கணினிப் பராமரிப்பும் பாதுகாப்பும்

நம் வீட்டுக் கணினியானாலும் அலுவலகக் கணினியானாலும் பயன்
படுத்தும் முறையில் வேறுபாடு இருந்தாலும் பராமரிப்பு மற்றும் பாது
காப்பு முறை என்பது இரண்டிற்கும் பொதுவானதுதான்.
சீரான மின்சாரம்
கணினியை தூசி, வெப்பம் படாமல் சுத்தமான அறையில் வைத்தி
ருப்பது அவசியம். மின் இணைப்பு சரியான முறையில் இணைக்கப்பட்டிருக்கவேண்டும். இதற்கு ஸ்பைக் பஸ்டர் (Spike Buster) எனப்படும் மின்பகிர்வானைப் பயன்படுத்தலாம். கணினியில் ஷாக் அடிக்குமானால் அதற்கு முறையாக எர்த் (Earth) அமைக்கப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவும். இந்நிலையில் தொடர்ந்து   வைத்திருப்பது கணினிக்கு மட்டுமல்ல நமக்கும் ஆபத்தே. கணினிக்கான யுபிஎஸ் (UPS)-சில் மானிட்டர் மற்றும் சிபியு (CPU)-விற்கான  மின்சாரத்தை வழங்கும் அளவிற்கு மட்டுமே திறன் இருக்கும். கூடுதலாக பிரிண்டர், ஹோம் தியேட்டர் ஆகியவற்றை இணைப்பது பேட்டரியின் ஆயுளையும், மின் சேமிப்புத் திறனையும் குறைக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
வைரஸ் பரிசோதனை
கணினி விளையாட்டுக்கள் இலவசமாக கிடைக்கிறது என்று வாங்கியோ அல்லது இணையத்திலிருந்து பதிவிறக்கியோ பயன்படுத்தும்போது வைரஸ் ஸ்கேனர்களைக் கொண்டு பரிசோதிக்கவும். இதே நடைமுறையை வெளியிடங்களிலிருந்து வாங்கிப் பயன்படுத்தும் பென் டிரைவ், சிடி, மெமரி கார்டுகளுக்கும் கடைபிடிக்கவேண்டும்.
ஆண்ட்டி வைரஸ் மென்பொருள்களில் தற்போது எது சிறந்தது என்பதையும், கணினியின் வேகத்தை குறைக்காததாகவும் இருக்கக் கூடியதை கணினி வல்லுநரிடம் கலந்தாலோசித்து பதியவும். இலவசமாக கிடைப்பதை விட விலை கொடுத்து வாங்குவது கூடுதல் பாதுகாப்பைத் தரும்.  ஆண்ட்டி வைரஸ் தொகுப்பை எப்போதும் அப்டேட்டாக வைத்திருக்கவும். இணைய இணைப்பு இருந்தால் அதுவாகவே அப்டேட் செய்துகொள்ளும் அல்லது வாரத்திற்கு இருமுறையாவது நாம் அப்டேட் செய்யவேண்டும். அப்போதுதான் சிறப்பான செயல்பாடு இருக்கும். அதேபோல ஒரு கணினியில் ஒன்றிற்கும் மேற்பட்ட ஆண்ட்டி வைரஸ் மென்பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இது கணினியின் வேகத்தை குறைக்கும் அத்துடன் ஒன்றிற்கொன்று முரண்பட்டு கணினியின் செயல்பாட்டை முடக்கும் நிலைகூட ஏற்படலாம்.
கோப்பு சீரமைப்பு
நாம் பயன்படுத்தும் மென்பொருள்களால் உருவாக்கப்படும் தற்காலிக கோப்புகளையும், இணையத்தைப் பயன்படுத்தும்போது உருவாகும் தற்காலிக கோப்புகளையும் தினமும் அழித்திடவேண்டும். இதற்கு சிகிளீனர் (C Cleaner) போன்ற மென்பொருள்களைப் பயன்படுத்தலாம்.  இரண்டு மாதத்திற்கு ஒரு முறையேனும் கணினியை டீப்ராக்மென்டர் டூல் (Defragment)ஐ பயன்படுத்தி சிதறி இருக்கும் கோப்புகளை சீராக்க வேண்டும். இதனால் கணினி விரைவாக இயங்கும்.
கணினி இயங்கும்போது அதன் தட்ப வெப்பம் மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காற்றாடி சரியான  சுழற்சி வேகத்தில் சுழலாமல் இருந்தால் அக்காற்றாடியினை உடனடியாக மாற்ற வேண்டும்.
கணினியின் கோப்புகளை பயன்படுத்துவதில் தனி கவனம் செலுத்த
வேண்டும். ஒன்றிற்கும் மேற்பட்ட பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் ஹார்ட் டிஸ்க்கின் நினைவகத்தில்  சி டிரைவ் (C Drive) என்பது பொதுவாக மென்பொருள்களை பதிவதெற்கென்று ஒதுக்கப்படும் இடமாகும். இங்குதான் கணினியை இயக்கும் அனைத்து மென்பொருள் களும் பதியப்படும். அந்தப் பகுதியில் உங்களுடைய தனிப்பட்ட கோப்புகளை பதிவதைத் தவிர்க்கவும். அடுத்துள்ள டி (D), ஈ (E), எப் (F) என ஹார்ட் டிஸ்க் அளவிற்கு ஏற்ப இரண்டிற்கும் மேற்பட்ட அளவில் பிரிக்கப்பட்ட டிரைவ்களில் பதிவது நல்லது. இதனால் ஏதேனும் காரணத்தால் கணினி செயலிழக்க நேர்ந்தால் சி டிரைவை அழிக்கும் (Format) கட்டாயம் நேரலாம் அப்போது நம்முடைய கோப்புகள்  வேறு டிரைவ்களில் இருப்பதால் பாதுகாக்கப்படும்.
, Related Posts with Thumbnails

1 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:

கூடல் பாலா said...

நல்ல அறிவுரைகள் .

wibiya widget