தேர்தல் நடைமுறைகள் - 01

  • நாடாளுமன்ற மக்களவை அல்லது சட்டப்பேரவைத் தேர்தலில் ஒருவர் போட் டியிட குறைந்தபட்ச வயது என்னவாக இருக்க வேண்டும்?
    வேட்புமனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள் ளப்படும் நாளன்று ஒருவருக்கு வயது குறைந்தது 25 ஆண்டுகளாக இருக்க வேண்டும்.
  • ஒரு தொகுதியிலும் வாக்காளராகப் பதிவாக செய்து கொள்ளாத ஒருவர் தேர் தலில் போட்டியிட முடியுமா?
    முடியாது. தேர்தலில் போட்டியிட நடைமுறையில் உள்ள வாக்காளர் பட்டியலில் வாக்காள ராகப் பதிவு செய்து கொண்டு இருக்க வேண்டும்.
  • ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் வாக்காளராக பதிவு செய்து கொண்டுள்ள ஒருவர் நாடாளுமன்றத் தேர் தலில் வேறொரு மாநிலத்தில் இருந்து போட்டியிட முடியுமா?
    முடியும். ஆனால், அஸாமின் தன்னாட்சி உரிமை பெற்ற மாவட்டங்கள், லட்சத் தீவுகள், சிக்கிம் ஆகிய தொகுதிகளிலிருந்து போட்டியிட முடியாது.
  • ஒருவர் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் ஷெட்யூல்டு வகுப்பு பிரிவைச் சேர்ந்தவராக இருந்தால், மற்றொரு மாநிலத்தில் ஷெட்யூல்டு வகுப்பினருக்காக ஒதுக் கப்பட்ட தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட முடியுமா?
    முடியும். ஒரு மாநிலத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந் தவராக இருப்பவர் மற்றொரு மாநிலத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு பழங்குடியினருக்காக ஒதுக் கப்பட்ட தொகுதியிலிருந்து போட்டியிடலாமா? முடியும். ஆனால் லட்சத்தீவுகள், அஸாமின் தன் னாட்சி உரிமைபெற்ற மாவட்டங்கள் அஸாமின் பழங்குடியினர் பகுதிகளில் போட்டியிட முடியாது.
  • ஒரு மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர், மற்றொரு மாநில சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து போட்டியிடலாமா? முடியாது. ஒரு மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர், மற்றொரு மாநில பழங்குடியின உறுப்பினர், அவர் வாக்காளராக உள்ள மாநில சட்டப்பேரவைக்கு பழங்குடியினத்தவருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியிலிருந்து போட்டியிடலாமா?
    முடியாது.
  • ஷெட்யூல்டு வகுப்பையோ அல்லது பழங்குடியினர் சமூகத்தையோ சேர்ந்தவராக உள்ள ஒருவர் பொதுத் தொகுதியிலிருந்து போட்டியிட முடியுமா?
    முடியும்.
  • ஏதோ ஒரு குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டு இரண்டு ஆண்டு கால சிறைத் தண்டனை பெற்றவர் தேர்தலில் போட்டியிட முடியுமா?
    முடியாது.
  • ஒருவேளை அந்த நபரின் மேல்முறையீடு பைசல் செய்யப்படாத நிலையில் அவர் ஜாமீனில் இருந்தால் தேர்தலில் போட்டியிட முடியுமா?
    முடியாது. ஒருவர் தண்டனை பெற்ற பிறகு ஜாமீனில் இருந் தாலும், அவரது மேல் முறையீடு பைசல் செய்யப் படாது இருந்தாலும் உச்சநீதி மன்றத்தின் முடிவுப்படி அவர் தேர்தலில் போட்டியிடத் தகுதி இல்லாதவர் ஆவார். ஆனால், அவர் தண்டனை நிறுத்திவைக் கப்பட்டு இருந்தால் அவர் போட்டியிட முடியும்.
  • ஒருவர் சிறையில் இருந்தால் தேர்தலில் வாக்களிக்க முடியுமா?
    முடியாது. இத்தகையவர்கள் சிறையில் இருந்தால் அவர்கள் எந்த தேர்தலிலும் வாக்களிக்க முடியாது. சிறைத்தண்டனை பெற்று சிறையில் இருந்தாலும் ஓரி டத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல் லப்படும்போது காவல்துறையின் சட்டப்பூர்வ காவ லில் இருந்தாலும் அவர் வாக்களிக்க முடியாது.
  • ஒருவர் ஏதாவது ஒரு சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில்
    வைக்கப்பட்டிருந்தால், தேர்தலில் வாக்களிக்க முடியுமா?
    முடியும். அவர் அஞ்சல் வாக்குச்சீட்டு மூலம் வாக்க ளிக்க முடியும்.
  • ஒவ்வொரு வேட்பாளரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு எவ்வளவு தொகை செலுத்த வேண்டும்?
    ரூ.10 ஆயிரம்.
  • நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஷெட்யூல்டு வகுப்பினர் அல்லது பழங்குடியினருக்கு இந்தப் பிணையத் தொகையில் ஏதேனும் சலுகை அளிக்கப்படுமா?
    ஆமாம், இந்தத் தொகை ரூ.5 ஆயிரம் ஆகும்.
  • சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்குச் செலுத்த வேண்டிய பிணையத் தொகை எவ்வளவு?
    ரூ. 5 ஆயிரம்.
  • சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் ஷெட் யூல்டு வகுப்பு அல்லது பழங்குடி இனத்தைச் சேர்ந் தவருக்கு பிணையத் தொகையில் சலுகை ஏதேனும் உண்டா?
    ஆம், இது ரூ.2500 ஆக இருக்கும்.
  • ஒருவர் ஷெட்யூல்டு வகுப்பையோ அல்லது பழங் குடி இனத்தவராகவோ இருந்து பொதுத் தொகுதி யிலிருந்து போட்டியிட்டால், நாடாளுமன்றத் தேர் தலுக்கு அல்லது சட்டப்பேரவைத் தேர்தலுக்கு செலுத்த வேண்டிய பிணையத் தொகை எவ்வளவு?
    நாடாளுமன்றத் தொகுதிக்கு இந்தத் தொகை ரூ.5000, சட்டப்பேரவைத் தொகுதிக்கு ரூ.2500.
  • எந்த வேட்பாளர் பிணையத் தொகையை இழக் கிறார்?
    ஒரு தொகுதியில் பதிவான செல்லத்தக்க வாக்கு களில் 6ல் ஒரு பங்கை பெறத் தவறும் வேட்பாளர் பிணையத் தொகை இழப்பார்.
  • அங்கீகரிக்கப்பட்ட தேசிய அல்லது மாநில கட்சியின் வேட்பாளராக இருப்பவரின் வேட்பு மனுவை எத்தனைபேர் முன் மொழிய வேண்டும்?
    ஒருவர்போதும்,
  • ஒருவர் சுயேட்சை வேட்பாளராகவோ அல்லது பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியைத் சேர்ந்தவராகவோ இருந்தால் வேட்புமனு வை எத்தனை பேர் முன்மொழிய வேண்டும்?
    பத்து பேர்.
  • நாடாளுமன்றத்திற்கோ சட்டப்பேரவைக்கோ ஒருவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு எத்தனைத் தொகுதியிலிருந்தும் போட்டியிட முடியுமா?
    முடியாது. பொதுத்தேர்தலில் நாடாளுமன்றத் திற்கோ அல்லது சட்டப்பேரவைக்கோ 2க்கும் மேற் பட்ட தொகுதியிலிருந்தும் போட்டியிட முடியாது.
  • அதே சமயத்தில் இந்த இரு அவைகளில் ஏதேனும் ஒன்றிற்கு நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கும் இதே கட்டுப்பாடு உண்டா?
    ஆமாம், தேர்தல் ஆணையம் ஒரே சமயத்தில் இடைத்தேர்தல்களை நடத்தினால், ஒரே அவைக்கு நடைபெறும் இடைத் தேர்தல்களில் இரண்டுக்கு மேற் பட்ட இடங்களில் ஒருவர் போட்டியிட முடியாது.
  • அதேசமயத்தில் இந்த இரு அவைகளில் ஏதேனும் ஒன்றிற்கு நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டி யிடுவதற்கும் இதே கட்டுப்பாடு உண்டா?
    ஆமாம், தேர்தல் ஆணையம் ஒரே சமயத்தில் இடைத் தேர்தல்களை நடத்தினால், ஒரே அவைக்கு நடைபெறும் இடைத்தேர்தல்களில் இரண்டுக்கு மேற்பட்ட இடங்களில் ஒருவர் போட்டியிட முடி யாது.
  • ஒரே தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட எத்தனை வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியும்?
    நான்கு.
  • தேர்தலுக்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு ஒருவர் ஊர்வல மாகச் செல்லலாமா?
    முடியாது. தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தைச் சுற்றி 100 மீட்டர் தொலைவிற்குள் வர அதிகபட்சமாக மூன்று வாகனங்கள்தான் அனுமதிக்கப்படும். அதைப் போன்றே வேட்பாளரையும் சேர்த்து அதிகாரியின் அலுவலகத்திற்குள் அதிகபட்சமாக 5 பேர் தான் அனுமதிக்கப்படுவார்கள்.
  • தேர்தல் அதிகாரி வேட்பு மனுக்களை பரி சீலனைக்கு எடுத்துக் கொள்ளும்போது எத்தனை பேர் அனுமதிக்கப்படுவார்கள்?
    வேட்பாளர், அவருடைய தேர்தல் பிரதிநிதி, மனுவை முன்மொழிபவர் மற்றும் ஒருவர் (அவர் வழக் குரைஞராக இருக்கலாம்) வேட்பாளரால் எழுத்து மூலம் அங்கீகரிக்கப்பட்டவர் - வேட்புமனு பரிசீலனையின்போது இருக்கலாம்.
  • ஒரு வேட்பாளரின் வேட்புமனு மீது ஆட்சேபம் எடுத்துரைக்கப்பட்டால், இந்த ஆட்சேபத்திற்குப் பதில் அளிக்க வேட்பாளர் கால அவகாசம் கோரி னால், தேர்தல் அதிகாரி அவகாசம் தர முடியுமா?
    முடியும். தேர்தல் அதிகாரி ஆட்சேபணை மீதான விசாரணையை அடுத்த நாள் வரைக்கோ அல்லது அதற்கு அடுத்த நாள் வரைக்குமோ ஒத்திவைக்கலாம். ஆனால் அந்த கால அவகாசம், அன்று முற்பகல் 11 மணி வரைதான் அளிக்கப்படும். வேட்புமனுக்களை விலக்கிக் கொள்ளுவதற்கான நாள் அன்று பிற்பகல் 3 மணிக்கு முன், தேர்தல் அதிகாரி விசாரணையை முடிக்க வேண்டும்.
Related Posts with Thumbnails

0 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:

wibiya widget