மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தும் சர்பேஸ் கணினி


மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது வழக்கத்தில் உள்ள கணினியை போலல்லாமல் முற்றிலும் மாறுபட்ட வணிக ரீதியிலான சர்பேஸ் என்ற பெயரில் புதிய கணினியை அறிமுகப்படுத்தவிருக்கிறது. இதில் தற்போதைய கணினிகளில் பயன்படுத்தப்படும் கீபோர்டு, மௌஸ் போன்றவை தேவைப்படாது. அதற்குப்பதிலாக 30 இன்ச் அகலமான அதன் திரையிலேயே நம்முடைய கட்டளைகளை தொடுவதன் மூலமாகவும், நம்முடைய அங்க அசைவுகளின் மூலமும் செயல்படுத்தமுடியும். தற்போதிருக்கும் தொடுதிரை கணினிகளில் ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே பயன்படுத்தமுடியும். ஆனால் சர்பேஸ் கணினியை பல நபர்கள் ஒரே நேரத்தில் தொட்டுப் பயன்படுத்தமுடியும். நம்முடைய அங்க அசைவுகளை அறிந்து செயலாற்ற கேமராவும், கணினியை தொடுவது விரலா அல்லது பென்சிலா என்பதை பிரித்தரியக்கூடிய லென்ஸ் ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இன்பிராரெட் கதிர் தொழில்நுட்பமும் இருப்பதால் நம்முடைய கைகள் மேஜைக்கு கீழிருந்தாலும் அசைவுகளை அறிந்து செயலாற்றும் திறன் கொண்டது. அதேபோல இக்கணினியை மேஜை மீது மட்டுமல்ல வீட்டுச் சுவர், கதவுகள் என்று நாம் விரும்பும் எந்த இடத்திலும் எளிதில் பொருத்திக்கொள்ளமுடியும். இக்கணினியின் சிறப்புகளை அறிந்து தற்போது சோதனை அடிப்படையில் தயாரிக்கப்பட்டுவரும் இக்கணினிக்கு அமெரிக்காவில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவுவதாக மைக்ரோசாப்ட் தெரிவிக்கிறது. தற்போது அமெரிக்காவின் பிரபல ஏ.டி.அண்ட் டி., ஹராஹ் என்டர்டெயின்மென்ட், ஸ்டார்பூட் ஹோட்டல்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ், டி மொபைல் போன்ற நிறுவனங்கள் இக்கணினிக்காக முன்பதிவு செய்து காத்திருக்கின்றனவாம். அந்நிறுவங்களுக்கு சப்ளை செய்த பிறகு 3 முதல் 5 ஆண்டுகளில் சர்பேஸ் கணினியை சில்லறை வணிகத்திற்கு கொண்டுவர மைக்ரோசாப்ட் திட்டமிட்டுள்ளது.
Press : http://www.microsoft.com/presspass/presskits/surfacecomputing/default.mspx
Home Page: http://www.microsoft.com/surface/index.html Related Posts with Thumbnails

0 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:

wibiya widget