மொபைல் போன் கதிர்வீச்சு, பேட்டரி மற்றும் டேட்டா பேக்கப் பிரச்சனைகள்


லக அளவில் 83 சதவீதம் பேர் மொபைல் போன் பயன்படுத்துவதாக  கேஷ்ஜெனரேட்டர் என்று இணைய வழி தகவல் சேகரிப்பு புள்ளி விவரம் ஒன்று குறிப்பிடுகிறது. அந்த அளவிற்கு இன்று பெரும்பாலானவர்களின் தகவல் தொடர்பு சாதனமாகவும், கைகளுக்குள் உலகம் என்று சொல்லுமளவிற்கு அதன் பயன்பாடும் மாறியிருக்கிறது.
மொபைல் போன் பயன்படுத்தும் 10ல் 5 பேர் அதற்கு அடிமையாகவே மாறிவிடுகின்றனர் என்றும், மொபைல் வழியாக இணையத்தைப் பயன்படுத்துவோர் 44 சதவீதம் என்றும், குறுஞ்செய்தி அனுப்ப மற்றும் ஒளிப்படம் எடுக்க 74 சதவீதம் பேர் பயன்படுத்துவதாகவும் மேற்சொன்ன ஆய்வில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிக்சனரி, கால்குலேட்டர் தொடங்கி கணினி, தொலைக்காட்சி, டெலிகான்
பிரன்ஸ் என பல சாதனங்களின் வேலையையும் செய்யும் ஒரே பொருளாக மாறியிருக்கிறது.
கதிர்வீச்சு
இது ஆக்கப்பூர்வமான வளர்ச்சியாக இருந்தாலும் சில ஆபத்துகளும் உண்டு. முதலாவது கதிர் வீச்சு. மொபைல் போனிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு குறித்து சர்ச்சைகள் இருந்தாலும், கதிர்வீச்சு வெளியாவதை யாரும் மறுக்கவில்லை.
போன்களில் கதிர் வீச்சு அளவை எஸ்.ஏ.ஆர்.  (SAR - Specific Absorption Rate) என்று குறிப்பிடுகிறார்கள். இது வாட் பர் கேஜ் என்ற அளவில் அளக்கப்படுகிறது. இந்தியாவில் முன்பு ஐரோப்பிய தரநெறிமுறைப்படி 2W/Kg அளவுள்ள போன்கள் அனுமதிக்கப்பட்டன. தற்போது அமெரிக்க தரநெறிமுறைப்படி 1.6W/Kg  என்ற அளவு கடைபிடிக்கப்படுகிறது. இது குறித்த விபரம் போனின் உதவிப் புத்தகத்திலும், லேபிளிலும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இது குறித்த ஆராய்ச்சிகள் நடந்து வந்தாலும் நாம் மொபைல் போனை காதுகளில் ஒட்டிவைத்துப் பேசாமல் தள்ளி வைத்தே பேசவேண்டும் அல்லது அதற்கென உள்ள இயர்போன்களைப் பயன்படுத்தலாம். எப்படியாயினும் அதிக நேரம் தொடர்ந்து பேசுவது காதுகளையும், மூளையையும் பாதிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கர்ப்பிணிப் பெண்களும், குழந்தைகளும்  மொபைல் போனை அதிகமாக பயன்படுத்துவது தவிர்க்கப்படவேண்டும்.
பொதுவாக சிக்னல் கிடைக்காத பகுதிகளில் இருக்கும்போது கதிர்வீச்சு அதிகமாக வெளியாவதாகக் கூறப்படுகிறது.
பேட்டரி
மொபைல் போனுக்கு ஆதாரமாக இருப்பது அதற்கு மின் சக்தி வழங்கும் பேட்டரியாகும். இன்று 1000ஆஹா அளவு மின்சக்தி தரும் பேட்டரிகளே சிறந்ததாகக் கூறப்படுகிறது.
பேட்டரியை முறையாக சார்ஜ் செய்து முக்கியம். முதன் முதலாக மொபைல் வாங்கியவுடன் குறைந்தது 8 மணி நேரமாவது சார்ஜ் செய்யவேண்டும். அதன் பிறகு சார்ஜ் தீரும் நிலை ஏற்பட்டால் மட்டுமே சார்ஜ் செய்யவும். அதுவும் முழுமையாக செய்யவேண்டும்.
அதேபோல சார்ஜ் ஏற்றப்படுவது முழுமையடைந்ததும் மின் இணைப்பைத் துண்டிக்காமல் இருப்பதும் பேட்டரியை செயலிழக்கச் செய்யும். எனவே சார்ஜ் செய்யும் நேரத்தை சரியாக கணக்கிட்டு அழைப்புகள் வராத நேரமாகப் பார்த்து தேர்ந்தெடுக்கவும். இந்த முறையைத் தொடர்ந்து பின்பற்றினால் பேட்டரியின் ஆயுள் நீடித்திருக்கும்.
பேட்டரி தொடர்ந்து அதிக நேரம் தாக்குப்பிடிக்க வேண்டுமென்றால் ரிங்டோனாக முழுமையான பாடலைப் பயன்படுத்தாமல் மொபைல் நிறுவனம் தரும் ரிங்டோனை செட் செய்வது நல்லது அல்லது சிறிய அளவாக துண்டிக்கப்பட்ட எம்பி3 கோப்புகளைப் பயன்படுத்தலாம். வால்பேப்பர் அனிமேஷன் படமாக இல்லாமல் திரை அளவிற்கு இணையான அளவுப் படத்தை உபயோகிக்கவும். ப்ளுடூத், ஒய்ஃபீ வசதிகள் இருந்தால் பயன்படுத்தாத நேரத்தில் அவற்றை அணைத்து வைக்கவும்.
போன் பேக்கப்
உங்க அப்பா போன் நெம்பர் என்ன? என்று ஒருவர் கேட்டால் உடனே போனில் தேடிப் பார்த்து சொல்வது வாடிக்கையாகி இருக்கிறது. தாய், கணவன், மனைவி, மகன், மகள் என்று குடும்ப உறவுகளைத் தொடர்பு கொள்ள முக்கியமான எண்களை நினைவில் வைத்துக் கொள்ளாமல்தான் பலபேர் இருக்கிறோம்.
இத்தகைய சூழலில் உங்கள் மொபைல் போன் காணாமல் போனாலோ, சேதமடைந்தாலோ அதில் பதிந்து வைத்திருக்கும் அனைத்து தொடர்பு எண்களையும், முக்கியமான தேதிகள், தகவல்கள் என பலவற்றையும் இழக்க நேரிடும். எனவே முடிந்தவரை அவ்வப்போது உங்கள் சிம் கார்டு தகவல்களை மொபைல் போன், மெமரி கார்டு மற்றும் உங்களிடம் வேறு ஏதேனும் பயன்படுத்தாத சிம் கார்டுகள் இருந்தால் அதில் பேக்கப் செய்து வைத்துக் கொள்ளவும். இப்போது வரும் பெரும்பாலான போன்களில் இந்த வசதி இருக்கிறது. அதேபோல கணினி வைத்திருப்பவர்கள் இந்த பேக்கப்பை அதிலும் பதிந்து வைத்துக்கொள்ளவும். ஒருசில செல்போன் நிறுவனங்கள் பேக்கப் வசதியை தருகிறார்கள். ஆனால் அதற்கு மாதந்திரக் கட்டணம் செலுத்தவேண்டும். முடிந்தவரை முக்கியமான எண்களை குறிப்பாக எழுதி வைத்துக்கொள்வதே சிறந்தது. Related Posts with Thumbnails

1 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை! வாழ்த்துக்கள்!
பல நாட்கள் கழித்து பதிவுகளைப் படிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது...
பகிர்விற்கு நன்றி!
படிக்க! சிந்திக்க! :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"

wibiya widget