போலி மின்னஞ்சல்கள்

மின்னஞ்சலைப் பயன்படுத்தி நடைபெறும் முறைகேடுகள் வெளிநாடுகளில்தான் அதிகம் என்றிருந்த நிலை மாறி  இன்று இந்தியாவிலும் இதுபோன்ற மோசடிகள் அதிகரித்து வருகின்றன.
பரிசுக் குலுக்கலில் உங்கள் பெயருக்கு பரிசு விழுந்திருக்கிறது. பரிசை இந்தியாவிற்கு கொண்டு வர வங்கியில் பணம் செலுத்துங்கள் என்றும், உங்களுக்கு எங்கள் நிறுவனத்தில் வேலை கிடைத்திருக்கிறது அதில் சேர பணம் கட்ட வேண்டும் என்றும் பிரபல நிறுவனத்திலிருந்து அனுப்பியது போலவே போலியான மின்னஞ்சல் (Fake Mail) கடிதம் அனுப்புவது, உங்கள் வங்கிக் கணக்கில் பிழை உள்ளது, உங்கள் கணக்கு விபரங்களை மீண்டும் சமர்ப்பிக்கவும் என்று கூறி உங்கள் கணக்கு விபரங்களைத் திருடுவது எனப் பலவகை மோசடிகள் நடைபெறுகின்றன.
நம்முடைய மின்னஞ்சல் முகவரி இவர்களுக்கு எப்படிக் கிடைக்கிறது என்று ஆராய்ந்தால் அதற்குக் காரணம் பெரும்பாலும் நாமாகத்தான் இருப்போம். இணையதளங்களில் நுழையும்போது மின்னஞ்சல் முகவரிகளைக் கொடுப்பது, ஃபேஸ்புக், டிவிட்டர், ஆர்குட் போன்ற சமூக வலைத் தளங்களில் நம்மைப் பற்றிய விபரங்களைப் பலரும் பார்க்கும்படி வைப்பது ஆகியவற்றைக் குறிப்பாகச் சொல்லலாம்.
அதுமட்டுமல்லாமல் பிரபல நிறுவன மற்றும் அரசு  இணைய தளங்களிலிருந்தும்கூட தகவல்களைத் திருடுகின்றனர். சென்ற மாதத்தில் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் இணையதளத்திலிருந்து 13 லட்சம் மின்னஞ்சல் முகவரிகள் திருடப்பட்டன. அம்முகவரியினர் அனைவருக்கும் உங்களுக்கு ஆன்லைன் வேலை கிடைத்திருக்கிறது என்ற போலியான செய்தி அனுப்பப்பட்டது.
இதுபோன்று வரும் மின்னஞ்சல்களைக் கவனமாகப் படித்துப் பார்க்கவேண்டும். அது எந்த முகவரியிலிருந்து அனுப்பப்பட்டிருக்கிறது என்பதை Show Details என்ப‌தைக் கிளிக் செய்து பார்க்கவும். அம்முகவரி அந்த நிறுவனத்தின் உண்மையான முகவரியா என்பதை ஆராய்ந்து அதன்பிறகே பதிலளிக்கவேண்டும்.
இம்மின்னஞ்சல்களுடன் வரும் இணையதள இணைப்புகளைக் கிளிக் செய்து திறக்காமல், அந்த இணைப்பை காப்பி செய்து புதிய இணையப் பக்கத்தில் பேஸ்ட் செய்து திறக்கவும். கிளிக் செய்து திறந்தால் நமக்குக் காட்டுவது உண்மையான முகவரியாக இருந்தாலும் பின்னிணைப்பாக வேறொரு போலி இணையதளத்தின் முகவரி கொடுக்கப்பட்டிருக்கலாம். எனவே  கவனமாக இருக்கவேண்டும்.
எனவே தேவையற்ற தளங்களில் மின்னஞ்சல் முகவரியைப் பதிவதெற்
கென்று தனியாக வேறொரு மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தலாம். சமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட தகவல்களைப் பதிவதைத் தவிர்ப்பதும், எல்லோரும் பார்க்காத  வகையில் செக்யூரிட்டி செட்டிங்கை மாற்றியமைப்பதும் அவசியமாகும்.
. Related Posts with Thumbnails

0 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:

wibiya widget