scince லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
scince லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெப்ப அதிகரிப்பிற்கும், மழைப் பொழிவிற்கும் காரணம் சின்னப் பையனா? சின்னப் பெண்ணா?

பருவநிலை மாறுபாடுகளைக் பற்றிய கணிப்பு என்பது கடந்த இரண்டு மூன்று நூற்றாண்டு காலத்தில் பதிவான வெப்பம், மழை, குளிர், புயல் போன்ற இயற்கை நிகழ்வுகளின் தரவுகளை அலசி ஆராய்ந்து தீர்வுகளை சொல்லும் அறிவியல் முறையாகும். தீக்கதிர் அறிவியல் கதிரில் பேராசிரியர் ராஜூ எழுதிய கட்டுரை ஒன்று வெளிவந்திருந்தது. அதைப் படித்தபிறகு தற்போதைய பருவநிலை மாறுபாட்டு நிகழ்வுகள் குறித்த கணிப்பின் உண்மை வெளிப்படுகிறது.

உலகளவில் 1850ஆம் ஆண்டிலிருந்து பதியப்பட்ட வெப்பத்தை ஒப்பிட்டு, சென்ற ஆண்டு(2023) அதிக வெப்பமான ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆண்டின் சராசரி வெப்பம் 18ஆம் நூற்றாண்டு வெப்பத்தைவிட 1.4டிகிரி செல்சியசும் 19ஆம் நூற்றாண்டைவிட 1.18 டிகிரி அதிகமாகவும் இருந்ததாம். இது ஒரு ஆண்டில் மட்டும் காணப்பட்டதல்ல. 2014-2023 ஆண்டுகளே அதிக வெப்பமான 10 ஆண்டுகளாகும். இந்த அதிக வெப்பமானது *‘எல் நினோ’(El Niño)* எனப்படும் நிகழ்வினால் இன்னும் அதிகமாகியது. ‘சின்னப் பையன்’ என்று பொருள்படும் இந்நிகழ்வு கடல் வெப்பம், வளிமண்டல அழுத்தம் இரண்டின் கூட்டுக் கலவையாகும்.

இதற்கு எதிர்மறையாக *‘லா நினா’ (La Niña)* எனப்படும் (சின்னப் பெண்) குளிர் நிகழ்வும் நடைபெறும்.  புவிவெப்பம் அதிகமாவதற்கு இந்த நிகழ்வுகள் காரணமல்ல; ஆனால் இவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டு நடுப்பகுதி வரை எல் நினோ தொடர்ந்து நீடித்ததனால், இந்திய தீபகற்ப பகுதியில் பருவ மழை பலவீனமாகவும், வெப்பம் அதிகரித்தும் காணப்பட்டது. ஜூன் மாத மழையளவு நீண்ட கால சராசரியை விட 20 விழுக்காடு குறைவாக இருந்தது. இதுவும் அதி வெப்பத்திற்கு ஒரு காரணம். 

இரண்டு ஆண்டுகளாக நீடிக்கும் எல் நினோ, ஜூன் மாதத்தில் லா நினாவாக மாறும் என்று பருவநிலை அறிவியலாளர்கள் கணித்திருந்தனர். அந்தக் கணிப்பு சரியாகவே அமைந்துள்ளது. தற்போதைய மழைப் பொழிவிற்கும், குளிர்ந்த வானிலைக்கும் லா நினா எனப்படும் சின்னப்பெண்தான் காரணமாக இருக்கக்கூடும் என்பதைக் கண்கூடாகக் காண்கிறோம்.

Related Posts with Thumbnails

கைபேசிகள் தோற்றுவிக்கும் புதிய உடல் நலக் குறைபாடுகள்


இன்று மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாதனமாக மாறியிருப்பது கைபேசிகள். சாதாரண கைபேசி தொடங்கி, ஸ்மார்ட்போன், டேப்ளட் எனப்படும் விலையதிகக் கணினிப் பயன்பாட்டுச் சாதனங்கள் வரை அனைத்தும் சிறுவர், பெரியவர் என்ற வயது வித்தியாசம் இல்லாமல்  அனைவராலும் விரும்பிப் பயன்படுத்தப்படுகின்றன.
அறிவியல் தொழில்நுட்பம் வழங்கிய அற்புதக் கண்டுபிடிப்பு இக்கைபேசிகள். ஆனால், அதனை அதிகம் உபயோகிப்பதால் ஏற்படும் எண்ணற்ற பாதிப்புகள் குறித்த ஆராய்ச்சிகளும் ஒருபக்கம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
முன்பு வந்த கைபேசிகளை விட இன்றுள்ள கைபேசிகள் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்தவையாகவே உள்ளன. ஆனாலும், அதன் தீங்கு குறைந்திருக்கிறதே ஒழிய முற்றிலும் தடுக்கப்பட்டுவிட்டதாக கூறமுடியாது.
கைபேசியில் தொடர்ந்து 6 நிமிடத்திற்கு மேல் பேசினால் கேன்சர் வரும் வாய்ப்புகள் உண்டென்று ஒரு ஆராய்ச்சி சொல்கிறது. எனவே, தொடர்ந்து பேசுபவர்கள் இயர்போன்களைப் பயன்படுத்திப் பேசவேண்டும் என்றும், அப்போதுகூட கைபேசி உடலுக்கு அருகாமையில் இல்லாமல் தள்ளியிருக்கும்படியாக வைத்துக் கொள்ளவேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க, கைபேசி கோபுரங்கள் மூலமாக பரவும் கதிர்வீச்சின் அளவை குறைக்கவேண்டும் என்றும், அருகருகே கோபுரங்கள் இல்லாமல் குறிப்பிட்ட இடைவெளியில்தான் அமைக்க வேண்டும் எனவும், மருத்துவமனை மற்றும் பொதுமக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளில் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் தொலைத்தொடர்புத் துறை அறிவுறுத்தியிருக்கிறது. அதே நேரத்தில் கதிர்வீச்சினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது. அது குறித்த ஆராய்ச்சி முடிவுகள் தங்களிடம் இல்லையென்றும் அது கூறிவிட்டது.
இப்படிக் கதிர்வீச்சு குறித்து எந்த முடிவும் சரிவர எடுக்க முடியாத நிலையில் புதியதாக கைபேசிகளை நீண்ட நேரம் பயன்படுத்தினால் கண்பார்வை குறை
பாடு ஏற்படும் என்ற அதிர்ச்சித் தகவல் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது.
தில்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் கண் பரிசோத
னைக்கு வந்த ஜம்முவைச் சேர்ந்த 11 வயது சிறுவனைப் பரிசோதித்தபோது அவனுக்கு குறைந்த இடைவெளியில்  பாடப் புத்தகங்களைப் படிக்க முடிந்தது. ஆனால், தொலைவில் உள்ள பொருள்களை இனங்காண்பதில் குழப்பமும்,  கரும்பலகையில் எழுதியதைப் படிக்க முடியாத நிலையும் இருந்தது.
இத்தகைய நிலை ஏன் ஏற்படுகிறது என்று விசாரித்தபோது, அச்சிறுவன் கைபேசியில் தொடர்ந்து பல மணிநேரம் விளையாடிக் கொண்டிருப்பான் என்ற தகவலை அவனது பெற்றோர் தெரிவித்தனர்.
அச்சிறுவனை ஆராய்ந்த அம்மருத்துவமனையின் அனுபவமிக்க டாக்டர் ஹர்பன்ஸ் லால் கூறும்போது, சிறுவனின் பார்வை நிலை சரியாக இருக்கிறது. ஆனால், 7 வயது முதலே கணினி மற்றும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருவதாலும், தொடர்ந்து இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருப்பதும் கண் தசைகளை தளர்ச்சியடையச் செய்து விட்டது என்று கூறினார்.
இதுபோன்ற பாதிப்புகள் இன்று சிறு குழந்தைகளிடமும், இளைஞர்களிடமும் அதிகமாக தோன்றி வருவதாகவும், இதற்கு காரணம் அதிகமாக கைபேசி விளையாட்டுக்கள் விளையாடுவது, குறுஞ்செய்திகளை அனுப்புவது, படிப்பது, இணையப் பக்கங்களைப் பார்ப்பது என்று எண்ணற்ற வேலைகளை கை பேசியின் ஒளி உமிழும் சிறு திரைகளில் பார்ப்பதால்தான் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும், இத்தகு பாதிப்பு ஏற்படாமல் இருக்க கைபேசிகள், ஸ்மார்ட் போன்கள், டேப்ளட், கணினி ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது சற்று தள்ளி வைத்துப் பயன்படுத்தவேண்டும் என்றும், தொடர்ந்து திரையின் மீதே கவனம் செலுத்தாமல்  20 நிமிடங்களுக்கு ஒரு முறை பார்வையை நகர்த்தி 20 அடி தூரத்தில் உள்ள பொருட்களை 20 விநாடி நேரமாவது பார்ப்பதை பயிற்சியாகக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
அறிவியல் தந்த வரமாக கைபேசி இருந்தாலும் அதனால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வது நம் கையில்தான் உள்ளது.
. Related Posts with Thumbnails

கம்ப்யூட்டர் பிரிண்டரின் கதை

ன்று அனைத்து தொழில் வர்த்தக நிறுவனங்களிலும் கணினியுடன் பிரிண்டர்களும் இன்றியமையாத இடத்தைப் பிடித்துள்ளன.
அச்சிடப்பட்ட காகிதங்களில் கைகளால் எழுதி ரசீதுகள் வழங்கப்பட்ட காலம் மாறி உடனுக்குடன் கணினி மூலம் கணக்கிட்டு பிரிண்டரில் அச்சிட்டுக் கொடுப்பதாக மாறியிருக்கிறது. அதற்குக் காரணம் எல்லோரும் பயன்படுத்தும் படியாக குறைந்த விலையிலும்  பல்வேறு துறையினருக்கும் ஏற்ற வடிவங்களிலும் பிரிண்டர்கள் கிடைப்பதுதான்.

முதன் முதலில் கம்ப்யூட்டருக்கான பிரிண்டர்  உருவானது 1938ல். சார்லஸ் கார்ல்சன் என்பவர் இதனை உருவாக்கினார். இதுவே இன்றைய லேசர் பிரிண்டர்களுக்கு முன்னோடி.
அதன்பிறகு 1953இல் வேகமாக அச்சிடும் பிரிண்டரை ரேமிங்டன் ரேண்ட் என்ற நிறுவனம் உருவாக்கியது. 1964-ல் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற போது போட்டி முடிவுகளை அச்சிட்டு வழங்க டாட்மேட்
ரிக்ஸ் (Dotmatrix) வகைப் பிரிண்டர்கள் உருவாக்கப்பட்டன. இதனை  சீக்கோ (இப்போது எப்சன்) நிறுவனம் சந்தைப்படுத்தியது. அதன் பிறகு 1970இல் இம்பேக்ட் பிரிண்டரும், 1971இல் ஜெராக்ஸ் நிறுவனத்தால் மேம்படுத்
தப்பட்ட லேசர் பிரிண்டரும் (Lesar Printer)வெளியிடப்பட்டன.
"முதல் கணினியை உருவாக்கிய சார்லஸ் பாபேஜ்  (Charles Babbage)  தான் முதல் பிரிண்டரையும் உருவாக்கியிருக்க வேண்டியவர். அதற்கான தொழில்நுட்பம் அவரிடம் இருந்தும் அதைத் தயாரிப்பதற்கான பணம் இல்லாமல் அந்த முயற்சியை அவர் கைவிட்டு விட்டார்.

150 ஆண்டுகளுக்குப் பிறகு 1991இல் அவரது தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தொழில் நுட்ப வல்லுனர் குழு ஒன்று அந்தப் பிரிண்டரை வடிவமைத்தது. 2.5 டன் எடையும், 4 ஆயிரம் உதிரி பாகங்களையும் கொண்டு உருவாக்கப்பட்ட அப்பிரிண்டர் கணக்கீடுகளை கணக்கிட்டு சிறப்பாக அச்சிடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு டிப்ரன்ஸ் என்ஜின் 2 (Difference Engine No.2) என பெயர் சூட்டி லண்டன் அறிவியல் அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர்."
1976இல் இங்க் ஜெட்(Ink-Jet) என்ற திரவ மையைக் கொண்டு அச்சிட உதவும் பிரிண்டர்களும் சந்தைக்கு வந்தன. 1977ல் எப்சன் நிறுவனம் டெஸ்க்டாப் பிரிண்டர்களை  விற்பனைக்கு கொண்டு வந்தது.
தற்போது பிரிண்டர்கள் தயாரிப்பில் முக்கிய இடத்தை வகிப்பவை ஹாவ்லெட் பெக் கார்டு (hewlett packard), டிவிஎஸ் (TVS), கேனான் (Canan), சாம்சங் (Samsung), எப்சன் (Epson), லெக்ஸ்மார்க் (Lexmark) ஆகிய நிறுவனங்களாகும்.
இன்று தரத்துடனும், வேகத்துடனும் கூடிய பிரிண்டர்கள் வந்துவிட்டன. வண்ணத்தில் அச்சிட, காப்பியர், ஸ்கேனர், ஃபேக்ஸ், மற்றும் தாளின் இருபக்கமும் அச்சிட எனப் பல வசதிகளுடன் பிரிண்டர்கள் கிடைக்கின்றன. எங்கும் எடுத்துச் செல்லும் வகையிலான கையடக்க பிரிண்டர்களும் பயன்பாட்டில் உள்ளன.
, Related Posts with Thumbnails

ஆன்லைனில் ஒரு கணக்குப் புலி

நம்மிடம் உள்ள கால்குலேட்டர்கள் கூட்ட, கழிக்க, பெருக்க, வகுக்க, சதவீதம் காண என நாம் கொடுக்கும் எண்களைக் கொண்டு மட்டுமே கணக்கீடுகளைச் செய்யும்.

ஆனால் குறிப்பிட்ட தூரத்தை கிலோ மீட்டரிலிருந்து சென்டி மீட்டர், மீட்டர், அடி, மைல், கடல் மைல் எனப் பல்வேறு அளவுகளுக்கும் மாற்ற, சென்டி கிரேடில் உள்ள வெப்ப அளவை பாரன் ஹீட் அளவுக்கு மாற்ற, இடத்தின் நீள, அகலத்தை வைத்து பரப்பளவை கணக்கிட, அல்ஜீப்ரா, மெட்ரிக் கணக்கீடுகள், உடல் உயரம், பருமன், கலோரி கணக்கிடுதல், கட்டடக் கட்டுமானத் துறைக்கான கணக்கீடுகள் என 36 வகையான கணக்கீடுகளை இத்தளத்தில் மேற்கொள்ளமுடியும். அத்துடன் சில கணித விளையாட்டுக்களும் இடம்பெற்றுள்ளன. மாணவர்களுக்கு மட்டுமல்லாது அனைவருக்கும் பயனுள்ளது இத்தளம்.
தள முகவரி: http://easycalculation.com/ Related Posts with Thumbnails

பறவைகள் பலவிதம்

பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வோருக்கு மிகவும் பயனுள்ள தளங்கள் இவை. பல நூறுவிதமான பறவைகளைப் பற்றிய செய்திகள், படங்கள், அவை எழுப்பும் ஒலிகள் என அனைத்து செய்திகளையும் கொண்டிருக்கின்றன  இந்தத் தளங்கள்.


 
http://www.welovebirds.org/ 
 
 
Related Posts with Thumbnails

கணினியுகமும் கழுத்துவலியும்


கணினியில் தொடர்ந்து பணியாற்றுபவர்களுக்கு கழுத்து வலி மற்றும் பார்வைக் குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாக சமீபத்தில் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. கணினிகளால் நாளுக்கு நாள் ஏற்படும் பல்வேறு விதமான புதிய நோய்கள் குறித்த தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அப்படிப்பட்டதொரு தகவல்தான் சப்தர்ஜங் மருத்துவ மைய மருத்துவர்களின் புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இவ்வாய்வு சப்தர்ஜங் நகரைச் சேர்ந்த கணினித் துறை பணியாளர்கள் மத்தியில் எடுக்கப்பட்டது. இதன் முடிவின்படி 80 சதவீதம் பேர் கண்பார்வை மற்றும் கழுத்து வலி போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தனர்.
76.5 சதவீதம் பேர் கழுத்துவலியால் பாதிக்கப்பட்டிருந்தனர். சாதாரணமாக மனிதர்களின் கண்கள் சுமார் ஆறு மீட்டர் தொலைவிலுள்ள பொருட்களையே எளிதில் அடையாளம் காணும் தன்மை கொண்டது. ஆனால் கணினியை நாம் ஒரு சில அடி தூரத்திலிருந்தே பார்க்கிறோம். இதனால் கண் தசை நார்களுக்கு மிகுந்த வலியும், சோர்வும் ஏற்படுகிறது. மேலும் இவ்வாய்வின் மூலம் அதிகமாக கணினியை பயன்படுத்துபவர்களுக்கு கண்களில் நீர்வடிதல், கண் வலி, கண் உறுத்தல், சிவந்து போதல், கண் பார்வை மங்குதல், தலைவலி என்று பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக தெரிவிக்கிறது.
தொடர்ந்து அமர்ந்தபடியே வேலை செய்வதால் முதுகு மற்றும் தண்டுவட பாதிப்புகளும் அதைத் தொடர்ந்து கழுத்து வலியும் வருகிறது. இத்தகைய வலிகள் குறித்த ஆய்வின்படி கழுத்து வலியால் பாதிக்கப்பட்டவர்கள் 48.6 சதவீதமும், தோள்பட்டை வலியால் பாதிக்கப்பட்டவர்கள் 15.7 சதவீதமும், முதுகு வலியால் பாதிக்கப்பட்டவர்கள் 35.6 சதவீதமும், கை, விரல், மணிக்கட்டு பகுதிகளில் அயற்சியுடன் கூடிய வலியால் 23.1 சதவீதம் பேர் அவதிப்பட்டதாக தெரிவிக்கிறது. மேலும் கணினி அலுவலகங்களில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள் மூலமாக ஆராய்ந்ததில் கணினி பயன்படுத்துபவர்கள் சரியான தூரத்தில், உயரத்தில், சரியான நாற்காலியில் உட்காரததும் முதுகுவலி மற்றும் தலைவலிக்கு காரணம் என்று தெரியவந்தது.
அதேபோல அதிக நேரம் கணினியின் முன் அமர்வதால் ஒருவித மன இறுக்கத்திற்கு ஆளாவதும், அதிக ஒளி உமிழும் கணினித் திரைகள், கணினி திரைக்கு நேர் எதிர்திசையில் விளக்குகள் பொருத்தப்பட்டிருப்பது, நாற்காலிகள் நேராக, சீராக இல்லாமலிருப்பது, பயன்படுத்துவதற்கு கடினமான விசைகளைக் கொண்ட கீபோர்டுகள் ஆகியவையே கண், கை, கால் முதுகு மற்றும் கழுத்து வலிகளுக்கு காரணமாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தற்போது 18 லட்சத்திற்கும் அதிகமான கணினிகள் புழக்கத்தில் உள்ளன. சராசரியாக 1000 பேருக்கு 6 கணினி என்ற விகிதத்தில் தற்போது உள்ளது. எதிர்வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை மேலும் பல மடங்கு உயரும். அப்போது கணினி சார்ந்த பாதிப்புகளால் பல்லாயிரம் மக்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. எனவே, காற்றோட்டமான அறையில், தெளிவான, சரியான வெளிச்சம், அளவான ஒளியுடன், ஒரு அடி தூரத்தில் இருக்கும்படியான கணினித்திரையும், பயன்படுத்துவதற்கு எளிதான கீபோர்டு மற்றும் மௌஸ், முதுகுப்பகுதி ஒரே நேர்கோட்டில் இருக்கும்படியாக சாய்வதற்கு ஏற்ற நாற்காலியையும் பயன்படுத்த வேண்டும். அதே போல தொடர்ந்து கணினி முன்பாகவே அமர்ந்திருக்காமல் சற்றே ஓய்வெடுப்பதும், அடிக்கடி இமைகளை மூடித்திறப்பதும் நல்ல பலன் தரும் என்கின்றனர் மருத்துவர்கள். Related Posts with Thumbnails

மூளை வேணுமா மூளை...

அவனா... மூளை இருக்கான்னு கேட்டா எந்த சந்தையில் கிடைக்கும்னு கேக்குற ஆளாச்சே... என்ற வசனம் அனைவரின் காதுகளிலும் அடிக்கடி விழுவதாகும். உண்மையிலேயே சந்தைக்கு வந்துவிடும் போலிருக்கிறது. மனிதர்களுக்காக செயற்கை மூளையை இன்னும் பத்தாண்டுகளுக்குள்ளாக உருவாக்கிவிடுவோம் என ஆக்ஸ்போர்டு பல்கலை.யில் நடந்த கருத்தரங்கில் விஞ்ஞானி ஹென்றி மார்க்ரம் அறிவித்துள்ளார்.
குளோனிங் ஆடு, எருது என்று தொடங்கி செயற்கை இதயம், இரத்தம், நுரையீரல் என்று மனித பாகங்களுக்கு மாற்று கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ள விஞ்ஞானிகளுக்கு சவாலாக இருப்பது மனித மூளை மட்டுமே. காரணம் மனித மூளை தானே சிந்தித்து செயல்படக்கூடியது. சிக்கலான பல இணைப்புகளுடன் முழு உடலையும் நிர்வகிக்கும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நியுரான்களையும் கொண்டது. அத்தகைய ஒன்றை உருவாக்குவது இயற்கைக்கு முரணானதாகவும், அதே நேரத்தில் அப்படி ஒன்று உருவானால் தற்போதைய மனித இனத்திற்கு அதனால் ஏற்படும் நன்மை மற்றும் தீமைகள் குறித்த பரவலான பயமும் உலகளவில் இயற்கை ஆர்வலர்களிடமும், சாதாரண மக்களிடத்திலும் உள்ளது.
மனிதர்களுக்கான செயற்கை மூளையை உருவாக்குவது குறித்த ஆராய்ச்சிக்காக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஈபிஎப்எல் அமைப்பு 2005ஆம் ஆண்டில் ப்ளூ பிரெய்ன் திட்டம் என்ற பெயரில் துவக்கியது. இத்திட்டத்தின் தலைவராக மூளை நரம்பியல் துறை ஆராய்ச்சியாளர் டாக்டர் ஹென்றி மார்க்ரம் உள்ளார். இவர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக மழைக்காடுகளில் சுற்றி பல்வேறு மரங்களின் வளரும் தன்மை, அமைவிடம், வடிவமைப்பு, புறக்கட்டமைப்பு குறித்து பல்வேறு தகவல்கள் திரட்டியுள்ளார். அதனடிப்படையில் இவை அனைத்திற்கும் உள்ள பொதுவான தொடர்புகள் குறித்து ஒரு வரையறையை கண்டறிந்தார். அதனை அடிப்படையாகக் கொண்டு பல்லாயிரக்கணக்கான நியுரான்களின் செயல்பாடுகளை - ஒன்றுக்கொன்று மாறுபட்ட செயல்பாடுகளைக் கொண்டதாக - தனித்தன்மை வாய்ந்ததாக - பொதுவான மூளைச் செயல்பாடுகள் ஒன்றுக்கொன்று பகிர்ந்துகொள்ளக் கூடியதான கட்டமைப்புக் கொண்ட மென்பொருளை உருவாக்கும் முயற்சியில் இவர் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஏற்கனவே எலிகளுக்கான முழுமையான மூளையை உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை 21 முதல் 24 வரை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடந்த டெட் கருத்தரங்கில் உலகளா
விய விஞ்ஞானிகள் முன்னிலையில் விஞ்ஞானி ஹென்றி மார்க்ரம் தங்களது ஆராய்ச்சி குறித்து உரை நிகழ்த்தினார். அதில், உலக அளவில் இருநூறு கோடி மக்கள் மூளை சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எங்கள் ஆராய்ச்சி மூலமாக இன்னும் பத்தாண்டுகளில் கணினி மென்பொருள் உதவியுடன் செயற்கை மூளையை உருவாக்கித் தரமுடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
பல்லாயிரக்கணக்கான நியுரான்களைக் கொண்ட மூளைக்கு இணையான செயற்கை மூளையை தயாரிக்க ஒரு நியுரானுக்கு ஒரு லேப்டாப் கணினி என்ற அடிப்படையில் தனித்தனித் செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் பத்தாயிரம் லேப்டாப்புகளின் செயல்திறன் கொண்ட ஐபிஎம் நிறுவனத்தின் பத்தாயிரம் கணினி பிராசசர்களுடன் கூடிய ஜெனி என்ற சூப்பர் கம்ப்யூட்டரை பயன்படுத்தி வருகின்றனர்.
இதன் செயல்பாடு குறித்து மேலும் அவர் கூறுகையில் ஒரு மலரின் படத்தைக் காட்டும்போது நிறம், வடிவம் என்று பிரித்து தன்னுடைய மின்னணு தகவல் கட்டமைப்பிலிருந்து தரம்பிரித்து சரிபார்த்து அதனை மலர் என்று கூறும். அதற்கேற்றவகையில் சுய திறனுடன் கூடிய தகவல்களை வெளியிடும் வகையில் மென்பொருளை உருவாக்கி வருகிறோம். தற்போது பல்வேறு பாலூட்டிகள் மற்றும் விலங்குகளுக்கான மாடல் மென்பொருள்களை உரு
வாக்கியும், பரிசோதித்தும் வருகிறோம் என்றார். Related Posts with Thumbnails

இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான்


நம்முடைய சொந்த தயாரிப்பு மென்பொருள்கள், படங்கள், எம்பி3 கோப்புகள் போன்றவற்றை இணையத்தில் பகிர்ந்துகொள்ள இடமளிக்கும் பல டவுன்லோட் சர்வர்களை நாம் பயன்படுத்துகிறோம். நம்முடைய கோப்புகளை பொதுவாக ஒரு சர்வரில் வைப்பதைவிட இரண்டு மூன்று சர்வரில் போட்டுவைத்தால் தேவலை என்று எண்ணுவோம். ஆனால் நமக்கு இணைய வேகமும் நேரமும் ஒத்துழைப்பதில்லை. அதேபோல இவற்றில் பணம் செலுத்தி உறுப்பினரானால் மட்டுமே அடுத்தடுத்த கோப்புகளையோ, ஒரே நேரத்தில் பல கோப்புகளையோ டவுன்லோட் செய்யமுடியும். இலவசம் என்றால் சிறிது நேரம் காத்திருக்கவேண்டும். அப்படியில்லாமல் ஒரே கோப்பு பல சர்வர்களில் இருந்தால் ஒரே சமயத்தில் நமக்கு சாதகமான சர்வரில் டவுன்லோடு செய்துகொள்ளமுடியுமே என்று பலரும் எதிர்பார்க்கிறோம். இதற்கென்று ஒரு இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் அப்லோடு செய்ய விரும்பும் பைல் அல்லது ஏற்கனவே உள்ள பகிர்ந்துகொள்ளப்பட்ட இணையதளத்தின் முகவரியை கொடுத்தால் போதும். தானாகவே ஒரே சமயத்தில் ரேப்பிட்சேர்
, டெபாசிட் பைல், சென்ட்ஸ்பேஸ் (Send Space), மெகா அப்லோட் (Mega Upload), ஈஸிசேர்(, பைல் பேக்டரி (File Factory), நெட்லோட் (Net Load) மீடியா பைர் (Media Fire), மெகா சேர் (Mega Share), ஜிப்பி சேர் (Zippi Share), டூ சேர்டு (Twoshared), இசட் சேர் (ZShare), பிளை அப்லோட் போன்ற பல்வேறு தளங்களில் உங்களுக்கு வேண்டிய 7 தளங்களை மட்டும் தேர்வு செய்தபின் உங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுத்துவிட்டு பைலை அப்லோட் செய்துகொள்ளலாம். டவுன்லோட் லிங்க்கை உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைத்துவிடும்.
இந்த புதிய சேவையை இந்த முகவரியிலிருந்து பெறலாம்.
http://mirrorcreator.com/index.php Related Posts with Thumbnails

நவீன பேனாக் கத்தி


இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியில் பல பழைய பொருட்கள் வழக்கொழிந்து வருகின்றன. சில மட்டுமே நவீன மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து புதிய மாற்றங்களைத் தாங்கி வெளிவருவதும், அதனால் சந்தை வாய்ப்பை தக்கவைத்துக் கொள்வதும் நிகழ்வு. அத்தகைய வரிசையில் புதியதாக மாற்றம் பெற்றிருப்பது, பலரது அன்றாட பயன்பாட்டில் இருக்கும் பேனாக் கத்தி.
இதில் செய்யப்பட்டிருக்கும் புதிய வசதி 32 ஜிபி அளவு நினைவகத்துடன் கூடிய யுஎஸ்பி பிளாஸ் டிரைவ் (கையடக்க தகவல் சேமிப்பகம்), புளூடூத் தொழில்நுட்பம் மற்றும் லேசர் ஸ்கேனர் ஆகியவையும் வழக்கமான கத்திகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் பிளார் டிரைவில் சேகரிக்கப்படும் தகவல்கள் பாதுகாக்க பயனரின் கைரேகையை சோதித்து அனுமதிக்கும் வசதியும் உள்ளது. இக்கத்தி கடந்த வாரம் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த மின்னணு நுகர்வோர் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை சுமார் 250 யூரோக்கள் இருக்கும் என தெரிகிறது.
பேனாக் கத்தியை முதன்முதலில் உருவாக்கிய விக்டோரிநாக்ஸ் நிறுவனமே இதனையும் வெளியிட்டிருக்கிறது. 1884ல் கார்ல் எல்ஸ்னர் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்நிறுவனம் அவரது பேரன் சார்லஸ் எல்ஸ்னரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஆண்டுக்கு 13 மில்லியன் கருவிகளை தயாரித்துவரும் விக்டோரிநாக்ஸ், இதில் பெரும்பாலானவற்றை சுவிட்சர்லாந்து ராணுவப் பயன்பாட்டிற்கே விற்பனை செய்துவிடுகிறது. Related Posts with Thumbnails

பிரிட்டனும் நிலவுக்கு விண்கலம் அனுப்புகிறது


இந்தியாவின் சந்திரயான் விண்கலத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரிட்டனும் நிலவுக்கு விண்கலம் அனுப்ப திட்டமிட்டுள்ளது. 2012 லிருந்து 2014 காலகட்டத்தில் செயல்படுத்தப்படவிருக்கும் இத்திட்டத்திற்கான வரைபடங்கள், ஆகும் செலவு பற்றிய திட்ட அறிக்கையை பிரிட்டன் விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் தற்போது தயாரித்து வருகின்றனர். இது முழுமையடைந்தவுடன் முறைப்படியான அறிவிப்பை பிரிட்டனின் அறிவியல் துறை அமைச்சர் லார்டு டிராய்சன் டிசம்பர் மாதத்தில் வெளியிட உள்ளார்.
இத்திட்டத்திற்கு அனுப்பப்படும் விண்கலத்திற்கு மூன்லைட் என்று பெயரிடப்பட்டுள்ளது. இவ்விண்கலம் பூமியைப் போன்று நிலவில் ஏற்படும் நிலவதிர்வுகள், பூகம்பங்கள், நிலவின் மலைகளில் ஏற்படும் அதிர்வுகள் குறித்தும் பிரதானமாக ஆராயும். இதற்கென நான்கு ஆய்வுக் கருவிகள் நிலவின் நான்கு வெவ்வேறு பகுதிகளில் நிலைநிறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் கிடைக்கும் தகவல்கள் பூமியின் பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்றையும், புவியதிர்வுகளுக்கும் நிலவுக்குமான தொடர்பு குறித்துமான ஆய்வுகளுக்கும் பெரிதும் துணை புரியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். Related Posts with Thumbnails

யுஎஸ்பி 3.0

தற்போது புழக்கத்திலுள்ள பல்வேறு தொழில்நுட்ப சாதனங்களை கணினியுடன் இணைக்க பன்னாட்டளவில் உள்ள கணினி வன்பொருள் உற்பத்தி நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியது யுஎஸ்பி தொழில்நுட்பம். இதை இணைப்பாக கொண்ட சாதனங்களை கணினியில் பொருத்தும்போது நாம் கணினியை அணைத்து இயக்க (ரீபூட்) வேண்டியதில்லை. இணைத்தவுடன் செயல்படத் தொடங்கிவிடுவது இதன் சிறப்பம்சமாகும். 1996ல் கண்டுபிடிக்கப்பட்டது இத்தொழில்நுட்பம். யுஎஸ்பி 1.1, 2.0 போன்ற போர்ட் / பிளக்கின் மேம்படுத்தப்பட்ட தயாரிப்பாக கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது யுஎஸ்பி 3.0. இதனை அறிமுகப்படுத்திய யுஎஸ்பி-ஐஎப் (யுஎஸ்பி சாதனங்களுக்கான பன்னாட்டு ஒருங்கிணைப்புக் குழுமம்) யுஎஸ்பி 2.0வை விட 3.0வானது பத்து மடங்கு வேகமாக தகவல்களை கடத்தும் திறன்பெற்றது என்று தெரிவித்துள்ளது. முன்பு வெளிவந்த யுஎஸ்பி 1.1, 25 ஜிபி அளவுள்ள டேட்டாவை கடத்த 9.3 மணிநேரத்தையும், யுஎஸ்பி 2.0வானது 13.9 நிமிடத்தையும் எடுத்துக்கொள்ளும். ஆனால் யுஎஸ்பி 3.0வானது எடுத்துக்கொள்ளும் நேரம் 70 வினாடிகள் மட்டுமே. இது இன்றைய கணினி உலகின் வேகத்தை மேலும் அதிகப்படுத்த பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Posts with Thumbnails

மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தும் சர்பேஸ் கணினி


மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது வழக்கத்தில் உள்ள கணினியை போலல்லாமல் முற்றிலும் மாறுபட்ட வணிக ரீதியிலான சர்பேஸ் என்ற பெயரில் புதிய கணினியை அறிமுகப்படுத்தவிருக்கிறது. இதில் தற்போதைய கணினிகளில் பயன்படுத்தப்படும் கீபோர்டு, மௌஸ் போன்றவை தேவைப்படாது. அதற்குப்பதிலாக 30 இன்ச் அகலமான அதன் திரையிலேயே நம்முடைய கட்டளைகளை தொடுவதன் மூலமாகவும், நம்முடைய அங்க அசைவுகளின் மூலமும் செயல்படுத்தமுடியும். தற்போதிருக்கும் தொடுதிரை கணினிகளில் ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே பயன்படுத்தமுடியும். ஆனால் சர்பேஸ் கணினியை பல நபர்கள் ஒரே நேரத்தில் தொட்டுப் பயன்படுத்தமுடியும். நம்முடைய அங்க அசைவுகளை அறிந்து செயலாற்ற கேமராவும், கணினியை தொடுவது விரலா அல்லது பென்சிலா என்பதை பிரித்தரியக்கூடிய லென்ஸ் ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இன்பிராரெட் கதிர் தொழில்நுட்பமும் இருப்பதால் நம்முடைய கைகள் மேஜைக்கு கீழிருந்தாலும் அசைவுகளை அறிந்து செயலாற்றும் திறன் கொண்டது. அதேபோல இக்கணினியை மேஜை மீது மட்டுமல்ல வீட்டுச் சுவர், கதவுகள் என்று நாம் விரும்பும் எந்த இடத்திலும் எளிதில் பொருத்திக்கொள்ளமுடியும். இக்கணினியின் சிறப்புகளை அறிந்து தற்போது சோதனை அடிப்படையில் தயாரிக்கப்பட்டுவரும் இக்கணினிக்கு அமெரிக்காவில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவுவதாக மைக்ரோசாப்ட் தெரிவிக்கிறது. தற்போது அமெரிக்காவின் பிரபல ஏ.டி.அண்ட் டி., ஹராஹ் என்டர்டெயின்மென்ட், ஸ்டார்பூட் ஹோட்டல்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ், டி மொபைல் போன்ற நிறுவனங்கள் இக்கணினிக்காக முன்பதிவு செய்து காத்திருக்கின்றனவாம். அந்நிறுவங்களுக்கு சப்ளை செய்த பிறகு 3 முதல் 5 ஆண்டுகளில் சர்பேஸ் கணினியை சில்லறை வணிகத்திற்கு கொண்டுவர மைக்ரோசாப்ட் திட்டமிட்டுள்ளது.
Press : http://www.microsoft.com/presspass/presskits/surfacecomputing/default.mspx
Home Page: http://www.microsoft.com/surface/index.html Related Posts with Thumbnails

புதிய பிரௌசர் - கூகுள் குரோம் (google chrome)

இண்டெர்நெட் உலகில் தேடல், மெயில், ஆன்லைன் டாக்குமெண்ட், விளம்பரம், சேட்டிலைட் மேப்பிங் என்று பல துறைகளிலும் முன்னணி வகிக்கும் கூகுள் நிறுவனம் தனது அடுத்த படைப்பாக கூகுள் குரோம் என்ற இண்டெர்நெட் பிரவுசரை நேற்று அறிமுகப்படுத்தியது. இன்டர்நெட் பயன்பாட்டுக்கு மிகவும் முக்கியமானது, அடிப்படையானது பிரௌசர். இது தற்போது சோதனை பதிப்பாக (Beta) வெளியிடப்பட்டிருக்கிறது.
தற்போது பல வகையான பிரௌசர்கள் வலையுலகில் உலவிக் கொண்டுள்ளன. அதில் அதிகம் பிரபலமானது இன்டர்நெட் எக்ஸ்புளோரர்தான். ஆகஸ்ட் மாத சந்தை நிலவரப்படி இன்டர்நெட் பயன்பாட்டாளர்களில் 73 சதவீதம் பேர் இதைத்தான் பயன்படுத்துகின்றனர். இதுதவிர
பயர்பாக்ஸ் (19.73 சதவீதம் ), சஃபாரி (6.73 சதவீதம் ), ஒபேரா (0.74 சதவீதம் ) ஆகிய பிரவுசர்களும் புழக்கத்தில் உள்ளன. முன்பு இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் பங்கு 90 சதவீதமாக இருந்தது. ஆனால்
பயர்பாக்ஸ் வந்த பின்னர் எக்ஸ்புளோரரின் பங்கு குறைந்து விட்டது. இந்நிலையில் மைக்ரோசாப்ட்டுக்கு இன்னொரு அடியாக கூகுளும் பிரௌசர் உலகில் கால் எடுத்து வைக்கிறது. இந்த பிரௌசர் பல சிறப்புகளை உள்ளடக்கியதாக உள்ளது. தேடுதல், வீடியோ ஸ்ட்ரீமிங், இமேஜ் சர்ச், இமெயில் உள்ளிட்ட பல பயன்பாடுகளை தற்போது கூகுள் தன் பக்கம் வைத்துள்ளது. இந் நிலையில் தனது 'குரோம் பிரௌசர்' மூலம் இன்டர்நெட் பயன்பாட்டாளர்களை ஒட்டுமொத்தமாக தன் பக்கம் இழுக்க திட்டமிட்டுள்ளது கூகுள்.
இன்டர்நெட் உலகம், குரோம் 'பேட்டை' ஆகுமா, கூகுள் சவாலை எக்ஸ்புளோரரும், பயர்பாக்ஸும் சமாளிக்குமா என்பதை என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும். குரோம் பிரவுசர் உபயோகித்ததில் சாதாரணமாக தெரிந்த சில நல்ல விஷயங்கள்: தரவிறக்கம் எளிதில் ஆகிறது. தரவிறக்கம் செய்வதற்கு ஃபயர் பாக் போலவே தனி தரவிறக்க அமைப்பு. அட்ரஸ் பாரில் வலை முகவரி தட்டச்சு செய்யும் பொழுதே நாம் தேடும் வலைத்தளம் இதுவா எனும்படி (கூகிள் தேடல் டூல்பார் மாதிரி) குறிப்புகள் பட்டியலிடப்படுகின்றன. ஒரே சன்னலில் பல பக்கங்கள் திறக்கும் வழி (டேப் பிரௌசிங்) இதிலும் இருக்கிறது. வேகமாக வலைகள் திறக்கின்றன.
அப்புறம் சில குறைகளும் தெரிகின்றன. அதில் குறிப்பாக, தமிழ் இணைய பயன்பாட்டாளர்களுக்கு உதவும் இ-கலப்பையை இதில் உபயோகப்படுத்த முடிவதில்லை. பிரௌசர் வழி செயல்படும் மென்பொருள்கள் (அப்ளிக்கேஷன்கள்), குறிப்பாக ஜாவாவினால் இயங்கும் மென்பொருள்கள் செயல்படுவதில்லை. (உதாரணமாக ஆரக்கிள் இ-பிஸினஸ் சூட்). இன்னும் மற்ற குறைகள் இனிமேல்தான் கவனிக்கவேண்டும்.
குரோம் பிரவுசர் தற்போது சோதனை வெளியீடு என்பதால் இந்த குறைகள் முழுப்பதிப்பில் சரிசெய்யப்படலாம் என்று நம்பலாம்.
சரி... ஏன் இந்த பிரௌசரை கூகிள் அவசரம் அவசரமாக வெளியிட்டது தெரியுமா? புதிதாக வெளிவந்துள்ள மைக்ரோசாப்ட் இண்டர்னெட் எக்ஸ்புளோரர்-8 -ல் விளம்பரங்கள் ஆகியவற்றை வடிகட்ட (Filter) செய்யும் வசதி உள்ளது. இதனால் கூகிள் விளம்பரங்கள் (கூகுள் ஆட்சென்
ஸ்) பாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. அதன் காரணமாகவே இண்டர்நெட் எக்புளோரர் பயன்பாட்டை குறைக்கும் வகையில் தனது பிரவுசரை களத்தில் இறக்கியிருக்கிறது கூகுள் என்று வியாபார வட்டாரங்கள் கூறுகின்றன.
கூகுள் பிரவுசரை தரவிறக்கம் செய்ய:http://www.google.com/chrome
Related Posts with Thumbnails

wibiya widget