்படுத்தல்கள் செய்யப்பட்டன. அதிகம் பயனரைப் பெறாத கூகுள் பஸ் மற்றும் கூகுள் ஹெல்த் உள்ளிட்ட சேவைகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.
இந்த ஆண்டில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட கூகுள் மியூசிக் சேவை மேலும் பல நாடுகளுக்கு விரிவாக்கப்படும் என்று தெரிகிறது.
ஹெச்டிஎம்எல் 5:
புதிய இணையத் தொழில் நுட்பமான ஹெச்டிஎம்எல் 5 தொழில்நுட்பத்தில் பல சேவைகளும் மென்பொருள்களும் உருவாக்கப்படும் என்று தெரிகிறது.
மொபைல்களுக்கான அடோப் ஃபிளாஷ் பிளேயரை மேம்படுத்துவதை குறைத்து இனி ஹெச்டிஎம்எல் 5 தொழில்நுட்பத்தைப்  பின்பற்றப் போவதாக அடோப் நிறுவனம் கூறியுள்ளது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

மொபைல் போன்:
முன்னணி மொபைல் போன் நிறுவனங்களான சாம்சங் மற்றும் நோக்கியா தயாரித்துள்ள வளையும் தன்மையுள்ள அலைபேசிகள் சந்தைக்கு வரவுள்ளன. ஆண்ட்ராய்ட், விண்டோஸ் இயங்குதள ஸ்மார்ட் போன்களும் பெருமளவு சந்தையை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்மார்ட் போன்களில் இரண்டு கோர் பிராசசர்கள் தவிர்க்க முடியாத அம்சமாக மாறி வருகிறது.தொடுதிரை வசதி மற்றும் ஆப்பிள் ஐபோன் 4 எஸ் (Apple I-Phone 4S )-ல் உள்ள குரலை அடையாளம் கண்டு தகவல்களை உள்ளிடும் சிரி (SIRI) தொழில்நுட்பம் போல ஆண்ட்ராய்ட் மற்றும் விண்டோஸ் இயக்க போன்களிலும் புதிய வசதி இடம்பெறவுள்ளது.
இதை உறுதிப்படுத்தும் வகையில் கூகுள் மேஜல் (Majel) என்ற தொழில்நுட்பத்தை ஆண்ட்ராய்ட் போனுக்காக ரகசியமாக உருவாக்கி வருவதாக பிசி வேர்ல்ட் ஆங்கில இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதே வசதி டேப்ளட், நெட்புக், அல்ட்ரா புக் மற்றும் மேசைக் கணினிகளுக்கும் வரக்கூடும்.
ஆண்ட்ராய்ட் போன் விற்பனையில் முன்னணியில் உள்ள சாம்சங் நிறுவனத்திற்கு இந்த ஆண்டு மோட்டரோலா நிறுவனம் பெரும் சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. காரணம் சென்ற ஆண்டு இறுதியில் ஆண்ட்ராய்ட் பயன்பாட்டிற்காக கூகுள் - மோட்டரோலா நிறுவனங்களிடையே ஏற்பட்ட ஒப்பந்தம்தான்.
மொபைல் வாலட் (Mobile Wallet) எனப்படும் அலைபேசி வழியாக கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போல பணம் செலுத்தும் வசதி பரவலாகும் என்று தெரிகிறது. தற்போது இதற்கான கட்டுப்பாடுகளை இந்திய ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
முப்பரிமான தொலைக்காட்சி:
3டி தொழில்நுட்பத்துடன் கூடிய தொலைக்காட்சிப் பெட்டிகள் தற்போது சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் பயன்பாடு இனி வரும் நாட்களில் அதிகரிக்கும் என்றும், இதனால் தற்போது புழக்கத்தில் உள்ள எல்இடி டிவிக்களின் விலை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல தொலைக்காட்சிப் பெட்டிகள் வழியாக இணையத்தை அணுகும் தொழில்நுட்பம் மேலும் வளர்ச்சியடையும். இதன் மூலமாக இணைய வீடியோ ஒளிபரப்பு சேவை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
கணினிகள்:
நெட்புக், டேப்ளட் பிசி, அல்ட்ரா புக் கணினிகள் மேசைக் கணினிகளின் பயன்பாட்டை பின்னுக்குத் தள்ளும் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு வெளிவர உள்ள விண்டோஸ் 8 இயங்குதளம் டேப்ளட் மற்றும் நெட்புக் கணினிகளை வேறுபடுத்த முடியாத வகையில் இருக்கும்.
. Related Posts with Thumbnails

wibiya widget