நேரத்தை விரையமாக்கும் தொழிற்நுட்ப சாதனங்கள்

புதிய தொழில்நுட்பங்கள் உருவாவது வேலையை எளிதாக்கவும், விரைவாக செயல்படவும்தான் என்ற எண்ணத்தை மாற்றும் வகையில் இன்றைய டிஜிட்டல் சாதனங்கள் நமது கவனத்தை சிதறடித்து நேரத்தை விரையமாக்குவதாக பல நாடுகளிலும் நடைபெற்ற ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

அயல் நாட்டு மக்களிடம் ஆய்வுகள் நடத்தப்பட்டிருந்தாலும் அதன் முடிவுகள் இந்தியாவிற்கும் பொருந்தக் கூடியதாகவே இருக்கிறது.

உடல் உறுப்பா கைபேசி?
கைபேசிகள் அத்தியாவசியத் தகவல் தொடர்பு கருவியாக இருந்தாலும், பணி புரியும் இடங்கள் மற்றும் வகுப்பறைகளில் கைபேசியின் உபயோகம் குறித்துப் பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகின்றன.பெரும்பாலான ஆசிரியர்கள் கல்வி நிலையங்களில் கைபேசிகளை அணைத்து விட்டு வகுப்பறைக்குள் வரும்படி ஆணை இடுகிறார்கள். வேறு சிலர் வகுப்பறைக்குள் எந்தவிதமான சாதனங்களையும் அனுமதிப்பதில்லை. பாடம் நடத்தும்போது எத்தொல்லையும் இல்லாவிடில் சாதனப் பயன்பாட்டை மிகவும் திறந்த மனதுடன் அனுமதிக்கும் சிற்சில ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.நியூயார்க் பல்கலைக்கழகத்தில் சமூக ஊடகங்கள் கோட்பாடும் செயல்முறையும் வகுப்புகள் நடத்தும் ஆசிரியர், திரு. க்ளே ஷர்க்கி என்பவர் அண்மைக் காலத்தில் வகுப்பறைகளில் மடிக்கணினிகள் மற்றும் இதர சாதனங்களின் பயன்பாட்டை ஒட்டு மொத்தமாகத் தடைசெய்யும் முடிவை எடுத்திருக்கிறார். 

லேப்டாப், டேப்லட் மற்றும் கைப்பேசிகளை உபயோகிக்கும்போது மாணவர்களின் கவனம் சிதறலுக்குள்ளாகிறது என்றும் கவன சிதறலைக் குறைப்பது கடினமாக இருப்பதையும் அனுபவத்தில் கண்டார். கைபேசி போன்ற சாதனங்களை வகுப்புகளில் தடை செய்தபோது மாணவர்களின் கவனமும், கலந்துரையாடல் தரமும் உயர்ந்தது என்றும் குறிப்பிடுகிறார்.இந்த அனுபவத்தைப் பற்றி அவர், “யாரோ ஒருவர் புத்தம் புதியக் காற்றை வகுப்பறைக்குள்ளே நுழையவிட்டது போல இருந்தது” என்று கூறுகிறார். டிஜிட்டல் சாதனங்கள் நம்முடைய கவனத்தை திசை திருப்புவதற்காகவே வடிவமைக்கப்பட்டவை என்றும், ஆசிரியர்கள் எந்திரங்களுக்கு எதிராகப் போராடிட வேண்டும் என்றும் கூறுகிறார்.

கவனச் சிதறல்
தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாட்டை வகுப்பறைக்குள் ஓரளவு கட்டுப்படுத்திவிட முடியும் என்றாலும், மாணவர் விடுதிகள், படிக்கும் மேசை, உணவகங்கள், மாணவர்கள் குழுக்களாகப் பங்கேற்று கலந்துரையாடும் இடங்களில் நாம் என்ன செய்ய இயலும்?சிணுங்கும் கைபேசிகள், பளிச் பளிச்சென்று மின்னும் திரைகள், குறுஞ்செய்தியின் வருகையை அறிவிக்கும் சமிக்ஞைகள், ஃபேஸ்புக் கணக்கில் தோன்றும் புது வரவு செய்திகள், நேரடி ஒளிக் காட்சி அழைப்புகள் என இவற்றிலிருந்து நம்மை எப்படி ஒதுக்கி வைப்பது?

நம்மில் பெரும்பாலோர் முழுமையான பணி ஈடுபாட்டுடன்தான் கணினிக்கு முன்பாக அமர்கிறோம். வேலையை இன்று முடித்துவிடவேண்டும் என்று திட்டமிட்டுத் தொடங்குகிறோம்.
 கணினியில் இணைய பிரௌசரை தேவை கருதித் திறக்கிறோம். தகவலைத் தேடும் பொருட்டு நுழைந்து அடுத்தடுத்து பல திரைகளைத் திறக்கிறோம். கைகள் ஓய்வின்றி மௌசைக் கிளிக் செய்வதிலும், கீபோர்டைத் தட்டுவதையும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால், செய்ய வேண்டிய வேலை மட்டும் தொடங்கிய இடத்திலேயே நின்று கொண்டிருக்கும். நேரம் மட்டும் மணிக்கணக்கில் கரைந்து போயிருக்கும். 

இதில் அபாயகரமான அம்சம் என்னவென்றால் நமது கவனம் சிதறடிக்கப்படுகிறது என்பதை நாம் உணராமல் இருப்பதுதான்.பணியை விரைவாக முடிப்பதற்கு பல்வேறு வழிமுறைகளைக் கையாள்கிறோம், திட்டமிடுகிறோம்.ஆனால், கவனச்சிதறல் நமது மூளைக்குள்ளிருந்து வருகிறபோது, அதை கட்டுப்படுத்துவது மிக மிகக் கடினமாக இருக்கிறது.
இதனை உணர்வதற்குள்ளாக நமக்கு சில மணித்துளிகள் கடந்துவிடுகின்றன.

வேலை செய்து கொண்டிருக்கும்போது சிலர் தொலைக்காட்சி பார்ப்பதும், கைபேசி மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பதையும் வாடிக்கையான நிகழ்வாக்கிவிட்டனர்.வகுப்பறைகளில் தரப்படும் குறிப்புகளைப் படிப்பதற்கும், பாடம் நடத்தும்போது கேட்பதற்கும், கட்டுரைகள் எழுதவும் முழுமையான கவனமும் அறிவுப்பூர்வமான ஈடுபாடும் அவசியம். கவன சிதறலுக்கு மின்னணு சாதனங்கள்தான் முழுமையான காரணம் என்றும் கூறிவிட இயலாது. நமக்கு விருப்பம் இல்லாத ஒன்றின் மீதோ அல்லது வேலையின் மீதோ கவனத்தை முழுமையாக செலுத்துவது கடினமானது என்பது நமக்கு தெரிந்த விஷயம்தான்.இயற்கையாகவே அலைபாயும் நிலை கொண்ட நமது மனத்தை இத்தகைய டிஜிட்டல் சாதனங்கள் தூண்டிவிட்டு அங்கும் இங்குமாக இழுத்துத் செல்கின்றன.
இதனை சரியாக உணர்ந்து கொண்டால் கவனம் சிதறுவதை தடுத்திட முடியும்.

உங்களிடம் நீங்களே சில கேள்விகளை கேட்டுக் கொள்ளுங்கள்: 

உடனடியாகக் கவனத்தை நிலைநிறுத்த செய்ய வேண்டியவை என்ன?

மின்னஞ்சல் வந்திருக்கிறதா என்றும், சமூக வலைத்தளத்தில் ஸ்டேட்டஸ் அப்டேட் என்ன என்றும் அடிக்கடி பார்த்துக் கொண்டிருப்பது அவசியமா? 

வேலையில் ஈடுபட்டிருக்கும் போது வலைத்தளங்களில் கவனம் செலுத்துவதால் நமக்கு ஏற்படும் நன்மை என்ன?

இந்தக் கேள்விகளுக்கான விடைகள் உங்களுக்குச் சாதாரணமாகத்தான் இருக்கும்.

கவனச் சிதறல் மற்றும் நேரத்தை சரியாகப் பயன்படுத்த நீங்களாகவே சுயக்கட்டுப்பாட்டை உருவாக்கிக் கொள்ளவேண்டும். நீங்கள் மாணவராக இருந்தால் உங்களுடைய ஆசிரியர்கணினி, டேப்லட், கைபேசி ஆகியவற்றிற்கு தடைபோடாவிட்டாலும், நீங்களாகவே அந்தத் தடையை போட்டுக்கொள்ளுங்கள்.

பணிபுரிபவராக இருந்தால் கொடுக்கப்பட்ட பணியை முடிப்பதற்குத் தேவையான விபரங்களை முதலில் சேகரித்துக் கொள்ளவும். பணி முடியும் வரை தேவையான ஒரு இணைய தளத்தின் திரையை மட்டும் திறந்து வைத்துக் கொண்டு பணியாற்றவும். வேறு திரைகள் அனைத்தையும் மூடிவிடவும்.
Related Posts with Thumbnails

பின்தங்கிய விண்டோஸ் - முன்னேறிய ஐஓஎஸ், ஆண்ட்ராய்ட்

கடந்த ஒரு சில ஆண்டுகளாகவே மைக்ரோசாப்ட் நிறுவனம் படாதபாடுபட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் இணைய வெளியில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முடியாத நிலை, மற்றொரு பக்கம் தன்னுடைய முதுகெலும்பாக இருக்கும் விண்டோஸ் இயங்குதளத்தின் 8வது பதிப்பு எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாமல் போனது என அடுத்தடுத்து சரிவுகள்தான். டெஸ்க்டாப் கணினிகளில் இன்றுவரை விண்டோஸ் இயங்குதளத்தின் பயன்பாடு குறையவில்லை என்றாலும் புதிதாக விற்பனையாகும் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம்களில் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் விற்பனையே அதிகரித்திருப்பதாக கணக்கெடுப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஆண்ட்ராய்ட் தற்போது கணினிக்கு நிகரான செயல்பாடுகளைக் கொண்ட ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டமாக ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படுகிறது. வரும் காலத்தில் அது டெஸ்க்டாப் கணினிகளில் பயன்படுத்தக்கூடியதாக மாற்றம் பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.ஆப்பிள் ஐஓஎஸ் இயங்குதளத்தைப் பொறுத்தவரை அது தன்னுடைய வழி தனிவழி என்ற ரீதியில் பயணித்துக் கொண்டிருக்கிறது. தற்போதுள்ள இயங்குதளங்களில் டெஸ்க்டாப் கணினி, ஐபேட்(டேப்ளட்), ஸ்மார்ட் போன் ஆகிய மூன்று நிலையிலும் பயன்படுத்துவோரைக் கவரக் கூடியதாகவும் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய இயங்குதளத்தை உருவாக்கியிருப்பது ஆப்பிள் நிறுவனம் மட்டுமே.ஆப்பிளுக்குப் போட்டியாக, எதிர்கால கணினி என்றும், 2020ம் ஆண்டுவரை புதிய பதிப்புகள் உருவாக வாய்ப்பில்லை என்றெல்லாம் மார்தட்டிக் கொண்டு மைக்ரோசாப்ட் உருவாக்கிய தொடுதிரை தொழிற்நுட்பத்துடன் கூடிய விண்டோஸ் 8 இயங்குதளம் பிரமிப்பை ஏற்படுத்தினாலும் ஏற்கனவே விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விண்டோஸ் 7 பயன்படுத்தியவர்களுக்கு வழி தவறி வந்துவிட்டோமோ என்ற உணர்வை ஏற்படுத்திவிட்டது.

நோக்கியாவை வாங்கி, அதன் மூலம் விண்டோஸ் 8 இயங்குதள ஸ்மார்ட் போன்களை தயாரித்து விற்கும் திட்டமும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. கடைசியில் தற்போது ஆண்ட்ராய்ட் இயங்குதள போன்களைத் தயாரித்து விற்பனையைப் பிடிக்கும் நிலைக்கு அந்நிறுவனமும் தள்ளப்பட்டுவிட்டது.விண்டோஸ் 8 கணினி இயங்குதளத்திற்காக அனைவரும் டச் ஸ்கீரீன் பயன்பாட்டுக்கு மாறுவதென்றால் முதலில் மானிட்டர்களை மாற்றவேண்டும், பிறகு அதனைப் பயன்படுத்தவும், பணிபுரியவும் பழக வேண்டும்இப்பிரச்சனை அத்துடன் முடிவதில்லை. நாம் பயன்படுத்தும் அனைத்து மென்பொருள்களும் இதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருந்தால் மட்டுமே இந்த இயங்குதளத்தின் முழுப் பயனையும் பெற முடியும். அப்படியானால் பயன்படுத்துபவர்கள் இயங்குதளத்திற்கேற்ற புதிய மென்பொருள்களையும் வாங்க வேண்டும்.

இது கூடுதல் சுமை. இந்தத் தொல்லைகள் எதுவும் முந்தைய இயங்குதளங்களான விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 ஆகியவற்றில் பயனருக்கு எழவில்லை.டேப்ளட், ஸ்மார்ட்போன்கள்தான் எதிர்காலம் என்றாலும், அதில் பயன்படுத்துவதுபோல டெஸ்க்டாப் கணினியையும் பயன்படுத்தவேண்டும் என்றால் பயன்படுத்துபவர்கள் என்ன செய்வார்கள். இவ்வளவு பிரச்சனைகள் பயனருக்கு இருப்பதை ஏனோ மைக்ரோசாப்ட் கவனிக்கத் தவறிவிட்டது. இப்படி ஒவ்வொரு குறையாக சேர்ந்து மொத்தமாக விற்பனையில் விண்டோசை சரியவைத்துவிட்டது.இத்தொழிற்நுட்பத் தோல்வியை சரி செய்ய விண்டோஸ் 7 இயங்குதளத்தைப் போன்ற பயனர் இடைமுகத்துடன் கூடிய விண்டோஸ் 9 என்ற இயங்குதளத்தை மைக்ரோசாப்ட் உருவாக்கி வருவதாக வெளிவரும் சமீபத்திய செய்திகள், விண்டோஸ் 8ன் தோல்வியை உறுதி செய்யும் விதமாக உள்ளது.
. Related Posts with Thumbnails

தமிழர் எழுச்சி ஜூன் ௨௦௧௪ (2014) மாத மின் இதழ்

Related Posts with Thumbnails

தமிழர் எழுச்சி மே ௨௦௧௪ (2014) மாத மின் இதழ்

Related Posts with Thumbnails

தமிழர் எழுச்சி ஏப்ரல் ௨௦௧௪ (2014) மாத மின் இதழ்

Related Posts with Thumbnails

தமிழர் எழுச்சி மார்ச் ௨௦௧௪ (2014) மாத மின்இதழ்

Related Posts with Thumbnails

தமிழர் எழுச்சி பிப்ரவரி ௨௦௧௪ (2014) மாத மின்இதழ்

Related Posts with Thumbnails

தமிழர் எழுச்சி ஜனவரி ௨௦௧௪ (2014) மாதமின் இதழ்

Related Posts with Thumbnails

தமிழர் எழுச்சி டிசம்பர் ௨௦௧௩ (2013) மாத மின்இதழ்

Related Posts with Thumbnails

தமிழர் எழுச்சி நவம்பர் ௨௦௧௩ (2013) மாத மின் இதழ்

Related Posts with Thumbnails

வாட்ஸ்அப் அப்ளிகேஷனை ஏன் வாங்கியது ஃபேஸ்புக்

தொழில்நுட்ப உலகின் சமீபத்திய பரபரப்பாக பேசப்படுவது வாட்ஸ்அப் (whats up) மென்பொருளை ஃபேஸ்புக் 19 பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி) வாங்கியது பற்றித்தான்.

இத்துறையில் இவ்வளவு பெரிய தொகை கொடுத்து ஒரு நிறுவனம் வாங்கப்படுவது இதுவே முதல் முறை என்பதுதான் பலரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது. வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் அப்படி என்ன இருக்கிறது? ஃபேஸ்புக் ஏன் இவ்வளவு பெரிய தொகை கொடுத்து அதனை வாங்கவேண்டும்? என்ற கேள்விகளுக்கு முன்பாக அந்த மென்பொருளைப் பற்றி நாம் அறிந்து கொள்ளவேண்டும்.

வாட்ஸ் அப் என்பது ஆண்ட்ராய்ட், ஆப்பிள், பிளாக்பெர்ரி, விண்டோஸ், சிம்பியன் ஆகிய இயங்குதள ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப் படக்கூடிய ஒரு அப்ளிகேஷன் புரோகிராமாகும்.

இந்த அப்ளிகேஷன் நிறுவப்பட்ட எந்தவொரு ஸ்மார்ட் போனிலிருந்தும் மற்றொரு வாட்ஸ்அப் நிறுவப்பட்ட போனுக்கு (இணையவசதி இருக்க
வேண்டும்) குறுஞ்செய்திகள், படங்கள், வீடியோக்கள், குரல் பதிவுகள் ஆகிய
வற்றை பரிமாறிக் கொள்வது எளிதானதாகும்.

இதனை உருவாக்கியவர்கள் பிரைன் அக்டன் மற்றும் ஜேன் கோம். பிரைன் அக்டன் யாகூ நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக  பணியாற்
றியவர். வாட்ஸ்அப் முதன்முதலில் குறுஞ்செய்திகளுக்கு மாற்றாகவே உருவாக்கப்பட்டது. சாதாரணமாக தங்கள் நண்பர்களுக்குள் செய்தி பரிமாறிக்கொள்ள உருவாக்கப்பட்ட இந்த அப்ளிகேஷன் இன்று எந்த விளம்பரமும் இன்றி ஐந்தே ஆண்டுகளில் 45 கோடிக்கும் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படுவது ஆச்சரியப்படத்தக்கதாகும்.
அதற்குக் காரணம், குறுஞ்செய்தி அனுப்புவதில் இதன் எளிமையும் வேகமும்தான்.

ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றை விட  ஸ்மார்ட் போனில் வாட்ஸ் அப் பயன்படுத்த எளிதானதாக இருக்கிறது. அத்துடன் பகிரப்படும் செய்தி மற்றும் அனுப்புபவரின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதாகவும் இந்த அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டிருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் யார் வேண்டுமானாலும் போலியான பெயரில் கணக்குத் தொடங்கி செய்திகளை வெளியிட முடியும். ஆனால், வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் அவ்வாறு செய்வது எளிதல்ல. காரணம் உங்கள் தொடர்பில் உள்ள நண்பர்களின் மொபைல் எண்கள் அனைத்தும் உங்கள் ஃபோன்புக்கில் இருக்கும். ஃபேஸ்புக், கூகுள் பிளஸ், டிவிட்டர் போன்றவற்றில்  எண்ணற்ற நண்பர்கள் இருந்தாலும் அனைவருடனும் எப்போதும் தொடர்பில் இருக்க முடியாது. ஆனால், வாட்ஸ் அப் அப்ளிகேஷனின் குரூப் வசதி அனைவருடனும் தொடர்பில் இருக்கும் வசதியைத் தருகிறது.
அத்துடன் ஒருவர் வெளியிடும் செய்தியை மற்றொருவர் திருடி வெளியிடு
வது ஃபேஸ்புக் போன்ற வலைத்தளங்களில் எளிதில் நடைபெறக் கூடியது. வாட்ஸ் அப் பயன் படுத்துவோருக்கு அத்தகைய பிரச்சினை இல்லை.
ட்விட்டர் தளத்தில், வாட்ஸ் அப் வெளியிட்ட தகவலில், 24 மணி நேரத்தில், 2,700 கோடி செய்திகளும், 32 கோடியே 50 லட்சம் போட்டோக்களும் பரிமாறிக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வாட்ஸ் அப் அப்ளிகேஷனைத் தொடர்ந்து பயன்படுத்துவோர் எண்ணிக்கை 2 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இன்று வாட்ஸ்அப் போலவே வேறு சில அப்ளிகேஷன்களும் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை ஸ்கைப் (Skype), வைபர் (Viber), வீசேட் (wechat) ஆகியவையாகும்.

வேகமாக வளர்ந்துவரும் ஸ்மார்ட் போன் சந்தையில் வாட்ஸ் அப் போன்ற ஒரு மென்பொருளை உருவாக்கி வெளியிடுவதொன்றும் ஃபேஸ்புக்கிற்கு பெரிய காரியமல்ல. ஆனால், ஏற்கனவே 45 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும் வாட்ஸ் அப்பின் இடத்தை அடைய முடியமா என்பது சந்தேகம்தான்.

தொழிற் போட்டியில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வலுவான பல சிறு சிறு நிறுவனங்களை கேட்கும் விலை எத்தனையாயினும் கொடுத்து வாங்குவதென்பது முதலாளித்துவ சூழலில் நாம் பார்க்கக்கூடிய நிகழ்வுதான்.
ஆன்லைன் வீடியோ உரையாடலுக்கு புகழ்பெற்ற ஸ்கைப் மென்பொருள் நிறு
வனத்தை மைக்ரோசாப்ட் 40 ஆயிரம் கோடிக்கு ஏற்கெனவே விலைக்கு வாங்கியிருக்கிறது. அந்த வகையில், ஃபேஸ்புக் இதனை வாங்கியிருக்காவிட்டால் கூகுளோ அல்லது வேறு ஒரு நிறுவனமோ இன்றோ அல்லது இன்னும் சில மாதங்களிலோ இதை விட நல்ல விலைக்கு வாங்கிவிடும் என்பதுகூட மறுக்க முடியாத விஷயம்தான்.

இதில் வேடிக்கை என்னவென்றால் வாட்ஸ் அப் அப்ளிகேஷனை உருவாக்கிய பிரைன் அக்டன் மற்றும் ஜேன் கோம் ஆகிய இருவரும் ஒருகாலத்தில் ஃபேஸ்புக் நிறுவனத்தால் வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் என்பதுதான்.

வாட்ஸ்அப்-ஐ பயன்படுத்தவும் அதனைப் பற்றி அறிந்து கொள்ளவும் www.whatsapp.com என்ற இணைய தளத்திற்கு செல்லவும்.

. Related Posts with Thumbnails

wibiya widget