கணினியுகமும் கழுத்துவலியும்


கணினியில் தொடர்ந்து பணியாற்றுபவர்களுக்கு கழுத்து வலி மற்றும் பார்வைக் குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாக சமீபத்தில் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. கணினிகளால் நாளுக்கு நாள் ஏற்படும் பல்வேறு விதமான புதிய நோய்கள் குறித்த தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அப்படிப்பட்டதொரு தகவல்தான் சப்தர்ஜங் மருத்துவ மைய மருத்துவர்களின் புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இவ்வாய்வு சப்தர்ஜங் நகரைச் சேர்ந்த கணினித் துறை பணியாளர்கள் மத்தியில் எடுக்கப்பட்டது. இதன் முடிவின்படி 80 சதவீதம் பேர் கண்பார்வை மற்றும் கழுத்து வலி போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தனர்.
76.5 சதவீதம் பேர் கழுத்துவலியால் பாதிக்கப்பட்டிருந்தனர். சாதாரணமாக மனிதர்களின் கண்கள் சுமார் ஆறு மீட்டர் தொலைவிலுள்ள பொருட்களையே எளிதில் அடையாளம் காணும் தன்மை கொண்டது. ஆனால் கணினியை நாம் ஒரு சில அடி தூரத்திலிருந்தே பார்க்கிறோம். இதனால் கண் தசை நார்களுக்கு மிகுந்த வலியும், சோர்வும் ஏற்படுகிறது. மேலும் இவ்வாய்வின் மூலம் அதிகமாக கணினியை பயன்படுத்துபவர்களுக்கு கண்களில் நீர்வடிதல், கண் வலி, கண் உறுத்தல், சிவந்து போதல், கண் பார்வை மங்குதல், தலைவலி என்று பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக தெரிவிக்கிறது.
தொடர்ந்து அமர்ந்தபடியே வேலை செய்வதால் முதுகு மற்றும் தண்டுவட பாதிப்புகளும் அதைத் தொடர்ந்து கழுத்து வலியும் வருகிறது. இத்தகைய வலிகள் குறித்த ஆய்வின்படி கழுத்து வலியால் பாதிக்கப்பட்டவர்கள் 48.6 சதவீதமும், தோள்பட்டை வலியால் பாதிக்கப்பட்டவர்கள் 15.7 சதவீதமும், முதுகு வலியால் பாதிக்கப்பட்டவர்கள் 35.6 சதவீதமும், கை, விரல், மணிக்கட்டு பகுதிகளில் அயற்சியுடன் கூடிய வலியால் 23.1 சதவீதம் பேர் அவதிப்பட்டதாக தெரிவிக்கிறது. மேலும் கணினி அலுவலகங்களில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள் மூலமாக ஆராய்ந்ததில் கணினி பயன்படுத்துபவர்கள் சரியான தூரத்தில், உயரத்தில், சரியான நாற்காலியில் உட்காரததும் முதுகுவலி மற்றும் தலைவலிக்கு காரணம் என்று தெரியவந்தது.
அதேபோல அதிக நேரம் கணினியின் முன் அமர்வதால் ஒருவித மன இறுக்கத்திற்கு ஆளாவதும், அதிக ஒளி உமிழும் கணினித் திரைகள், கணினி திரைக்கு நேர் எதிர்திசையில் விளக்குகள் பொருத்தப்பட்டிருப்பது, நாற்காலிகள் நேராக, சீராக இல்லாமலிருப்பது, பயன்படுத்துவதற்கு கடினமான விசைகளைக் கொண்ட கீபோர்டுகள் ஆகியவையே கண், கை, கால் முதுகு மற்றும் கழுத்து வலிகளுக்கு காரணமாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தற்போது 18 லட்சத்திற்கும் அதிகமான கணினிகள் புழக்கத்தில் உள்ளன. சராசரியாக 1000 பேருக்கு 6 கணினி என்ற விகிதத்தில் தற்போது உள்ளது. எதிர்வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை மேலும் பல மடங்கு உயரும். அப்போது கணினி சார்ந்த பாதிப்புகளால் பல்லாயிரம் மக்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. எனவே, காற்றோட்டமான அறையில், தெளிவான, சரியான வெளிச்சம், அளவான ஒளியுடன், ஒரு அடி தூரத்தில் இருக்கும்படியான கணினித்திரையும், பயன்படுத்துவதற்கு எளிதான கீபோர்டு மற்றும் மௌஸ், முதுகுப்பகுதி ஒரே நேர்கோட்டில் இருக்கும்படியாக சாய்வதற்கு ஏற்ற நாற்காலியையும் பயன்படுத்த வேண்டும். அதே போல தொடர்ந்து கணினி முன்பாகவே அமர்ந்திருக்காமல் சற்றே ஓய்வெடுப்பதும், அடிக்கடி இமைகளை மூடித்திறப்பதும் நல்ல பலன் தரும் என்கின்றனர் மருத்துவர்கள். Related Posts with Thumbnails

விண்டோஸ் 7 க்கு ஏற்ற ஓப்பன் சோர்ஸ் மென்பொருள்கள்


மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமான விண்டோஸ் 7(Windows 7)க்கு மாறியவர்கள் அதற்கு ஏற்ற அப்டேட்டட் மென்பொருள்களைப் புதிதாக பதிய வேண்டும்.
இந்த கூடுதல் செலவிற்கு மாற்றாக ஓப்பன் சோர்ஸ் அப்ளிகேசன்கள் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு ஏற்றதாக மேம்படுத்தப்பட்டுள்ளன.
அதில் சில:
7 ஜிப் ( 7Zip ) - பைல்களை சுருக்க விரிக்க
ஃபைல் ஜில்லா ( FileZilla )- இணையத்தில் பைல்களை பகிர்ந்து கொள்வதற்கான மென்பொருள்
புட்டி (Putty)- Telnet/SSH மென்பொருள்
விண்எஸ்சிபி (WinSCP) - SFTP, FTP, SCP மென்பொருள்
விஸ் (Azuerus now Vuze)- டோரண்ட் பைல்களை டவுன்லோட் செய்ய
கிகா (Ekiga) - Voip & வீடியோ கான்ஃரன்ஸ் மென்பொருள்
எக்ஸ் - சேட்2 (X-Chat2) - கிராபிக்கல் ஐஆர்சி கிளைண்ட்
பிட்ஜின் (Pidgin) - கூகுள், எம்எஸ்என், யாகூ, எய்ம் போன்றவற்றின் சாட்டிங் தளங்களை இம்மென்பொருள் மூலமே அணுகலாம்.
ஃபயர்பாக்ஸ் (Firefox) (இதப்பத்தி சொல்லவேண்டியதில்லை)
ஓப்பன் ஆபிஸ் (Open Office.org) - மைக்ரோசாப்ட் ஆபிஸ் மென்பொருளுக்கு இணையான மென்பொருள்.
சன்பேர்ட் (Mozilla Sunbird)- காலண்டர் மென்பொருள்
ஃபாக்சிட் பிடிஎப் ரீடர் (Foxit PDF Reader)
மார்பிள் (Marble)- உலகத்தை இதிலிருந்து பார்க்கலாம். கூகுள் எர்த் போன்றது.
இன்க்ஸ்கேப் (Inkscape) - கோரல்டிரா மென்பொருளுக்கு மாற்றாக வெளிவந்துள்ள வெக்டார் இமேஜ் மென்பொருள்
பிளென்டர் (Blender) - முப்பரிமான படங்களை தயாரிப்பதற்கான மென்பொருள்
ஜிம்ப் (Gimp) - போட்டோஷாப் மென்பொருளுக்கு இணையான பயன்பாடுகள் கொண்ட இமெஜ் எடிட்டிங் மென்பொருள்
டயா (Dia) - டயாகிராம் சார்ட்டுகள் வரைவதற்கான மென்பொருள்
விஎல்சி மீடியா பிளேயர் (VLC Media Player) - முன்னனி ஆடியோ, வீடியோ பார்மட்களை பிளே செய்யும். கன்வெர்ட்டர் மற்றும் ரெக்கார்டிங் ஆப்சன்களும் கொண்டது. Related Posts with Thumbnails

விடுதலை! விடுதலை!!

பிடிக்காத செல்பேசி நெட்வொர்க்கில் வாடிக்கையாளர்களுக்காகவும், நண்பர்களுக்காகவும் செல்பேசி எண்ணை மாற்ற முடியாமல் தவித்துக் கொண்டிருப்போருக்கு ஜனவரி 1, 2010 முதல் கிடைக்கப்போகிறது சுதந்திரம். இந்தியாவில் அதிவேகமாக வளர்ந்துவரும் செல்பேசி சேவையில் ஒரு புதிய மைல்கல் என்று இதனைக் குறிப்பிடலாம். பல மாதங்களாக பல்வேறு தடை, தாமதங்களுக்குப் பிறகு இத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இத்திட்டம் மொபைல் நெம்பர் போர்ட்டபிலிட்டி ( Mobile Number Portability) சுருக்கமாக MNP என்று அழைக்கப்படுகிறது. வாடிக்கையாளருக்கு அனுகூலமான இத்திட்டத்தை செயல்படுத்தி ஒருங்கிணைப்பதற்காக நாடு முழுவதும் சேவையாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதற்கான தகுதி, விதிமுறைகளை டிராய் வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் யார் பயன்பெறலாம்?
எண்ணை மாற்றாமல் வேறு பிடித்த செல்பேசி நிறுவனத்திற்கு மாற்ற விரும்புபவர்கள், வேலை நிமித்தமாக வேறு ஊர்களுக்கு மாறுபவர்கள் (இருவேறு ஊர்களிலும் அனுமதி பெற்ற ஒரே MNP சேவை நிறுவனமாக இருப்பது அவசியம்)
தகுதி:
செல்பேசி இணைப்பு வாங்கி 90 நாள்கள் ஆகியிருக்கவேண்டும்.
ஏற்கனவே வேறொரு செல்பேசி நிறுவனத்திடமிருந்து மாறியவராக இருந்தால், அப்படி மாறி குறைந்தபட்சம் 90 நாள்கள் ஆகியிருக்கவேண்டும்.
செல்பேசி நிறுவனத்தை மாற்ற என்ன செய்யவேண்டும்?
முதலின் உங்கள் செல்பேசி சேவையாளரைத் தொடர்பு கொண்டு சேவை நிறுவனத்தை மாற்ற விரும்புவதாக தகவல் தெரிவிக்கவேண்டும். அதன்பின் அவர்கள் உங்களுக்கான அல்பாநியுமெரிக் (எண், எழுத்து கலந்த) கோட் ஒன்றைத் தருவார்கள். அதன்பின் இணைப்பை மாற்றுவதற்கான படிவத்தை பூர்த்தி செய்து சேவையாளரை மாற்றித்தரும் நிறுவனத்திடம் வழங்கவேண்டும். சேவையை வழங்கும் நிறுவனம் உங்களுடைய படிவத்தை ஆராய்ந்து பிறகு இணைப்பை மாற்றித்தரும். அதற்காக ரூ.20 முதல் ரூ.100 வரை அதற்கான சேவைக் கட்டணமாக கொடுக்கவேண்டும்.
அதன்பிறகு எண்ணை வேறு நிறுவனத்திற்கு மாற்றித் தருவதற்கு அதிகபட்சம் நான்கு நாட்கள் வரை ஆகும். (ஜம்மு காஷ்மீர், அசாம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் ஒரு சில பகுதிகளில் மட்டும அதிகபட்சம் 12 நாட்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.) அப்படி மாற்றப்படும் நேரத்தில் அதிகபட்சம் இரண்டு மணி நேரம் வரை செல்பேசி இணைப்பு துண்டிக்கப்படும்.
பிரிபெய்ட் வாடிக்கையாளர்களாக இருந்தால் கடைசியாக மீதம் இருந்த தொகை காலாவதியாகிவிடும்.
போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு சேவையை மாற்றும் நாள்வரையிலான பில்தொகை முழுவதும் செலுத்தப்பட்டிருக்கவேண்டும். Related Posts with Thumbnails

பின் தங்கிய கங்காருகள்

கிரிக்கெட் உலகில் ஆஸி. என்கிற ஒரே அணியின் 14 வருட ஆதிக்கம் கடந்த ஆஷஸ் தொடருடன் முடிவு பெற்றது. எந்த அணியாலும் வெல்ல முடியாது என இருமாப்புடன் உலகை வலம் வந்த ஆஸி.கிரிகெட் அணியினர் தோல்வி முகத்துடன் தொடர்கள் முடிந்த பிறகும் திரும்பியிருக்கின்றனர். சரியாக இருப்பத்திஐந்து ஆண்டுக்ளுக்கு முன்பு ஆஸி.ஆணியினர் ஜாம்பவான்காளன டென்னில்லில்லி, கிரேக் சேப்பல், ராட் மார்ஷல் போன்றறோர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு இன்று மீண்டும் ஆஸி. அணிக்கு ஏற்பட்டுள்ளது.
ஒரு நாள் போட்டி தொடரில் தொடர்ந்து மூன்று முறை உலகக் கோப்பையை வென்ற ஒரு அணி குறுகிய காலத்திற்குள் அடுக்கி வைக்கப்பட்ட சீட்டு கட்டுகளை போல மளமளவென சரிந்தது. எதனால், ஆஸி அணியால் கடைசியாக விளையாடிய ஐந்து டெஸ்ட் தொடர்களில் இரண்டில் மட்டுமே கோப்பையை கைப்பற்ற முடிந்தது. அதிலும் தனது சொந்த மண்ணில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மண்ணை கவ்வியது. அதேபோல் கடைசியாக விளையாடிய நான்கு ஒருநாள் போட்டி தொடர்களில் ஒன்றை மட்டுமே பெற முடிந்தது. இவற்றை காட்டிலும் மிக மோசமாக உலகக்கோப்பை 20-20 போட்டியில் முதல் சுற்றிலேயே தோல்வியுற்று போட்டியிலிருந்து வெளியேறியது. இரண்டு ஆண்டுகளாக தள்ளாட்டம் போட்டு வந்த ஆஸி அணி கடைசியாக நடைபெற்ற புகழ் பெற்ற அஷஸ் தொடரில் தோல்வியடைந்த கோப்பையை பறிகொடுத்தது. இதன் மூலம் ஐசிசியின் தரப்பட்டியல் அறிமுகப்படுத்தப்பட்ட 2003-ம் ஆண்டு முதல் தொடர்ந்து தான் வகித்து வந்த முதலிடத்தை இழந்து நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டது. கிரேக் சேப்பல், டென்னிஸ் லில்லி, ராட் மார்ஷல் ஆகியோர் ஓய்வுக்கு பிறகு சற்று பலவினமான அணியாக கருதப்பட்ட ஆஸி. அணி 1995-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் பலமான மேற்கு இந்திய அணியை மார்க் டெய்லர் தலைமையிலான அணி தோல்வியுற செய்து தனது சகாப்தத்தை ஆரம்பித்தது. அன்றுமுதல் தொடர்ந்து பல தொடர்களில் வெற்றிபெற்று தன்து அணியை முதலிடம் நோக்கி சென்று கொண்டிருக்கையில் மார்க் டெய்லர் தனது ஓய்வினை அறிவித்து அதிர்ச்சியளித்தார். பின்னர் தலைமையேற்ற அனுபவ வீரர் ஸ்டீவ்வாக் எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இன்றி தனது அணியை மேலும் மெருகேற்றியதுடன் ஒரு புதிய இளம் வீரர்களை கொண்ட பாண்டிங், கில்கிறிஸ்ட், மெக்ராத், கில்லெஸ்பி போன்ற வீரர்களையும், வார்னே போன்ற அனுபவ வீரர்களையும் ஒருங்கிணைத்து உலகில் மிகச்சிறந்த அணியை உருவாக்கினார்.
அத்தகைய அனுபவமும் திறமையையும் கொண்ட ஆஸி. அணி 1999-ல் நடைபெற்ற உலகக்கோப்பை ஒருநாள் போட்டி தொடரை வென்று ஆஸி. சகாப்த்தத்தில் மிகப்பெரிய கீரிடம் தனது தலைமையில் சூட்டிக்கொண்டார். அன்றுமுதல் இக்கோப்பையை அந்நாட்டிலிருந்து மற்ற அணி அணியினர் தனதாக்கி கொள்ள முடியாமல் தத்தலித்தது வருகின்ற சூழ்நிலை ஆஸி. அணி உருவாக்கியது. ஸ்டீவ்வாக் ஒருநாள் போட்டிகளிலிருந்து முதலில் விலகி பின்பு 2004-ம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக ஒய்வு பெற்றார். அச்சூழ்நிலையில் தலைமையேற்ற ரிக்கி பாண்டிங் அஸி..அணியின் வியூகங்களையே மாற்றி அமைத்தார். அதிரடி தாக்குதலை கடைபிடித்தும், எதிரணி வீரர்களை பயமுறுத்தும் பந்துவீச்சளர்கள் மெக்ராத், பிரட்லீ போன்றோரின் உதவியுடன் வெற்றிமேல் வெற்றி பெற்றுன அசைக்க முடியாத அணியாக திகழ்ந்தது. இத்தகைய அணியின் தோல்வி முனகல் தற்போது கேட்டுக் கொண்டிருப்பதின் பின்னணி மர்மம், ஸ்டீவ்வாக், பாண்டிங் தலைமையிலான அணியின் ஐம்பாவான்காளக திகழ்ந்த வார்னே, மெக்ராத், ஜஸ்டின் லாங்கர், டேமன் மார்டின் போன்றோர் கடந்த 2006-07-ம் ஆண்டு ஆஷஸ் தொடருடன் ஒரே நேரத்தில் ஒய்வு பெற்றவுடன் அதன் முகம் தோல்வி நோக்கி செல்ல ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. அதன் பிறகு துணை கேப்டனாகவும், ஆஸி. அணியில் அஸ்தான வீக்கெட் கீப்பர் மற்றும் அதிரடி மட்டையாளார் கில்கிறிஸ்ட் சில காலங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். ஆட்டத்தின் போக்கையே மாற்றும் இவ்வீரர்கள் ஓய்வு பெற்றவுடன் சுதரித்து எழுவதற்கு முன்பே, சுழல்பந்து வீச்சாளார் ஸ்குவாட் மெக்ரில் மற்றும் அதிரடி வீரர் மேத்யூ ஹெய்டன் போன்றறோர் ஓய்வை அறிவித்து வெறியேறினர். இவ்வாறு ஒரு அணியின் மொத்த வீரர்களில் பாதிக்கும் மேற்பட்டோர். ஒரே காலகட்த்தில் ஓய்வை அறிவித்தது அவ்வணிக்கு பெரும் பாதிப்பை உருவாக்கியுள்ளது. இத்தகைய இக்கட்டான நிலையில் அணி தோல்வியை சந்தித்து வரும் நிலையில் அண்ட்ரு சைமண்ட்ஸ் போன்ற வீரர்கள் மைதானத்திற்கு வெளியே ஈடுபடும் ஒழுஙகினமான செயல்களால் அணியிலிருந்து நீக்கப்படுகிற சூழல்வரை அவ்வணியை பின்னோக்கி தள்ளியுள்ளது. மேலும் இத்தகைய தோல்வி ஆஸி.அணி இத்துடன் முடியபோவதில்லை இவை மேற்கொண்டும் தொடரும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கணிக்கிறார்கள். பாண்டிங், பிரிட்லீ, ஸ்வார்ட் கிளார்க், சைமன் காடிச், மைக்கேல் ஹசி, கீப்பர் பிராட் எட்டன் போன்ற வீரர்களும் 30 வயது தாண்டி தனது ஓய்வை அறிவிக்கும் காலத்தைநெருங்கி கொண்டிருக்கிறார்கள். வார்னே ஓய்விற்கு பிறகு நிரந்தரமான சிறந்த சூழல்பந்து விச்சாளரை அவ்வணி இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்பதே அவ்வணியின் முதல் தோல்வியாக அறியப்பட்டுள்ளது. மார்க் வாக், ஸ்டீவ் வாக், பாண்டிங் போன்றோரின் தலைமையிலான ஆஸி.கிரிக்கெட் அணியின் பொன்னான சகாப்தம் அஷஸ் தொடரில் ஏற்பட்ட தோல்வியுடன் முடிந்து விட்டது என்பே உண்மையாகும்.
Related Posts with Thumbnails

பிளாக்கை மெருகூட்ட

மௌசால் கிளிக்கி மீன், எலி, ஆமைகளுக்கு இரை போடலாம்,
உங்கள் மெளசை பார்த்து ஓடிவரும் பென்குவின்கள்,
நியூட்டனின் ஒவ்வொரு வினைக்கும் இணையான எதிர்வினை உண்டு என்பதை விளக்கும் சங்கிலி குண்டுகள்,
உங்கள் ஆங்கில டைப்ரைட்டிங் வேகத்தை அறிய உதவும் டைப் இட் என்று பல விளையாட்டுக்கள் கேட்கட்களாக கிடைக்கின்றன.
உதாரணத்திற்கு சில:




பிளாக்குகள், ஐ கூகுள், பேஸ்புக், ஹை5 மற்றும் இ-மெயில்கள் மூலமாக நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் மகிழ்ச்சியூட்ட இந்த வித்தியாசமான கேம் கேட்கட்கள் உதவும். பயன்படுத்திப் பாருங்கள். நன்றாக இருந்தால் பின்னூட்டமிடுங்கள். இவ்விளையாட்டுகள் கிடைக்குமிடம். http://abowman.com/google-modules/
Related Posts with Thumbnails

கூகுள் - பிங் - காஃபெய்ன் தேடல்



படம் 1. கூகுள் தேடலில் இந்தியாவிற்கான தேடல்

படம் 2. மைக்ரோசாப்ட் பிங்கில் இந்தியாவிற்கான தே
டல்

படம் 3. கூகுள் காஃபெய்னில் இந்தியா விற்கான தேடல்.
மைக்ரோ
சாப்ட்டின் பிங் தேடலுக்கு ஈடுகொடுக்க கூகுளும் களத்தில் குதித்தது.தனது புதிய தேடல் இயந்திரத்திற்கு காஃபெய்ன் (Google Caffeine) என்று அது பெயரிட்டுள்ளது. தற்போது சோதனை பதிப்பாக வெளிவந்திருக்கும் காஃபெய்ன் நாம் தேடும் விபரங்களை கூகுள் தேடலை விட விரைவாகவும், பிங் தேடலைவிட அதிக அளவு இணையப் பக்கங்களில் தேடியும் தருகிறது. மைக்ரோசாப்ட் பிங்கில் தேடல் தகவலின் வலதுபுறம் அவ்விணைப்பு பக்கத்தில் உள்ள விபரத்தின் சிறு அளவு தொகுப்பும் கிடைக்கிறது. அது கூகுள் தேடல் மற்றும் காஃபெய்ன் தேடலில் இல்லை. ஆயினும் பொதுவாக தேடல் விஷயத்தில் கூகுளின் புதிய காஃபெய்ன் சோதனை (பீட்டா) பதிப்பு சிறப்பாகவே இருக்கிறது. இப்பதிப்பு குறித்து இன்டெர்நெட் பயன்பாட்டாளர்களின் கருத்துக்களை கூகுள் கேட்டிருக்கிறது. வரும் நாட்களில் அதனையொட்டி பல புதிய மேம்படுத்தப்பட்ட வசதிகள் கிடைக்கும் என்று நம்பலாம்.
Related Posts with Thumbnails

மூளை வேணுமா மூளை...

அவனா... மூளை இருக்கான்னு கேட்டா எந்த சந்தையில் கிடைக்கும்னு கேக்குற ஆளாச்சே... என்ற வசனம் அனைவரின் காதுகளிலும் அடிக்கடி விழுவதாகும். உண்மையிலேயே சந்தைக்கு வந்துவிடும் போலிருக்கிறது. மனிதர்களுக்காக செயற்கை மூளையை இன்னும் பத்தாண்டுகளுக்குள்ளாக உருவாக்கிவிடுவோம் என ஆக்ஸ்போர்டு பல்கலை.யில் நடந்த கருத்தரங்கில் விஞ்ஞானி ஹென்றி மார்க்ரம் அறிவித்துள்ளார்.
குளோனிங் ஆடு, எருது என்று தொடங்கி செயற்கை இதயம், இரத்தம், நுரையீரல் என்று மனித பாகங்களுக்கு மாற்று கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ள விஞ்ஞானிகளுக்கு சவாலாக இருப்பது மனித மூளை மட்டுமே. காரணம் மனித மூளை தானே சிந்தித்து செயல்படக்கூடியது. சிக்கலான பல இணைப்புகளுடன் முழு உடலையும் நிர்வகிக்கும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நியுரான்களையும் கொண்டது. அத்தகைய ஒன்றை உருவாக்குவது இயற்கைக்கு முரணானதாகவும், அதே நேரத்தில் அப்படி ஒன்று உருவானால் தற்போதைய மனித இனத்திற்கு அதனால் ஏற்படும் நன்மை மற்றும் தீமைகள் குறித்த பரவலான பயமும் உலகளவில் இயற்கை ஆர்வலர்களிடமும், சாதாரண மக்களிடத்திலும் உள்ளது.
மனிதர்களுக்கான செயற்கை மூளையை உருவாக்குவது குறித்த ஆராய்ச்சிக்காக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஈபிஎப்எல் அமைப்பு 2005ஆம் ஆண்டில் ப்ளூ பிரெய்ன் திட்டம் என்ற பெயரில் துவக்கியது. இத்திட்டத்தின் தலைவராக மூளை நரம்பியல் துறை ஆராய்ச்சியாளர் டாக்டர் ஹென்றி மார்க்ரம் உள்ளார். இவர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக மழைக்காடுகளில் சுற்றி பல்வேறு மரங்களின் வளரும் தன்மை, அமைவிடம், வடிவமைப்பு, புறக்கட்டமைப்பு குறித்து பல்வேறு தகவல்கள் திரட்டியுள்ளார். அதனடிப்படையில் இவை அனைத்திற்கும் உள்ள பொதுவான தொடர்புகள் குறித்து ஒரு வரையறையை கண்டறிந்தார். அதனை அடிப்படையாகக் கொண்டு பல்லாயிரக்கணக்கான நியுரான்களின் செயல்பாடுகளை - ஒன்றுக்கொன்று மாறுபட்ட செயல்பாடுகளைக் கொண்டதாக - தனித்தன்மை வாய்ந்ததாக - பொதுவான மூளைச் செயல்பாடுகள் ஒன்றுக்கொன்று பகிர்ந்துகொள்ளக் கூடியதான கட்டமைப்புக் கொண்ட மென்பொருளை உருவாக்கும் முயற்சியில் இவர் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஏற்கனவே எலிகளுக்கான முழுமையான மூளையை உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை 21 முதல் 24 வரை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடந்த டெட் கருத்தரங்கில் உலகளா
விய விஞ்ஞானிகள் முன்னிலையில் விஞ்ஞானி ஹென்றி மார்க்ரம் தங்களது ஆராய்ச்சி குறித்து உரை நிகழ்த்தினார். அதில், உலக அளவில் இருநூறு கோடி மக்கள் மூளை சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எங்கள் ஆராய்ச்சி மூலமாக இன்னும் பத்தாண்டுகளில் கணினி மென்பொருள் உதவியுடன் செயற்கை மூளையை உருவாக்கித் தரமுடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
பல்லாயிரக்கணக்கான நியுரான்களைக் கொண்ட மூளைக்கு இணையான செயற்கை மூளையை தயாரிக்க ஒரு நியுரானுக்கு ஒரு லேப்டாப் கணினி என்ற அடிப்படையில் தனித்தனித் செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் பத்தாயிரம் லேப்டாப்புகளின் செயல்திறன் கொண்ட ஐபிஎம் நிறுவனத்தின் பத்தாயிரம் கணினி பிராசசர்களுடன் கூடிய ஜெனி என்ற சூப்பர் கம்ப்யூட்டரை பயன்படுத்தி வருகின்றனர்.
இதன் செயல்பாடு குறித்து மேலும் அவர் கூறுகையில் ஒரு மலரின் படத்தைக் காட்டும்போது நிறம், வடிவம் என்று பிரித்து தன்னுடைய மின்னணு தகவல் கட்டமைப்பிலிருந்து தரம்பிரித்து சரிபார்த்து அதனை மலர் என்று கூறும். அதற்கேற்றவகையில் சுய திறனுடன் கூடிய தகவல்களை வெளியிடும் வகையில் மென்பொருளை உருவாக்கி வருகிறோம். தற்போது பல்வேறு பாலூட்டிகள் மற்றும் விலங்குகளுக்கான மாடல் மென்பொருள்களை உரு
வாக்கியும், பரிசோதித்தும் வருகிறோம் என்றார். Related Posts with Thumbnails

கூகுள் டாக்குமெண்ட் பேக்அப்

கூகுள் மெயிலை பேக்அப்பாக நமது கணினியில் பதிந்துவைத்துக்கொள்வதற்கு மென்பொருள் இருப்பது போல http://www.gmail-backup.com/
கூகுள் டாக்குமெண்ட்டுகளையும் பேக்அப் செய்துவைத்துக்கொள்ளமுடியும். இம்மென்பொருளை இணைய தளத்திலிருந்து டவுன்லோட் செய்துகொள்ளவும். http://gs.fhtino.it/gdocbackup Related Posts with Thumbnails

இணைய முகவரியை சுருக்க, விரிக்க

மிக நீண்ட இணையதள முகவரிகளை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டியிருந்தால் அதனை சுருக்கித் தருவதற்கு இந்த இணையதளங்கள் பயன்படும்.
http://tineurl.com
http://bit.ly/
http://tweetburner.com/
http://www.buzzup.com/us/buzzlink.php
http://www.snipurl.com/
http://www.urlshort.com/
http://www.adjix.com/WebObjects/Adjix.woa/
http://cli.gs/
http://urlborg.com/a/
http://dot.tk
http://trim.li/nk
http://awe.sm

அதேபோல சுருக்கிய இணையதள முகவரிகளின் முழு வடிவைத் திரும்பவும் பெறுவதற்கு அன்டைனி என்ற இணையதளம் உதவுகிறது.
http://untiny.me Related Posts with Thumbnails

உலக மென்புத்தகக் கண்காட்சி

உலக புத்தக தினத்தை முன்னிட்டு உலக மென்புத்தகக் கண்காட்சி இணையதளத்தில் நடைபெற்று வருகிறது, இக்கண்காட்சி ஜூலை 4முதல் ஆகஸ்ட் 4 வரை நடைபெறுகிறது, இருபது லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன, இவற்றை இலவசமாகவே டவுன்லோட் செய்துகொள்ளமுடியும், இம்மென்புத்தகங்கள் டெக்ஸ்ட். எம்பி3. எச்டிஎம்எல். பிடிஎப் எனப் பலவித கோப்பு வடிவங்களில் கிடைக்கின்றன.
இதுவரை டவுன்லோட் செய்யப்பட்ட மென்புத்தகங்களில் சாப்ட்வேர் துறை சார்ந்த மென்புத்தகங்களே அதிகமாக டவுன்லோட் செய்யப்பட்டிருப்பதாக புள்ளிவிவரம் குறிப்பிடுகிறது, நீங்கள் விரும்பும் புத்தகங்களையும் தேடிப்பாருங்கள்,
இணையதளமுகவரி - http://worldebookfair.org/index.htm
மதுரைத் திட்டத்தில் தயாரிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட தமிழ் மென் புத்தகங்களும் டவுன்லோட் செய்யக்கிடைக்கிறது,
தமிழ் மென்புத்தகங்கள் பதிவிறக்க Related Posts with Thumbnails

Virtual Studio - போட்டோ எடிட்டர் மென்பொருள்

போட்டோசாப் மென்பொருளுக்கு இணையாக இல்லாவிட்டாலும் பொதுவாக எடிட்டிங்கில் நாம் மேற்கொள்ளும் கலர் கரெக்சன். கிரே ஸ்கேல். பிளாக் அன்ட் ஒயிட். சார்ப்பிங். கிராப் எனப் பலவற்றையும் இம்மென்பொருள் மூலம் செய்ய முடியும். மேலும் பிரேம். ரெட் ஐ ரிமூவர். காப்பிரைட் டைட்டில்கள் எனப் பல வசதிகளும் இதில் உண்டு. அழகிய 7 விதமான மாற்றத்தக்க முகப்பு(Skins) வடிவமைப்புடன் இலவசமாக டவுன்லோட் செய்திடலாம், அளவு 3. 5 எம்பி மட்டுமே. போட்டோகிராபி ஆர்வமுள்ளவர்களுக்கு எளிமையான மென்பொருள் இது.
http://www.optikvervelabs.com/virtualstudio.asp Related Posts with Thumbnails

இலவச வீடியோ கட்டர்

பெரிய அளவிலான வீடியோ பைல்களை நமக்கு வேண்டிய அளவிற்கு வெட்டி எடுக்க இந்த மென்பொருள் உதவும். MPEG 1/2, MPEG4, DivX, Xvid, AVI, WMV, Quicktime MOV, Flash video என்று அனைத்து முன்னணி ஃபைல் ஃபார்மேட்களையும் இதில் எடிட் செய்யமுடியும்.
எடிட் செய்த வீடியோ ‌பைல‌ை
  • MPEG4
  • DivX
  • WMV (Windows Media Video)
  • Quicktime MOV
  • Flash Video (*.flv)
  • MP3 (only audio) போன்ற ஃபைல் ஃபார்மட்களில் சேமிக்கலாம். இம்மென்பொருள் முற்றிலும் இலவசமாகவே கிடைக்கிறது.
டவுன்லோட் செய்ய: http://www.freevideocutter.com
... Related Posts with Thumbnails

ஓப்பன் சோர்ஸ் டவுன்லோட் புரோகிராம்

டவுன்லோட் புரோகிராம்கள் பல இருந்தாலும் ராப்பிட் சேர்,
டெப்பாசிட் பைல், 4 சேர்டு, 2 சேர்டு, ஈஸிசேர், எனப்பல தளங்களிலும் இருந்து
கிடைக்கும் பைல்களை டவுன்லோட் செய்யவேண்டுமானால் சிறிது நேரம்
காத்திருக்கவேணடும், அல்லது பணம் செலுத்தி பிரிமியம் மெம்பர்
ஆகவேண்டும், ஒரு பைல் என்றால் காத்திருக்கலாம், அதிக அளவு
பைல்களைடவுன்லோடுசெய்யவேண்டியிருந்தால் என்ன செய்வது எப்போது நேரம்கிடைக்கிறதோ அப்போதுதான் நம்மால் டவுன்லோட் செய்யமுடியும், அதற்காகும்நேரம் நம்முடைய பல்வேறு வேலைகளையும் முடக்கிவிடும், இதற்காகவே தற்போதுஇலவசமாக ஓப்பன் சோர்ஸ் மென்பொருள் JDownloader இணையத்தில் கிடைக்கிறது,இதில் 30க்கும் மேற்பட்ட பைல் சேரிங் இணையதளங்கள் இணைக்கப்பட்டுள்ளன, லிங்க்கை மட்டும் லிங்க் கிராப்பரில் பேஸ்ட் செய்து பிராசஸ் பட்டனை அழுத்தி விட்டால் அது டவுன்லோட் லிஸ்ட்டில் சென்றுசேர்ந்துவிடும்,ஒரே சமயத்தில் பல லிங்க்குகளை பேஸ்ட் செய்யலாம், இது டவுன்லோட் ஆகும் ஜிப் பைல்களை Extract செய்தும் தந்துவிடுகிறது, அன்றாட அப்டேட்டட் பைல்களும் தரப்படுகின்றன, அவற்றையும் அப்டேட் செய்து கொள்ளவும், கடந்த ஒரு மாதமாக நான் பயன்படுத்தி வருகிறேன், நன்றாகவே இருக்கிறது, நீங்களும் பயன்படுத்திப் பாருங்கள்,
Related Posts with Thumbnails

ஆன்லைன் அப்ளிகேசன்ஸ் உங்களுக்காக

லேப்டாப்களை தூக்கிக்கொண்டு போய் அக்கவுண்ட்ஸ் பார்ப்பது. டெமோ காட்டுவது என்பதெல்லாம் போன தலைமுறை என்று சொல்லும்படி இதற்கு மாற்றாக கைவீசி‌ச் சென்று வாடிக்கையாளரது அலுவலக கம்ப்யூட்டரிலேயே பில் போடும் ஆசை உங்களுக்கு இருக்கிறதா?
போட்டோ எடிட் செய்யவேண்டும், ஒரே ஒரு அனிமேசன் வேண்டும்,
வீடியோ எடிட்டிங் செய்யவேண்டும் ஆனால் இவற்றிற்கான மென்பொருள் இல்லை என்று புலம்புபவரா நீங்கள்?
இதுபோன்ற எண்ணற்ற வேலைகளை எப்போதாவது செய்பவராக இருந்தாலும் அல்லது உலகம் சுற்றி பட்டையைக் கிளப்பும் பிசினஸ்மேக்னட்டாக நீங்கள் இருந்தாலும் உங்களுக்காகவே இருக்கிறது சில ஆன்லைன் மென்பொருள் தளங்கள். நீங்கள் உங்கள் பெயரைப் பதிந்துகொண்டு பயன்படுத்திப் பாருங்கள், பிடித்திருந்தால் பின்னூட்டமிடுங்கள்.

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் போலவே ஆன்லைன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஐ ஓஎஸ்
http://eyeos.info

ஆபீஸ் டாக்குமெண்ட் டெம்ப்ளேட்டுகள்
http://www.docstoc.com/index.aspx

ஆன்லைன் ஆபீஸ்
microsoft office: http://office.microsoft.com/en-us/default.aspx
Google Office: http://docs.google.com
Zoho Office: http://www.zoho.com/
www.thinkfree.com/
அடோப் ஆன்லைன் வேர்ட் பிராசசர்
https://www.acrobat.com/?app=share&si=1#/bw/BuzzwordBegin/
அடோப் வெப் கான்பிரன்ஸ்
https://www.acrobat.com/?app=share&si=1#/brio/BrioBegin/

ஆன்லைன் பிரசன்டேசன்
http://preezo.com/
http://www.live-documents.com/

அடோப் ஆன்லைன் கோப்பு சேமிப்பகம்
https://www.acrobat.com/?app=share&si=1#/org/ManageBegin/

போட்டோ‌‌ஷாப் மென்பொருளுக்கு மாற்றாக

அடோப் போட்டோ‌‌‌ஷாப் நிறுவனம் வழங்கும் ஆன்லைன் போட்டோ எடிட்டிங்குடன் 2ஜீபி அளவு இலவச போட்டோ சேகரிப்பு தளம் https://www.photoshop.com/
மற்றும் சில
http://www.sumopaint.com
http://www.splashup.com
http://www.picnik.com/

டயக்ராம். பிளா‌ன் சார்ட்
, நெட்வொர்க் சார்ட் வரைய
http://www.gliffy.com
http://www.chartall.com

வீடியோ எடிட்டிங் தளம்
http://jaycut.com/

Gif அனிமேசன் உருவாக்க
http://www.gickr.com/

இண்டெர்நெட் Fevicon இமே‌ஜ்களுக்கு
http://www.prodraw.net/index.htm

பல்வேறு கணக்கீடுகளை உடனுக்குடன் செய்து பார்க்க
http://instacalc.com/

எந்த ஒரு ‌‌‌‌ஃபைலையும‌் மற்றொரு ஃ‌பைல் பார்மேட்டுக்கு மாற்ற ஆன்லைன் ஃபைல் கன்வெர்டர்,
படங்கள், வீடியோ, இசை, டெக்ஸ் டாக்குமெண்ட்டுகள். சுருக்கப்பட்ட கோப்புகள் எனப் பலவற்றையும் மற்றொரு பார்மேட்டுக்கு மாற்றித் தருகிறது. ஒரு கோப்பு அளவு 1 ஜீபி வரை அனுமதியளிக்கிறது,
http://www.zamzar.com/

ஆன்லைன் அட்ரஸ் புக்
http://www.addressbookonline.com/

ஆன்லைன் இசையமைப்பாளராகலாம் நீங்கள் இந்தத் தளத்தின் மூலம்
http://www.buttonbeats.com/

உங்கள் டெக்ஸ்ட் டாக்குமண்ட்களை காப்பி செய்து ஆன்லைனில் பேஸ்ட் செய்து நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள இந்த தளம்
http://tinypaste.com

பார்த்துக்கொண்டிருக்கும் இணைய தளத்தை அப்படியே பிடிஎப் கோப்பாக மாற்ற இந்த தளம்,
இதிலேயே pdf பைலை டெக்ஸ்டாக மாற்ற, pdf பைல்களை ஒருங்கிணைக்க. பிரிக்க என பல வசதிகள் உள்ளது.
http://www.html-to-pdf.net/

பிடிஎப் கோப்பு உருவாக்க அடோப் பிடிஎப் கிரியேட்டர்
https://www.acrobat.com/?app=share&si=1#/cpdf/CreatePDFBegin/

ஆன்லைனில் பிடிஎப் மற்றும் பிறகோப்புகளை பகிர்ந்துகொள்ள
https://www.acrobat.com/?app=share&si=1#/share/ShareBegin/

என்ன இன்டெர்நெட் வே‌கம் மட்டும் அதிகரி‌த்தால் போதும் என்று எண்ணத்தோன்றுகிறது. Related Posts with Thumbnails

தேர்தல் நடைமுறைகள் - 04

  • அஞ்சல் வழி வாக்குகள் அளிக்க யாருக்கு தகுதி உண்டு?
    சிறப்பு வாக்காளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளோர்,தேர்தல் பணிக்கு அமர்த்தப்பட்டவர்கள், தடுப்பு காவலில் வைக்கப்பட்டவர்கள் ஆகியோர் விதி முறைக்கு உட்பட்டு சில நிபந்தனைகளின் அடிப்படையில் அஞ்சல் வழியாக வாக்களிக்க முடியம்.
  • யார் பதிலாள் வாக்கை செலுத்த இயலும்?
    ஆயுதப் படையில் பணியாற்றுபவர்கள், ராணுவச் சட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்ட படைப்பிரிவினர் போன்ற பணியில் ஈடுபட்டுள்ள வாக்காளர்களுக்கு அஞ்சல் வழி வாக்கிற்கு பதிலாக இந்த வசதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பதிலாள் வாக்களிப்புமுறையிலோ அல்லது அஞ்சல் வழி வாக்களிப்பையோ தெரிவு செய்து கொள்ளலாம்.
  • நுண்நிலை பார்வையாளர்கள் என்றால் என்ன?
    ஒரு மாவட்டத்தில் பணியாற்றும் மத்தியஅரசு அல்லது மைய அரசு பொதுத் துறை நிறுவனங்களின் அதிகாரி அல்லது அலுவலர்கள் நுண்நிலை பார்வையாள ராக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் ஒரு வளாகத்திலோ அல்லது கட்டிடத்திலோ அமைந்துள்ள வாக்குச் சாவடி அல்லது வாக்குச்சாவடிகளை கண்காணிக்கும் அலுவலராக செயல்படுகிறார்கள். இந்தியத் தேர்தல் ஆணைய பார்வையாளர்களின் நேரடி கட்டுபாடு மற்றும் கண்காணிப்பில் இவர்கள் செயல்படுகிறார்கள்.
  • நுண்நிலை பார்வையாளர்களை நியமிப்பதற்கான வரைமுறை என்ன? வாக்காளர்களை பாதிப்புக்கு உட் படுத்தும் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் வாக்குச்சாவடிகள் இனம் கண்டறியப்பட்டு நுண்நிலை பார்வையாளர்களின் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
  • வாக்குப்பதிவு தினத்தன்று நுண் நிலை பார்வையாளர்களின் பணிகள் என்ன?
    நுண்நிலை பார்வையாளர்கள் கீழ் கண்ட பணிகளில் கவனம் செலுத்துவர்.
    1. ஒத்திகை தேர்தல் நடைமுறை
    2. சாவடிகளில் வேட்பாளரின் பிரிதிநிதி களின் இருப்பை கண்காணிப்பது. இவர்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை செயல்படுத்துவது.
    3. நுழைவு அனுமதி சீட்டு முறை மை மற்றும் வாக்கு சாவடிகளுக்கு செல்லுபவரை கண்காணிப்பது.
    4. தேர்தல் ஆணையத்தின் நெறிமுறை களுக்கு ஏற்ப வாக்காளர்களை சரியான முறையில் கண்டறிதல்.
    5. வராத வாக்காளர் இடம் பெயர்ந்த வர்கள் மற்றும் நகல் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்ட இடங்களில் அவற்றை கண்டறிந்து அதற்கான நடைமுறைகளை பதிவு செய்தல்.
    6. அழியாத மை பயன்பாடு
    7. வாக்காளர் பற்றிய விவரங்களை பதிவேட்டில் 17 எ படிவத்தில் குறித்து வைத்தல்.
    8. வாக்களித்த பின் ரகசியத்தை பராமரித்தல்.
    9. வாக்குப்பதிவு முகவர்களின் செயல் பாடு மற்றும் புகார்களை கவனிப்பது. ஏதோ ஒரு காரணத்தினால் நியாயமான வாக்கு பதிவுக்கு இடையூறு ஏற்படுகிறது என்று நுண்நிலை பார்வையாளர் கருதுவா ரேயானால் அதை நீக்கஅவர் உடனடி யாக இந்த நிகழ்வை அந்தந்த தொகுதி யின் பார்வையாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுவார்.
  • ஒரு வேட்பாளர் தமது தேர்தலுக்கு விருப்பம் போல் செலவழிக்க முடியுமா?
    முடியாது. ஒரு வேட்பாளர் தமது தேர்தலுக்கு விருப்பம் போல செலவழிக்க இயலாது. மொத்த தேர்தல் செலவு அந்த குறிப்பிட்ட தொகுதிக்கு நிர்ணயிக்கப்பட்ட உயர்ந்தபட்ச அளவை மிஞ்ச கூடாது என்று விதிமுறைகள் கூறுகின்றன.
  • உத்தர பிரதேசம், பீகார், ஆந்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் செலவின் உயர்ந்த அளவு எவ்வளவு?
    தேர்தல் செலவு வரையறை அவ்வப்போது மறு மதிப்பீடு செய்யப்படுகிறது. உத்தர பிரதேசம்., பீகார், ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ள உயர்ந்தபட்ச செலவின் அளவு ரூ.25 லட்சமாகும்.
  • இது மாதிரியான பெரிய மாநிலங்களில் சட்டப்பேரவை தொகுதிக்கு அனுமதிக்கப்பட்டுள்ள செலவு தொகை எவ்வளவு?
    இது மாதிரியான பெரிய மாநிலங் களில் ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள செலவு தொகை ரூ. 10 லட்சம்.
  • எல்லா மாநிலங்களிலும் இந்த வரையறை ஒரே மாதிரியானவையா? இல்லையென்றால் நாடாளுமன்ற தொகுதிக்கு இப்போது இருக்கும் குறைந்த அளவு செலவு தொகை எவ்வளவு?
    இல்லை, தேர்தல் செலவிற்கான உயர்ந்த அளவு மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, தாமன் மற்றும் டையூ லட்சத்தீவு போன்ற நாடாளுமன்ற தொகுதிக்கு இப்போது இருக்கும் குறைந்த அளவு செலவு தொகை ரூ. 10 லட்சம்.
Related Posts with Thumbnails

தேர்தல் நடைமுறைகள் - 03

  • மாவட்டத் தேர்தல் அதிகாரி தேர்தல் அதிகாரியிடமிருந்து அனுமதி பெறாமல் ஊர் தியை தேர்தல் பணிக்காக பயன்படுத்த முடியுமா?
    முடியாது. இந்த மாதிரி ஊர்திகள் அங்கீகரிக்கப்படாதவைகளாகவே கொள்ளப்பட்டு இந்திய தண்டனை சட்டப்பிரிவின் ஐஓ எ பிரிவின் கீழ் தண்டனைப்பெறத் தக்கதாகி விடும். பிரச்சார பணியிலிருந்து விலக்கப் படும்.
  • சம்பந்தப்பட்ட கட்சி அல்லது வேட்பாள ரின் சுவரொட்டி, விளம்பர அட்டை, பதாகை, வேட்பாளரின் கொடி போன்ற வற்றை ஊர்வலத்தின்போதும், வேட்பாள ரின் ஊர்திகளில் கட்டிச்செல்லும்போதும் ஏதேனும் கட்டுப்பாடு உண்டா?
    விளம்பர சுவரொட்டி, அட்டை, பதாகை போன்றவற்றை ஊர்வலத்தின்போது வேட்பாளரின் ஊர்திகளில் வைத்துக் கொண்டு செல்லலாம்.
  • பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்படும் ஊர்திகளின் வெளிப்புறங்களில் புதியவற்றை இணைப்பதற்கும், மாற்றி அமைப்பதற்கும் அனுமதிக்கப்படுமா?
    ஒலிபெருக்கி போன்ற வெளிப்புற இணைப்புகளைப் பொருத்துவதற்கும், மாற்று அமைப்பை ஏற்படுத்துவதற்கும் மோட்டார் வாகனச் சட்டம் விதிமுறைக்கு ஏற்பவும், உள் ளூர் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்பவும் அனும திக்கப்படும். வீடியோ ரதம் போன்ற சிறப்பு பிரச்சார வாகனங்கள் மாற்றி அமைக்கப்பட்ட ஊர்திகள் போன்றவற்றிற்கு உரிய அதிகாரி யிடமிருந்து தேவையான முன் அனுமதியைப் பெற்ற பிறகு பயன்படுத்தலாம்.
  • கட்சியோ வேட்பாளரோ தற்காலிக அலு வலகங்களை அமைத்து செயல்படுவதற்கு நிபந்தனைகள் அல்லது வழிகாட்டு நெறி முறைகள் ஏதேனும் உண்டா?
    உண்டு. இந்த மாதிரி அலுவலகங்கள் தனியார் அல்லது பொது இடங்களை ஆக் கிரமித்து அமைக்கப்படக் கூடாது. மத சம்பந் தப்பட்ட இடங்களிலேயோ அல்லது அதன் தொடர்பாக வளாகங்கள், கல்வி நிலையங்கள் அல்லது மருத்துவ மனைகளை ஒட்டிய இடங்கள் தற்போது இருக்கும் வாக்குச் சாவடிக்கு 200 மீட்டருக்கு உட்பட்ட இடங்கள் ஆகியவற்றில் இவை அமைக்கப்படக் கூடாது. மேலும் இந்த அலுவலகங்களில் ஒரே ஒரு கட்சிக் கொடி, கட்சியின் சின்னம், புகைப் படங்களுடன் கூடிய பதாகை போன்ற வற்றைத்தான் காட்சிக்காக வைக்கலாம். இந்த அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் பதாகையின் அளவு 40ஓ30 மிகாமல் இருக்க வேண்டும். எனினும் இந்த அளவு உள்ளூர் விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் இருக்க வேண்டும். உள்ளூர் விதிமுறைகளின்படி பதாகை அல்லதுவிளம்பரத் தட்டி போன்றவற்றின் அளவு குறைவாக இருக்க வேண்டுமென்றால், இந்த விதிமுறைகளே நடைமுறைப்படுத்தப்படும்.
  • பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் போன் றவற்றை எதுவரை நடத்தலாம்?
    வாக்குப்பதிவு முடிவடைய நிர்ண யிக்கப்பட்டு இருக்கும் நேரத்துடன் முடிவடை யும் 48 மணி நேரம் முன்பு வரை கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களை நடத்தலாம்.
  • பிரச்சார நேரம் முடிவடைந்த பின், அர சியல் கட்சி பிரமுகர்கள் அந்தத் தொகுதியில் இருப்பது குறித்து ஏதேனும் கட்டுப்பாடு உண்டா?
    உண்டு. அந்தத் தொகுதியில் வாக்காளராக இல் லாது வெளியிடங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் போன்றவர்கள் பிரச்சார நேரம் முடிவடைந்த பின் அந்தத் தொகுதியில் தொடர்ந்து இருக்கக் கூடாது. இத்தகையவர்கள் பிரச்சாரம் முடி வடைந்த உடனேயே அந்தத் தொகுதி யிலிருந்து வெளியே சென்றுவிட வேண்டும்.
  • ஒரு மாநிலத்தில் தேர்தல் பொறுப்பாளராக இருக்கும் ஒரு அரசியல் கட்சியின் நிர்வாகிக்கும் இந்த மாதிரி நிபந்தனைகள் பொருந்துமா?
    ஆமாம். ஆனால் நாடாளுமன்ற மக்களவை / சட்டப்பேரவைக்கு பொதுத்தேர்தல் நடைபெறும்போது, ஒரு மாநிலத்தின் பொறுப்பாளராக இருக்கும் கட்சி நிர்வாகியைப் பொறுத்தவரை இந்த நிபந்தனை வலி யுறுத்தப்படுவதில்லை. இத்தகைய நிர்வாகிகள், மாநிலத்தின் தலைமையகத்தில் தாங்கள் தங்கியிருக்கும் இடத்தை அறிவிக்க வேண்டும். இந்தக் குறிப்பிட்ட கால அவ காசத்தின்போது இவர்களது நடமாட்டம் அல் லது போக்குவரத்து அவர்களது கட்சி அலு வலகத்திற்கும், தங்கும் இடத்திற்கும் இடை யிலானதாகவே இருக்கும். மேற்கூறிய இந்தக் கட்டுப்பாடு மற்ற எல்லா அலுவலர்களுக்கும் எல்லாத் தேர்தல்களிலும் பொருந்தும்.
  • தேர்தல் நடைமுறையின்போது முக்கியமான நிகழ்வுகளை வீடியோ படமெடுக்க ஏதேனும் ஏற்பாடுகள் உண்டா?
    உண்டு. ஒரு தொகுதியில் நடைபெறும் அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தேசிய மற்றும் மாநிலத் தலைவர்கள் கலந்து கொள் ளும் பொதுக்கூட்டங்கள், உரையாற்றும் நிகழ் வுகள், வன்முறைச் சம்பவங்கள் போன்றவற்றை பதிவு செய்யவும் வீடியோ படமெடுக்கவும் வீடி யோ குழுக்கள் அமைக்கப்படும்.
  • பிரச்சாரத்தின்போது தொப்பி, முகமூடி, துண்டு, வண்ணக் கைக்குட்டைகள் போன் றவற்றை அணிவது அனுமதிக்கப்பட்டுள்ளதா?
    ஆமாம். அனுமதிக்கப்பட்டுள்ளது. எனி னும், சேலை, சட்டை போன்ற முக்கிய ஆடை களை கட்சியோ வேட்பாளரோ வழங்குவதும் விநியோகிப்பதும் அனுமதிக்கப்படமாட்டாது. இத்தகைய செயல்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் கையூட்டாகக் கருதப்படும்.
  • ஒரு பகுதியில் அரசியல் கட்சி உதவி மையமொன்றை அமைக்க முடி யாவிட்டாலோ இல்லை விருப்பப்படா மலோ இருந்தால் வாக்காளர் பட்டிய லில் தனது பெயரை கண்டறிய வாக்கா ளருக்கு உதவி ஏதேனும் உண்டா?
    உண்டு. 3 அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குச் சாவடிகளைக் கொண்ட பகுதியில் ஒரு வளாகத்திலோ அல்லது கட்டிடத்திலோ வாக்காளர் உதவி மையம் எல்லோரும் தெரியும் வகையில் அமைக்கப்படும். மையத்தில் அலுவலர்கள் குழுவொன்று பணியாற்றும். அகர வரிசையில் தயாரிக் கப்பட்ட வாக்காளர் பட்டியல்கள் இருக்கும். வாக்காளர் பட்டியலில் ஒருவருடைய வரிசை எண். செல்ல வேண்டிய வாக்குச் சாவடி போன்ற விவரங்களை வாக்காளர் கள் தெரிந்து கொள்ளலாம். அரசியல் கட்சிகள் உதவி மையம் அமைக்க முடியாத நிலையை முன்கூட்டியே தெரிவித்தால் மாவட்ட தேர்தல் அதிகாரி இது போன்ற ஏற்பாடுகளை மற்ற இடங்களிலும் அமைப்பது குறித்து பரிசீலிப்பர்.
  • வாக்குப்பதிவு தினத்தன்று வாக்குச் சாவடிக்கு அருகில் ஒரு வேட்பாளரே அல்லது அரசியல் கட்சிகளோ உதவி மையங்களை அமைப்பதற்கு வழிகாட்டி நெறிகள் ஏதேனும் உண்டா?
    உதவி மையத்தை வாக்குச் சாவடியில் 200 மீட்டருக்கு அப்பால் அமைக்கலாம். இம்மையத்தில் ஒரு மேசை 2 நாற்காலி தான் அனுமதிக்கப்படும். இதில் பணி யாற்றும் இருவருக்கும் நிழல் தரும் வகை யில் ஒரு குடையோ அல்லது தார்பாலின் அல்லது துணி கூரையோ இருக்கலாம். வேட்பாளர் பெயர், கட்சி தேர்தல் சின்னம் போன்றவற்றை எடுத்துக் காட்டும் 3/4/ 1/2 அளவிலான ஒரு பதாகையும் அனுமதிக் கப்படும் . இம்மையத்தில் கூட்டம் சேருவ தற்கு அனுமதிக்கப்படமாட்டாது.
  • தேர்தல் உதவி மையங்களை அமைக்க சம்பந்தப்பட்ட அரசு அலுவ லர் அல்லது உள்ளூர் அதிகாரிகளின் எழுத்துப்பூர்வ அனுமதியை பெற வேண்டியது அவசியமா?
    ஆம், இதைப் போன்ற உதவி மையங் களை அமைக்கும் முன் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் அல்லது உள்ளூர் அதிகாரி களின் எழுத்துப்பூர்வ அனுமதியை பெற வேண்டியது அவசியமாகும். காவல் துறையினரோ சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியோ கேட்கும் பொழுது காண்பிப் பதற்காக எழுத்துப்பூர்வ அனுமதி இம்மை யங்களில் பணியாற்றுபவர்களிடம் இருக்க வேண்டும்.
  • வெளியீடுகள், சுவரொட்டிகள் போன்றவற்றை அச்சிடுவதில் ஏதே னும் கட்டுப்பாடு உண்டா?
    உண்டு. தேர்தல் வெளியீடுகள் சுவரொட்டிகள் போன்ற வற்றில் அச்சிடு பவர்கள் மற்றும் வெளியிடுபவரின் பெயர் விலாசம் இல்லாமல் அச்சிடவோ வெளியிடவோ கூடாது.
  • வாக்குச்சாவடிக்கு அருகில் வாக்கு கோருவதை மேற்கொள்வதில் ஏதேனும் கட்டுப்பாடு உண்டா?
    உண்டு. வாக்கு பதிவு தினத்தன்று வாக்குச் சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவிற்குள் வாக்கு கோருவது தடை செய்யப்பட்டுள்ளது.
  • வாக்குச்சாவடிக்கோ அல்லது அதற்கு அருகாமையிலோ ஆயுதம் தாங்கிச் செல்வதில் ஏதேனும் கட்டுப் பாடு உண்டா?
    ஆம், வாக்குப் பதிவு தினத்தன்று 1959 ஆம் ஆண்டு ஆயுதச்சட்டம் வரையறை செய்துள்ளபடி எத்தகைய ஆயுதத்தையும் எடுத்துக் கொண்டு வாக்குச்சாவடிக்கு அருகில் செல்ல ஒருவரும் அனுமதிக்கப் படமாட்டார்கள்.
Related Posts with Thumbnails

தேர்தல் நடைமுறைகள் - 02


  • வேட்பாளர் ஒருவர், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் முன்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டியதோ அல்லது வாக்குறுதி அளிப்பதோ அவசியமா?
    ஆமாம்.
  • வேட்பாளர் ஒருவர் உறுதிமொழி எடுத்துக் கொள்ளவோ அல்லது வாக்குறுதி அளிப்பதற்கோ தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்கள் யார்?
    எந்த ஒரு குறிப்பிட்ட தேர்தலுக்கும் முதன்மையாக அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்கள் அந்தத் தொகுதிக் கான தேர்தல் அதிகாரி மற்றும் துணைத் தலைவர் அதி காரியாவார். சிறையில் அடைக்கப்பட்ட அல்லது முன் னெச்சரிக்கை காவலில் வைக்கப்பட்டவர்களைப் பொ றுத்தவரை சிறை கண்காணிப்பு அலுவலரோ அல்லது காவல் முகாமின் தலைமை அலுவலரோ உறுதிமொழி செய்துவைக்க அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்கள் ஆவார்கள். உடல் நலக்குறைவாலோ அல்லது மற்ற காரணங்களுக்காகவோ மருத்துவமனையிலோ அல் லது வேறெங்கிலும் இருந்து சிகிச்சை பெற்று வருபவர் களைப் பொறுத்தவரை அந்த மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர்கள் அல்லது அவர் களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் இதற் கான அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் வெளிநாட்டில் இருந்தால், இந்திய தூதர் அல்லது ஹை கமிஷனர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ராஜீய பிர திநிதி ஆகியோருக்கும் உறுதிமொழியை செய்துவைக்க அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
  • வேட்பாளர் எப்போது உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வேண்டும்?
    வேட்பாளர் தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்த உடனேயே நேரில் வந்து உறுதி மொழியை எடுத்துக் கொள்ள வேண்டும். எவ்வாறாகினும் வேட்பு மனுத் தாக்கல் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் நாளுக்கு முந்தைய நாளே உறுதிமொழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.
  • போட்டியிடும் வேட்பாளர்களுக்கு யார் தேர்தல் சின்னங்களை ஒதுக்கீடு செய்கிறார்?
    தேர்தல் அதிகாரி.
  • ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னம் எவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட தேசிய அல்லது மாநில கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது?
    ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னத்தைப் பெறுவதற்கு வேட்பாளர் தமது வேட்பு மனுவில், சம்பந்தப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சியால் நிறுத்தப்படும் வேட் பாளர் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டும். மேலும் அந்தக் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகியிடமிருந்து தாம்தான் கட்சியால் நிறுத்தப் படும் வேட்பாளர் என்பதைத் தெரிவிக்கும் பி படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். பி படிவத்தில் தெரிவிக் கப்பட்டுள்ள அறிவிப்பை ஒப்புக் கொண்டு கட்சி அலு வலர் ஒப்பமிட்டுத்தர வேண்டும். இந்த அலுவலரின் மாதிரி கையொப்பம் எ படிவத்தின் மூலம் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் அதி காரிக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். இந்த இரண்டு படிவங்களும், வேட்பு மனுத்தாக்கலுக்கான கடைசி தினத்தில் பிற்பகல் 3 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
  • அரசியல் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட அலுவல ரின் பெயர், கையொப்பம், ரப்பர் முத்திரை போன்ற வற்றுடன் A மற்றும் B படிவங்களை ஒரு வேட் பாளர் தாக்கல் செய்ய முடியுமா?
    முடியும். A மற்றும் B படிவங்களில் அரசியல் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட அலுவல நிர்வாகி மையால் கையொப்பமிட்டு இருக்க வேண்டும்.
  • பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியின் வேட்பாளர் அல்லது சுயேட்சை வேட்பாளர், ஒதுக்கப்படாத சின்னங்கள் பட்டியலில் கொடுக்கப்பட்டிருக்கும் சின்னங்களில் ஒன்றைத் தெரிவு செய்து கொள்ள முடியுமா?
    முடியும். இதற்கு இந்த வேட்பாளர் பட்டியலில் குறிப்பிட்டுள்ள சின்னங்களில் 3-தெரிவு செய்து அவற் றின் முன்னுரிமையைத் தெரிவித்து தமது வேட்பு மனுவில் குறிப்பிட வேண்டும்.
  • பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியால் நிறுத்தப்படும் வேட்பாளர் A மற்றும் B படிவங்களை மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் அதிகாரிக்கு சமர்ப்பிக்க வேண்டியது அவசியமா?
    ஆமாம்.
  • தேர்தல் பணிக்காக வாகனங்களைப் பயன்படுத் துவதில் ஏதேனும் கட்டுப்பாடு உண்டா?
    கிடையாது. எத்தனை வாகனங்களை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். (இயந்திரத்தால் அல்லது மோட்டாரால் இயங்கும் ஊர்தி மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள்) ஆனால் இத்தகைய வாகனங்களை இயக்குவதற்கு தேர்தல் அதிகாரியின் முன் அனுமதியைப் பெற்று அந்த அனுமதிக் கடிதம் (அசல் கடிதம், நகல் அல்ல) வாகனங்களின் முன்புறக் கண்ணாடியில் தெளிவாகத் தெரியும்படி ஒட்டப்பட வேண் டும். இந்த ஒப்புதல் கடிதத்தில் ஊர்தியின் எண், எந்த வேட்பாளருக்காக பயன்படுத்தப்படுகிறதோ அவர் பெயர் போன்ற விவரங்கள் தெரிவிக்கப்பட்டு இருக்க வேண்டும். இதற்காகும் செலவு அந்த வேட்பாளரின் கணக்கில் கொள்ளப்படும்.
Related Posts with Thumbnails

இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான்


நம்முடைய சொந்த தயாரிப்பு மென்பொருள்கள், படங்கள், எம்பி3 கோப்புகள் போன்றவற்றை இணையத்தில் பகிர்ந்துகொள்ள இடமளிக்கும் பல டவுன்லோட் சர்வர்களை நாம் பயன்படுத்துகிறோம். நம்முடைய கோப்புகளை பொதுவாக ஒரு சர்வரில் வைப்பதைவிட இரண்டு மூன்று சர்வரில் போட்டுவைத்தால் தேவலை என்று எண்ணுவோம். ஆனால் நமக்கு இணைய வேகமும் நேரமும் ஒத்துழைப்பதில்லை. அதேபோல இவற்றில் பணம் செலுத்தி உறுப்பினரானால் மட்டுமே அடுத்தடுத்த கோப்புகளையோ, ஒரே நேரத்தில் பல கோப்புகளையோ டவுன்லோட் செய்யமுடியும். இலவசம் என்றால் சிறிது நேரம் காத்திருக்கவேண்டும். அப்படியில்லாமல் ஒரே கோப்பு பல சர்வர்களில் இருந்தால் ஒரே சமயத்தில் நமக்கு சாதகமான சர்வரில் டவுன்லோடு செய்துகொள்ளமுடியுமே என்று பலரும் எதிர்பார்க்கிறோம். இதற்கென்று ஒரு இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் அப்லோடு செய்ய விரும்பும் பைல் அல்லது ஏற்கனவே உள்ள பகிர்ந்துகொள்ளப்பட்ட இணையதளத்தின் முகவரியை கொடுத்தால் போதும். தானாகவே ஒரே சமயத்தில் ரேப்பிட்சேர்
, டெபாசிட் பைல், சென்ட்ஸ்பேஸ் (Send Space), மெகா அப்லோட் (Mega Upload), ஈஸிசேர்(, பைல் பேக்டரி (File Factory), நெட்லோட் (Net Load) மீடியா பைர் (Media Fire), மெகா சேர் (Mega Share), ஜிப்பி சேர் (Zippi Share), டூ சேர்டு (Twoshared), இசட் சேர் (ZShare), பிளை அப்லோட் போன்ற பல்வேறு தளங்களில் உங்களுக்கு வேண்டிய 7 தளங்களை மட்டும் தேர்வு செய்தபின் உங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுத்துவிட்டு பைலை அப்லோட் செய்துகொள்ளலாம். டவுன்லோட் லிங்க்கை உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைத்துவிடும்.
இந்த புதிய சேவையை இந்த முகவரியிலிருந்து பெறலாம்.
http://mirrorcreator.com/index.php Related Posts with Thumbnails

தேர்தல் நடைமுறைகள் - 01

  • நாடாளுமன்ற மக்களவை அல்லது சட்டப்பேரவைத் தேர்தலில் ஒருவர் போட் டியிட குறைந்தபட்ச வயது என்னவாக இருக்க வேண்டும்?
    வேட்புமனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள் ளப்படும் நாளன்று ஒருவருக்கு வயது குறைந்தது 25 ஆண்டுகளாக இருக்க வேண்டும்.
  • ஒரு தொகுதியிலும் வாக்காளராகப் பதிவாக செய்து கொள்ளாத ஒருவர் தேர் தலில் போட்டியிட முடியுமா?
    முடியாது. தேர்தலில் போட்டியிட நடைமுறையில் உள்ள வாக்காளர் பட்டியலில் வாக்காள ராகப் பதிவு செய்து கொண்டு இருக்க வேண்டும்.
  • ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் வாக்காளராக பதிவு செய்து கொண்டுள்ள ஒருவர் நாடாளுமன்றத் தேர் தலில் வேறொரு மாநிலத்தில் இருந்து போட்டியிட முடியுமா?
    முடியும். ஆனால், அஸாமின் தன்னாட்சி உரிமை பெற்ற மாவட்டங்கள், லட்சத் தீவுகள், சிக்கிம் ஆகிய தொகுதிகளிலிருந்து போட்டியிட முடியாது.
  • ஒருவர் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் ஷெட்யூல்டு வகுப்பு பிரிவைச் சேர்ந்தவராக இருந்தால், மற்றொரு மாநிலத்தில் ஷெட்யூல்டு வகுப்பினருக்காக ஒதுக் கப்பட்ட தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட முடியுமா?
    முடியும். ஒரு மாநிலத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந் தவராக இருப்பவர் மற்றொரு மாநிலத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு பழங்குடியினருக்காக ஒதுக் கப்பட்ட தொகுதியிலிருந்து போட்டியிடலாமா? முடியும். ஆனால் லட்சத்தீவுகள், அஸாமின் தன் னாட்சி உரிமைபெற்ற மாவட்டங்கள் அஸாமின் பழங்குடியினர் பகுதிகளில் போட்டியிட முடியாது.
  • ஒரு மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர், மற்றொரு மாநில சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து போட்டியிடலாமா? முடியாது. ஒரு மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர், மற்றொரு மாநில பழங்குடியின உறுப்பினர், அவர் வாக்காளராக உள்ள மாநில சட்டப்பேரவைக்கு பழங்குடியினத்தவருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியிலிருந்து போட்டியிடலாமா?
    முடியாது.
  • ஷெட்யூல்டு வகுப்பையோ அல்லது பழங்குடியினர் சமூகத்தையோ சேர்ந்தவராக உள்ள ஒருவர் பொதுத் தொகுதியிலிருந்து போட்டியிட முடியுமா?
    முடியும்.
  • ஏதோ ஒரு குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டு இரண்டு ஆண்டு கால சிறைத் தண்டனை பெற்றவர் தேர்தலில் போட்டியிட முடியுமா?
    முடியாது.
  • ஒருவேளை அந்த நபரின் மேல்முறையீடு பைசல் செய்யப்படாத நிலையில் அவர் ஜாமீனில் இருந்தால் தேர்தலில் போட்டியிட முடியுமா?
    முடியாது. ஒருவர் தண்டனை பெற்ற பிறகு ஜாமீனில் இருந் தாலும், அவரது மேல் முறையீடு பைசல் செய்யப் படாது இருந்தாலும் உச்சநீதி மன்றத்தின் முடிவுப்படி அவர் தேர்தலில் போட்டியிடத் தகுதி இல்லாதவர் ஆவார். ஆனால், அவர் தண்டனை நிறுத்திவைக் கப்பட்டு இருந்தால் அவர் போட்டியிட முடியும்.
  • ஒருவர் சிறையில் இருந்தால் தேர்தலில் வாக்களிக்க முடியுமா?
    முடியாது. இத்தகையவர்கள் சிறையில் இருந்தால் அவர்கள் எந்த தேர்தலிலும் வாக்களிக்க முடியாது. சிறைத்தண்டனை பெற்று சிறையில் இருந்தாலும் ஓரி டத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல் லப்படும்போது காவல்துறையின் சட்டப்பூர்வ காவ லில் இருந்தாலும் அவர் வாக்களிக்க முடியாது.
  • ஒருவர் ஏதாவது ஒரு சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில்
    வைக்கப்பட்டிருந்தால், தேர்தலில் வாக்களிக்க முடியுமா?
    முடியும். அவர் அஞ்சல் வாக்குச்சீட்டு மூலம் வாக்க ளிக்க முடியும்.
  • ஒவ்வொரு வேட்பாளரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு எவ்வளவு தொகை செலுத்த வேண்டும்?
    ரூ.10 ஆயிரம்.
  • நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஷெட்யூல்டு வகுப்பினர் அல்லது பழங்குடியினருக்கு இந்தப் பிணையத் தொகையில் ஏதேனும் சலுகை அளிக்கப்படுமா?
    ஆமாம், இந்தத் தொகை ரூ.5 ஆயிரம் ஆகும்.
  • சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்குச் செலுத்த வேண்டிய பிணையத் தொகை எவ்வளவு?
    ரூ. 5 ஆயிரம்.
  • சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் ஷெட் யூல்டு வகுப்பு அல்லது பழங்குடி இனத்தைச் சேர்ந் தவருக்கு பிணையத் தொகையில் சலுகை ஏதேனும் உண்டா?
    ஆம், இது ரூ.2500 ஆக இருக்கும்.
  • ஒருவர் ஷெட்யூல்டு வகுப்பையோ அல்லது பழங் குடி இனத்தவராகவோ இருந்து பொதுத் தொகுதி யிலிருந்து போட்டியிட்டால், நாடாளுமன்றத் தேர் தலுக்கு அல்லது சட்டப்பேரவைத் தேர்தலுக்கு செலுத்த வேண்டிய பிணையத் தொகை எவ்வளவு?
    நாடாளுமன்றத் தொகுதிக்கு இந்தத் தொகை ரூ.5000, சட்டப்பேரவைத் தொகுதிக்கு ரூ.2500.
  • எந்த வேட்பாளர் பிணையத் தொகையை இழக் கிறார்?
    ஒரு தொகுதியில் பதிவான செல்லத்தக்க வாக்கு களில் 6ல் ஒரு பங்கை பெறத் தவறும் வேட்பாளர் பிணையத் தொகை இழப்பார்.
  • அங்கீகரிக்கப்பட்ட தேசிய அல்லது மாநில கட்சியின் வேட்பாளராக இருப்பவரின் வேட்பு மனுவை எத்தனைபேர் முன் மொழிய வேண்டும்?
    ஒருவர்போதும்,
  • ஒருவர் சுயேட்சை வேட்பாளராகவோ அல்லது பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியைத் சேர்ந்தவராகவோ இருந்தால் வேட்புமனு வை எத்தனை பேர் முன்மொழிய வேண்டும்?
    பத்து பேர்.
  • நாடாளுமன்றத்திற்கோ சட்டப்பேரவைக்கோ ஒருவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு எத்தனைத் தொகுதியிலிருந்தும் போட்டியிட முடியுமா?
    முடியாது. பொதுத்தேர்தலில் நாடாளுமன்றத் திற்கோ அல்லது சட்டப்பேரவைக்கோ 2க்கும் மேற் பட்ட தொகுதியிலிருந்தும் போட்டியிட முடியாது.
  • அதே சமயத்தில் இந்த இரு அவைகளில் ஏதேனும் ஒன்றிற்கு நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கும் இதே கட்டுப்பாடு உண்டா?
    ஆமாம், தேர்தல் ஆணையம் ஒரே சமயத்தில் இடைத்தேர்தல்களை நடத்தினால், ஒரே அவைக்கு நடைபெறும் இடைத் தேர்தல்களில் இரண்டுக்கு மேற் பட்ட இடங்களில் ஒருவர் போட்டியிட முடியாது.
  • அதேசமயத்தில் இந்த இரு அவைகளில் ஏதேனும் ஒன்றிற்கு நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டி யிடுவதற்கும் இதே கட்டுப்பாடு உண்டா?
    ஆமாம், தேர்தல் ஆணையம் ஒரே சமயத்தில் இடைத் தேர்தல்களை நடத்தினால், ஒரே அவைக்கு நடைபெறும் இடைத்தேர்தல்களில் இரண்டுக்கு மேற்பட்ட இடங்களில் ஒருவர் போட்டியிட முடி யாது.
  • ஒரே தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட எத்தனை வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியும்?
    நான்கு.
  • தேர்தலுக்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு ஒருவர் ஊர்வல மாகச் செல்லலாமா?
    முடியாது. தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தைச் சுற்றி 100 மீட்டர் தொலைவிற்குள் வர அதிகபட்சமாக மூன்று வாகனங்கள்தான் அனுமதிக்கப்படும். அதைப் போன்றே வேட்பாளரையும் சேர்த்து அதிகாரியின் அலுவலகத்திற்குள் அதிகபட்சமாக 5 பேர் தான் அனுமதிக்கப்படுவார்கள்.
  • தேர்தல் அதிகாரி வேட்பு மனுக்களை பரி சீலனைக்கு எடுத்துக் கொள்ளும்போது எத்தனை பேர் அனுமதிக்கப்படுவார்கள்?
    வேட்பாளர், அவருடைய தேர்தல் பிரதிநிதி, மனுவை முன்மொழிபவர் மற்றும் ஒருவர் (அவர் வழக் குரைஞராக இருக்கலாம்) வேட்பாளரால் எழுத்து மூலம் அங்கீகரிக்கப்பட்டவர் - வேட்புமனு பரிசீலனையின்போது இருக்கலாம்.
  • ஒரு வேட்பாளரின் வேட்புமனு மீது ஆட்சேபம் எடுத்துரைக்கப்பட்டால், இந்த ஆட்சேபத்திற்குப் பதில் அளிக்க வேட்பாளர் கால அவகாசம் கோரி னால், தேர்தல் அதிகாரி அவகாசம் தர முடியுமா?
    முடியும். தேர்தல் அதிகாரி ஆட்சேபணை மீதான விசாரணையை அடுத்த நாள் வரைக்கோ அல்லது அதற்கு அடுத்த நாள் வரைக்குமோ ஒத்திவைக்கலாம். ஆனால் அந்த கால அவகாசம், அன்று முற்பகல் 11 மணி வரைதான் அளிக்கப்படும். வேட்புமனுக்களை விலக்கிக் கொள்ளுவதற்கான நாள் அன்று பிற்பகல் 3 மணிக்கு முன், தேர்தல் அதிகாரி விசாரணையை முடிக்க வேண்டும்.
Related Posts with Thumbnails

நவீன பேனாக் கத்தி


இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியில் பல பழைய பொருட்கள் வழக்கொழிந்து வருகின்றன. சில மட்டுமே நவீன மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து புதிய மாற்றங்களைத் தாங்கி வெளிவருவதும், அதனால் சந்தை வாய்ப்பை தக்கவைத்துக் கொள்வதும் நிகழ்வு. அத்தகைய வரிசையில் புதியதாக மாற்றம் பெற்றிருப்பது, பலரது அன்றாட பயன்பாட்டில் இருக்கும் பேனாக் கத்தி.
இதில் செய்யப்பட்டிருக்கும் புதிய வசதி 32 ஜிபி அளவு நினைவகத்துடன் கூடிய யுஎஸ்பி பிளாஸ் டிரைவ் (கையடக்க தகவல் சேமிப்பகம்), புளூடூத் தொழில்நுட்பம் மற்றும் லேசர் ஸ்கேனர் ஆகியவையும் வழக்கமான கத்திகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் பிளார் டிரைவில் சேகரிக்கப்படும் தகவல்கள் பாதுகாக்க பயனரின் கைரேகையை சோதித்து அனுமதிக்கும் வசதியும் உள்ளது. இக்கத்தி கடந்த வாரம் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த மின்னணு நுகர்வோர் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை சுமார் 250 யூரோக்கள் இருக்கும் என தெரிகிறது.
பேனாக் கத்தியை முதன்முதலில் உருவாக்கிய விக்டோரிநாக்ஸ் நிறுவனமே இதனையும் வெளியிட்டிருக்கிறது. 1884ல் கார்ல் எல்ஸ்னர் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்நிறுவனம் அவரது பேரன் சார்லஸ் எல்ஸ்னரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஆண்டுக்கு 13 மில்லியன் கருவிகளை தயாரித்துவரும் விக்டோரிநாக்ஸ், இதில் பெரும்பாலானவற்றை சுவிட்சர்லாந்து ராணுவப் பயன்பாட்டிற்கே விற்பனை செய்துவிடுகிறது. Related Posts with Thumbnails

அழியும் டால்பின்கள்





சிறுவர்கள் வளர்ந்து வாலிபத்தை அடைவதை குறிக்கும் வகையில் கேல்ட்ரோன் (calderon) என்ற அதிபுத்திசாலி இன டால்பினை பலியிடும் மூடப்பழக்கம் டென்மார்க் அரசு ஆளுகைக்கு உட்பட்ட ஃபரோய் தீவில் (in the Faroe Islands, Denmark ) நடைமுறையில் உள்ளது. இக்கொடூர செயலை கண்டித்து உலகம் முழுவதுமிருந்து கண்டனக்குரல்கள் எழுந்துள்ளன. உடனடியாக இவ்வழக்கத்தை தடை செய்யவேண்டுமென்று டென்மார்க் அரசுக்கு பிராணிகள் நல ஆர்வலர்கள் பலரும் கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர்.

Watch this video

www.youtube.com/watch?v=0LcVeaO6Ioc&feature=related

send an email to the Danish Prime Minister, use this link

www.whales.org.au/alert/filetter.html Related Posts with Thumbnails

wibiya widget